Just In
- 12 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 42 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Movies Pandian stores 2: கல்யாண வைபோகத்தில் பங்கேற்ற பாண்டியன் குடும்பத்தினர்.. பதற்றத்தில் சரவணன்!
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவுக்கு போட்டியாக ரேஸ் கார் தயாரித்த பாகிஸ்தான் மாணவிகள்.. இனி இவங்கதான் நம்ம பசங்க க்ரஷ்..
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற பார்முலா ஸ்டூடண்ட் போட்டியில், முழுக்க முழுக்க பாகிஸ்தான் மாணவிகள் உருவாக்கிய ரேஸ் கார், இந்திய அணியுடன் போட்டியிட்டது.
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற பார்முலா ஸ்டூடண்ட் போட்டியில், முழுக்க முழுக்க பாகிஸ்தான் மாணவிகள் உருவாக்கிய ரேஸ் கார், இந்திய அணியுடன் போட்டியிட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில், பார்முலா ஸ்டூடண்ட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்காக, பார்முலா ஸ்டண்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
சிங்கிள் சீட்டர் ரேஸ் கார்களை மாணவ, மாணவிகள் சுயமாக உருவாக்கி, போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். ஆட்டோமொபைல் துறை சார்ந்த மாணவ, மாணவிகளின் திறன்களை வளர்ப்பதற்காகவே, பார்முலா ஸ்டூடண்ட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான பார்முலா ஸ்டூடண்ட் போட்டி, கடந்த ஜூலை 13ம் தேதி தொடங்கி நேற்று வரை (15ம் தேதி) நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி (NUST) மாணவிகளும் கலந்து கொண்டனர்.
பார்முலா ஸ்டூடண்ட் போட்டிக்காக, சிங்கிள் சீட்டர் ரேஸ் கார் ஒன்றை பாகிஸ்தான் மாணவிகள் தயார் செய்திருந்தனர். முழுக்க முழுக்க மாணவிகளால் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டின் முதல் ரேஸ் கார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டும் அல்லாமல் சர்வதேச அளவிலான ஒரு போட்டியில் பாகிஸ்தான் மாணவிகள் பங்கேற்றதும் இதுதான் முதல் முறை. பாகிஸ்தானில் இருந்து முழுக்க முழுக்க மாணவிகளே அடங்கிய குழு ஒன்று, பார்முலா ஸ்டூடண்ட் போட்டியில் பங்கேற்றதும் இதுதான் முதல் முறை.
பார்முலா ஸ்டூடண்ட் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் குழுவில் 15 பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவிற்கு Auj என பெயரிடப்பட்டிருந்தது. இந்த குழுவில் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் கூட இடம்பெறவில்லை என்பதும் கவனிக்கதக்க விஷயமாகும்.
எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்கள், இன்டஸ்ட்ரியர் டிசைனர்ஸ், பிஸ்னஸ் மேனேஜ்மெண்ட் துறையை சார்ந்த பெண்கள் மட்டுமே குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்களுக்கு அதிக அளவிலான ஸ்பான்சர்கள் கிடைத்தபோதும், நிதி பற்றாக்குறை ஏற்படவே செய்தது.
அப்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் அலுவலகம் தலையிட்டு, அவர்களுக்கு வேண்டிய நிதி உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. எனினும் பாகிஸ்தான் பெண்கள் தயாரித்த சிங்கிள் சீட்டர் ரேஸ் காரின், டெக்னிக்கல் விபரங்கள் வெளியாகவில்லை.
பார்முலா ஸ்டூடண்ட் போட்டியில், பாகிஸ்தான் நாட்டின் Auj குழுவிற்கு 'Spirit of FS' என்ற விருது வழங்கப்பட்டது. சிறப்புமிகுந்த பங்களிப்பிற்காக கிடைத்த விருதை பலத்த கைத்தட்டல்களுக்கு மத்தியில் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
மோட்டார் ஸ்போர்ட்களில் பெண்கள் பங்கேற்பது என்பதே பாராட்டுக்குரிய மற்றும் வரவேற்க கூடிய விஷயம்தான். அதுவும் பாகிஸ்தான் போன்ற மிகுந்த கட்டுப்பாடுகள் நிறைந்த நாட்டில் இருந்து புறப்பட்ட ஒரு குழு பார்முலா ஸ்டூண்ட் போட்டியில் பங்கேற்றது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான் பெண்களுக்கு மட்டும் அவர்கள் உத்வேகம் அளிக்கவில்லை. மோட்டார் ஸ்போர்ட்ஸ்களில் பங்கேற்க வேண்டும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்பந்தமாக தங்கள் கேரியரை வடிவமைத்து கொள்ள வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் உத்வேகம் அளித்துள்ளனர்.
இதே போட்டியில், இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியை (ஐஐடி) சேர்ந்த ஐஐடி பாம்பே ரேசிங் டீமும் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம் ஆகும். ஆனால் அவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்