சீனா, கொரியாவிற்கு போட்டியாக தமிழகத்தில் தயாரிக்கப்படும் லித்தியம் இயான் பேட்டரிகள்
தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான லித்தியம் இயான் பேட்டரி தயாரிக்கப்படுகிறது காரைக்குடியில் உருவாக்கப்பட்ட தொழிற்நுட்பத்தை கொண்டு இந்த பேட்டரிகள் தயாரிக்கப்படுகிறது.
தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான லித்தியம் இயான் பேட்டரி தயாரிக்கப்படுகிறது காரைக்குடியில் உருவாக்கப்பட்ட தொழிற்நுட்பத்தை கொண்டு இந்த பேட்டரிகள் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத்தை அதிகமாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்க தயங்க முக்கியமான காரணம் அதன் விலை தான்.

எலெக்ட்ரிக் வாகனங்களில் நீண்ட நாள் உழைப்பிற்காக லித்தியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்படுகிறது. இது இந்தியாவில் போதுமான அளவிற்கு தயாராவதில்லை, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

அவர்கள் அதிக லாபத்துடன் விற்பதால் இந்தியாவில் அதிக அளவிற்கு எலெக்ட்ரிக் கார்களின் விலையை பேட்டரிகளுக்கு தான் வழங்க வேண்டியது உள்ளது. இதை கட்டுப்படுத்த இந்தியாவில் லித்தியம் இயான் பேட்டரிகளை தயாரிக்க அரசு நடவிடிக்கை எடுத்து அதற்கான தொழிற்நுட்பத்தை தயாரிக்க அரசு உத்தரவிட்டது.

அதன் படி தமிழ்நாட்டில் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் எனப்படும் சென்டரல் எலெக்ட்ரோ ரிசர்ச் இன்ஸ்டியூட் இதற்கான தொழிற்நுட்பத்தை வெற்றிகரமான உருவாக்கியது. இதையடுத்து இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி லித்தியம் இயான் பேட்டரிகளை தயார் செய்து சந்தைபடுத்த பெங்களூரூவை சேர்ந்த ராசி சோலார் என்ற நிறுவனம்

இதையடுத்து சென்னை தரமணி பகுதியில் இந்த பேட்டரி தயாரிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு அதற்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் அந்த தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

இது குறித்து ராசி நிறுவனத்தின் சேர்மன் நரசிம்மன் கூறுகையில் : "லெட் ஆசிட் பேட்டரி ரூ 7000 க்கு விற்பனை செய்யலாம் ஆனால் அது 6 மாதங்கள் வரை தான் உழைக்கும். லித்தியம் இயான் பேட்டரிகள ரூ 30,000 வரை விற்பனை செய்யப்பட்டாலும் இது 8 ஆண்டுகள் வரை இது உழைக்கும். "

இந்நிறுவனம் ஏற்கனவே ரீநியூவபிள் எனர்ஜி துறையில் நல்ல அனுபவம் பெற்றுள்ளது. தற்போது ரீசார்ஜபிள் பேட்டரி தயாரிக்க களம் இறங்கியுள்ளது.

இது குறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்பரேட் விவகார துறை அதிகாரி தத்தா கூறுகையில் : "உள்நாட்டிலேயே பேட்டரிகள் உற்பத்தி செய்யப்படுவதால் அதன் விலை குறையும் இதனால் எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாக குறைய வாய்ப்புள்ளது. பேட்டரிகள் விலை குறைவதால் எலெக்ட்ரிக் காரின் விலையில் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. " என கூறினார்

தற்போது இந்தியாவில் லித்தியம் இயான் பேட்டரிகளை சீனா, கொரியா, அமெரிக்கா, மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- அட நீங்களுமா? அனல் பறக்கும் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்த பியாஜியோ நிறுவனத்தின் அறிவிப்பு..
- அரபு நாடுகளின் கொட்டத்தை அடக்க வரும் புதிய தொழிற்நுட்பம்; கிலியில் எண்ணெய் கிணறு முதலாளிகள்
- டாடா நெக்ஸானுக்கு போட்டியாக வரும் டட்சன் எஸயூவி கார்!!
- ஈரான் பெட்ரோல் விவகாரம்; அமெரிக்காவுக்கு எதிராக 56 இன்ச் மார்பை நிமிர்த்துகிறார் ஏழைத்தாயின் மகன்?
- அமெரிக்காவில் பிஎம்டபிள்யூ ஜி 310 பைக்குகளுக்கு ரீகால்... இந்திய மாடல்களில் பாதிப்பு இருக்குமா?


Click it and Unblock the Notifications








