சமையல் என்ணெய்யை பயோ டீசலாக மாற்றும் மெக்டோனால்ட்ஸ்; 4 லட்சம் மெட்ரிக் டன் மாசு கட்டுப்படுகிறது
மெக்டோனால்ட்ஸ் நிறுவனம் தன் நிறுவத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை பயோடீசலாக மாற்றி தங்களது வாகனத்திற்கு பயன்படுத்தி வருகிறனர். தற்போது மும்பையில் மட்டும் செயல்பட்டு வரும் இந்த திட்டம், இந்
மெக்டோனால்ட்ஸ் நிறுவனம் தன் நிறுவத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை பயோடீசலாக மாற்றி தங்களது வாகனத்திற்கு பயன்படுத்தி வருகிறனர். தற்போது மும்பையில் மட்டும் செயல்பட்டு வரும் இந்த திட்டம், இந்தியா முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை கீழே காணலாம்.

உலகில் மிகப்பெரிய செயின் ரெஸ்டாரென்ட்களை வைத்திருக்கும் நிறுவனம் மெக்டோனால்ட்ஸ் இந்நிறுவனம் இந்தியாவிலும் பல கிளைகளை துவங்கியுள்ளது. இந்நிறுவனம் தாங்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை மீண்டும் பயோ டீசலாக மாற்றி பயன்படுத்தி வருகிறது.

மெக்டோனால்ட்ஸ் நிறுவன் முதலில் சோதனை முயற்சியாக இந்த சில கிளைகளில் மட்டும் முயற்சித்தது. அந்த கிளைகளில் உணவு செய்யப்பயன்படுத்தப்படும் எண்ணெய்களை பயோ டீசலாக மாற்றி அந்நிறுவனத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தி வந்தது.

அந்த திட்டம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மும்பையில் உள்ள 85 விற்பனை மையங்களில் மாதந்தோறும் பயன்படுத்தப்படும் சுமார் 35 ஆயிரம் லிட்டர் எண்ணெய்களை எரிபொருளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதன் படி இந்நிறுவனம் ஆண்டிற்கு 4,20,000 லிட்டர் டீசலை மிச்சப்படுத்துகிறது.

விற்பனை மையங்களில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்களை ஒரு குழு இணைந்து அதை பயோ டீசலாக மாற்றம் மையத்திற்கு எடுத்து செல்லப்படும். அங்கு எடுத்து வரப்பட்ட ஆயில்களில் பயோடீசலாக மாற்ற தகுதியுடைய ஆயில்கள் பிரித்து எடுக்கப்படும். அவை அனைத்தும் சில கெமிக்கல்கள் கலக்கப்பட்டு சில ரியாக்ஷன்களுக்குள் ஆட்படுத்தப்பட்டு பயோ டீசல் தயாராகிறது.

மீண்டும் அந்த பயோடீசல் அந்நிறுவனம் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த சமையல் எண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோடீசல் என்பது சாதாரண டீசலை விட 75 சதவீதம் குறைவான புகையை உமிழும்.

இதன் மூலம் காற்று மாசுபடுவதோடு மட்டும் அல்லாமல் அந்த எண்ணெயால் ஏற்படும் மற்ற மாசுகளும் குறைகிறது. தற்போது மும்பையில் உள்ள 85 இடங்களில் அந்நிறுவனத்திற்காக உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெயே பயன்படுத்தப்படுகிறது.

இன்னும் 4 ஆண்டுகளில் இதை 450-500 உணவு உற்பத்தி மையங்களில் செயல்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 15 லட்சம் லிட்டர் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்கள் பயோ டீசலாக மாற்றப்படும என்றும்.

இதனால் உருவாகவுள்ள 4 ஆயிரம் மெட்ரிக் டன் புகை உமிழ்வு தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 2 லட்சம் மரக்கன்றுகளை நடும் அளவிற்கு பயன் தரக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உருவாகவுள்ள 4 ஆயிரம் மெட்ரிக் டன் புகை உமிழ்வு தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 2 லட்சம் மரக்கன்றுகளை நடும் அளவிற்கு பயன் தரக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்த்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- டுகாட்டி பைக்கை அஜீத் போல் ஓட்டும் ஆசையில் விதி மீறிய போலீஸ்காரர்.. என்ன இருந்தாலும் தல போல வருமா?
- புதிய தலைமுறை ஆடி க்யூ3 எஸ்யூவி அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!
- புதிய மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது ஹோண்டா நவி; விலை ரூ 44,775 தான்
- ராயல் என்பீல்டு உலகப்போர் எடிசன் பைக்குகள் வெறும் 3 நிமிடங்களில் விற்று தீர்ந்தன.. இமாலய சாதனை
- இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற டூவீலர்கள் இவை தான்


Click it and Unblock the Notifications