Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- News அதிகாலையே "திக்" பதிலடி.. ஈரான் மீது சரமாரியாக ஏவுகணை அட்டாக் செய்த இஸ்ரேல்.. உலகப்போர் வருது?
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
முகேஷ் அம்பானி கார் டிரைவருக்கு சம்பளம் லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுப்பதற்கான காரணம் என்ன?
முகேஷ் அம்பானியின் ஓட்டுனருக்கு அதிக சம்பளம் கொடுப்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.
ஆசியாவின் பெரும் பணக்காரர் அந்தஸ்தை பிடித்திருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் டிரைவருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
முகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டும் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பளம் என்பதை கேட்டதுமே, பல ஆண்டுகள் விழுந்து விழுந்து படித்து எஞ்சினியர், டாக்டர் பட்டம் பெற்றவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பேசாம, முகேஷ் அம்பானிக்கு டிரைவராக கூட போய்விடலாம் என்று பலர் காது பட சொன்னார்கள். ஆனால், முகேஷ் அம்பானியிடம் டிரைவராக வேலைக்கு சேர்வது, லேசுபட்ட காரியம் அல்ல. அதற்கு பல்வேறு கடினமான முறைகள் கையாளப்படுகின்றன.
முகேஷ் அம்பானியிடம் பல நூறு கார்கள் இருக்கின்றன. அதனை இயக்குவதற்கு தேவைப்படும் ஓட்டுனர்களை தனியார் நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த தனியார் நிறுவனம்தான் முகேஷ் அம்பானியின் கார் ஓட்டுனர்களை தேர்வு செய்வதையும், கட்டுப்படுத்துவதுமான பொறுப்பை ஏற்றிருக்கிறது.
கார் ஓட்டுனரின் பின்புலம், கார் ஓட்டுவதில் அனுபவம், விலை உயர்ந்த கார்களை இயக்குவதில் அனுபவம் உள்ளிட்டவற்றில் சிறந்த ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன் பிறகு நேர்முக தேர்வில் மொழிப்புலமை, கார் ஓட்டும் அனுபவம், கார் பழுது நீக்கும் அறிவு குறித்து ஆய்வு செய்யப்படும்.
அதில், தேர்வு செய்யப்படுபவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் கார்களை இயக்கும் முறை குறித்து ஆய்வு செய்யப்படுவர். பின்னர், அதில் சிறந்தவர்கள் அடையாளம் காணப்படும், அந்த ஓட்டுனருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
அதன் பின்னரே, ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டு, அவர்களது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணித்து ஆய்வு செய்யப்படும். இந்த தேர்வுகளை தாண்டி, பணியிலும் சிறப்பாக இருப்பவர்கள் அடையாளம் காணப்படும், முகேஷ் அம்பானிக்கு கார் ஓட்டும் பெறுவர். அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.
அதற்கு முன்பாக, முகேஷ் அம்பானி பயன்படுத்தும் குண்டு துளைக்காத கார்களில் விசேஷ தொழில்நுட்ப வசதிகள் ஏராளமாக உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அந்த கார் நிறுவனம் அளிக்கும் பயிற்சிகளில் தேர்வு பெற வேண்டும்.
அவசர சமயத்தில் காரை கையாள்வது, அதிவேகத்தில் பின்புறமாக காரை செலுத்தும் திறன், மனோதிடம் , உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும். அதுவும், வெளிநாட்டில் உள்ள கார் நிறுவனத்தின் விசேஷ பயிற்சி மையங்களில் செயல்முறை மற்றும் விளக்க முறை பயிற்சிகளில் வெற்றி பெற வேண்டும்.
அதன் பிறகு, நடைபெறும் தொடர் தேர்வுகளில் சிறந்த ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஓட்டுனர்களே பணிக்கு நியமிக்கப்படுவர். இதற்காக கடுமையான பல கட்ட சோதனைகளை தாண்ட வேண்டியிருக்கும்.
அதன் பிறகு, நடைபெறும் தொடர் தேர்வுகளில் சிறந்த ஓட்டுனர்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த ஓட்டுனர்களே பணிக்கு நியமிக்கப்படுவர். இதற்காக கடுமையான பல கட்ட சோதனைகளை தாண்ட வேண்டியிருக்கும்.
அதாவது, மிக கடினமான பயிற்சி முறைகளையும், மொழிப்புலமையையும் அவர்கள் பெற்றிருப்பது அவசியம். மேலும், ரூ.2.57 லட்சம் கோடி சொத்து மதிப்புடைய முகேஷ் அம்பானிக்கு ஒவ்வொரு நொடியும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றன.
அந்த அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வல்லமை அந்த ஓட்டுனர்களுக்கு இருத்தல் அவசியம். அம்பானிக்கு பணம் முக்கியமல்ல. நம்பகமான, திறமையான ஓட்டுனரே தேவை. எனவே, அவரது உயிருக்கு உத்தரவாதம் அளிப்பவருக்கு அவர் கொடுக்கும் சம்பளம் ஒரு பெரும் பொருட்டாக இருக்காது.
ஒவ்வொரு நொடியும் அச்சுறுத்தலான பணி என்பதை இங்கே வசதியாக நாம் மறந்துவிடக்கூடாது. உளவுத்துறை, அம்பானி வீட்டில் இயங்கும் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்டவர்களின் கண்காணிப்பில் எந்நேரமும் வாழ வேண்டிய சூழலையும் மனதில் வைத்தால், இந்த சம்பளம் ஒரு பொருட்டாக இருக்காது.
முகேஷ் அம்பானி பிஎம்டபிள்யூ குண்டு துளைக்காத சிறப்பு கொண்ட 7 சீரிஸ் காரை பயன்படுத்தி வருகிறார். இது போன்ற கார்களை இயக்குவதற்காக பிஎம்டபிள்யூ நிறுவனம் ஓட்டுனர்களுக்கு அளிக்கும் சிறப்பு பயிற்சி குறித்த சாம்பிள் வீடியோவை இங்கே காணலாம்.
முகேஷ் அம்பானி டிரைவர் சம்பளம் இவ்வுளவு அதிகம் கொடுக்கப்படுவதற்கான காரணமே, உங்களை வியக்க வைத்திருக்கும். ஆனால், அவரது மோட்டார் உலகம் பற்றிய ஒவ்வொரு செய்தியுமே பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. உலகிலேயே காஸ்ட்லியான வீடாக கருதப்படும் முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீட்டின் கார் கராஜ் குறித்த சுவாரஸ்யங்களை தொடர்ந்து பருகலாம்.
இரு ஆண்டுகளுக்கு முன் ஃபோர்ஸ் வர்த்தக பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலில், உலகின் மிகவும் ஆடம்பரமான வீடு என்று பெருமையுடன் முதலிடத்தை முகேஷ் அம்பானியின் அன்டிலியா பெற்றது. அதில், அம்பானி வீட்டு கராஜ் பற்றியும் குறிப்பு எடுக்கப்பட்டு மதிப்பீட்டு செய்யப்பட்டிருக்கிறது.
மும்பையிலுள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா வீடு 173.13 மீட்டர் உயரம் கொண்டது. மொத்தம் 27 தளங்களை கொண்டது. ஒவ்வொரு தளங்களும், சாதாராண வீட்டின் மூன்று தளங்களுக்கு ஒப்பான உயரம் கொண்டது. 4 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு இடவசதி கொண்டது. சாதாரண வீடாக இதனை கட்டியிருந்தால், 60 மாடிகள் கொண்டதாக இருந்திருக்கும். இந்த வீட்டின் மதிப்பு ரூ.6,400 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி ஒரு தீவிரமான கார் பிரியர். அவரிடம் நூற்றுக்கணக்கான இறக்குமதி கார்கள் இருக்கின்றன. இந்த நிலையில், அதில் பல கார்களை இந்த அன்டிலியா வீட்டிற்கு தன்னுடன் சேர்த்து குடி பெயர்த்துவிட்டார்.
அன்டிலியா வீட்டின் முதல் ஆறு தளங்களும் வாகனங்கள் நிறுத்துமிடமாகவே பயன்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் 168 கார்களை நிறுத்தி வைக்க முடியும்.
அன்டிலியா வீட்டின் ஏழாவது தளத்தில் கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் மையமாக செயல்படுகிறது. இதற்காக, பல அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகளும், பணியாளர்களும் 24 மணிநேரமும் ஷிஃப்ட் முறையில் பணியில் இருக்கின்றனர்.
முகேஷ் அம்பானியிடம் பல சொகுசு கார்கள் இருந்தாலும், அவர் பயன்படுத்தும் கார் மாடல் மேபக் 62 கார்தான். அதன் மதிப்பு ரூ.5 கோடியாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கடுத்து, சமீபத்தில் வாங்கப்பட்ட குண்டு துளைக்காத அம்சங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்.
மேபக் 62 தவிர்த்து, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் ஆகிய கார்களையும் அவ்வப்போது பயன்படுத்துகிறார். அவர் அடிக்கடி பயன்படுத்தும் கார்கள் அனைத்தும் ஒரே தளத்தில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
வீட்டின் மேல் தளத்தில் மூன்று ஹெலிபேடுகள் உள்ளன. மேலும், ஹெலிகாப்டர்களை இயக்குவதற்காக சொந்தமாக கட்டுப்பாட்டு மையமும் இங்கு செயல்படுகிறது.
முகேஷ் அம்பானியிடம் ஏர்பஸ் 319, ஃபால்கன் 900இஎக்ஸ் மற்றும் போயிங் பிசினஸ் ஜெட்2 ஆகிய மூன்று விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் முகேஷ் அம்பானிக்காக உட்புறத்தில் விசேஷமாக வடிவமைப்பு மற்றும் வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டவை.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் மிக பிரபலமான தனி நபர் பயன்பாட்டு விமானம்தான் ஃபால்கன் 900. இந்த விமானம் பல்வேறு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதில், நீண்ட தூரம் பறக்கும் திறன் கொண்ட மாடல் ஃபால்கன் 900 இஎக்ஸ் மாடல். அதிகபட்சமாக 8,340 கிமீ தூரம் வரை பறக்க முடியும். ஹனிவெல் பிரைமஸ் ஏவியானிக் கட்டுப்பாட்டு சிஸ்டம் கொண்டது.
உட்புறத்தில் சிறிய அளவிலான ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்ற வகையில், கட்டமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், தற்காலிக அலுவலகமாகவும் அவர் பயன்படுத்தும் விதத்தில் சிறப்பு வசதிகள் உள்ளன. மேலும், சேட்டிலைட் டிவி, வயர்லெஸ் தகவல் தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த விமானம் நட்சத்திர ஓட்டல்களுக்கு இணையான வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 78 பேர் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தை முகேஷ் அம்பானியின் தனி பயன்பாட்டுக்காக பல்வேறு வசதிகளுடன் மாற்றியிருக்கின்றனர்.
விமானத்தின் விலை மட்டும் 70 மில்லியன் டாலர்களாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இதன் உட்புற கட்டமைப்புக்கு கூடுதலாக 30 மில்லியன் டாலர்கள் வரை செலவழித்து, விசேஷமாக உள் கட்டமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆலோசனைக் கூட்டங்கள், அலுவலகப் பணிகள் செய்வதற்கு ஏதுவாகன வசதிகள் உள்ளன. அத்துடன், படுக்கை அறை வசதியும் உள்ளது. இந்த விமானத்தை ஒரு மணி நேரம் இயக்குவதற்கு 13,200 டாலர்கள் செலவழியும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
முகேஷ் அம்பானியிடம் 20 மில்லியன் டாலர் மதிப்புமிக்க ஆடம்பர படகு ஒன்றும் உள்ளது.
நீச்சல் குளம், ஹெலிபேட், ஜிம், மசாஜ் அறை, பொழுதுபோக்கு வசதிளை கொண்டது. மூன்றடுகளையும் இணைக்கும் விதத்தில், லிஃப்ட் வசதியும் உண்டு. 12 விருந்தினர்கள் தங்கும் வசதி கொண்ட இந்த ஆடம்பர படகில், 20 பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த ஆடம்பர படகின் மின்சார தேவையில் 30 சதவீத அளவுக்கு சோலார் மின்தகடுகள் மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!