ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் கிடையாது.. போலீசார் அதிரடி உத்தரவு
ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு போலீசார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவில், அசூர வேகத்தில் வந்த பேருந்து மோதியதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்காவில் தொடங்கிய போராட்டம், வங்கதேசம் முழுவதும் வெகு வேகமாக பரவியது.

கடந்த ஜூலை கடைசி மற்றும் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், தொடர்ச்சியாக 9 நாட்கள் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்தது. அப்போது ஆயிரக்கணக்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீஸ்காரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்தனர்.

அத்துடன் அமெரிக்க தூதரின் காரும் தாக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கதேசத்தில் சாலைகள் தரமற்று இருப்பதாகவும், இதனால் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

எனவே சாலை தரமாக அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும், போக்குவரத்து துறையில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.

மாணவர்களின் போராட்டமானது, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. எனவே போராட்டக்காரர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதுடன், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதன்பின் வங்கதேசத்தில், போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு, பெட்ரோல் விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து பெட்ரோல் பங்க்குகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என டாக்கா மெட்ரோபாலிட்டன் போலீஸ் கமிஷனர் அசத்ஸம்மன் மியா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவதும் கட்டாயம்.

வங்கதேச சாலைகளில் நடைபெறும் விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு சுமார் 12 ஆயிரம் பேர் பலியாகின்றனர். இதில், பெரும்பாலானோர் இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். ஹெல்மெட் அணியாததே உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவேதான் இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காருக்கு போட்டியாக சமீபத்தில் லான்ச் செய்யப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ காரின் ஆல்பம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராஸ்ஸோ, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களில் எது சிறந்தது? என்பதை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications