Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 8 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- News கேரளா லோக்சபா தேர்தலில்.. வெற்றியை தீர்மானிக்கும் ஜாதி, மதங்கள் எவை? யார் எந்த பக்கம்? முழு விவரம்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் போன அமைச்சர்; வைரலான போட்டாவால் பொதுமக்கள் எரிச்சல்
பைக்கில் ஹெல்மெட் போடாமல் பைக்கில் பயணித்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இந்த போட்டோ சமூகவலைதளதங்களில் வைரலாக பரவி வருகிறது. மக்களை ஹெல்மெட் போட அறிவுறித்திவிட்டு அமைச்சரே இப்படி ஹெல்மெட் போடாமல் ப
பைக்கில் ஹெல்மெட் போடாமல் பைக்கில் பயணித்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இந்த போட்டோ சமூகவலைதளதங்களில் வைரலாக பரவி வருகிறது. மக்களை ஹெல்மெட் போட அறிவுறித்திவிட்டு அமைச்சரே இப்படி ஹெல்மெட் போடாமல் பயணிப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராகவுகம் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏ வாகவும் இருப்பவர் அமைச்சர் எஸ்பி வேலு மணி. கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நீர் நிலைகளுக்க தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பெரும்பாலான ஏரிகள், குளங்கள் எல்லாம் நிரம்பி வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் அம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிரம்பி வரும் ஏரிகள் மற்றும் குளங்களை பார்வையிட முடிவு செய்தார்.
அவர் பார்வையிட சென்ற விதம் தான் எல்லோரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் ஒரு சிலருடன் பைக்கிலேயே எல்லா ஏரிகள் மற்றும் குழங்களை பார்வையிட சென்றார். ஆனால் அவர் பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணியவில்லை. அவர் மட்டும் அல்லாமல் பைக்கில் சென்ற யாரும் ஹெல்மெட் அணியவில்லை.
பைக்கில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் என்பது அடிப்படையான விஷயம், குறைந்த பட்ச பாதுகாப்பு அது தான். மக்களை ஹெல்மெட் அணிய வைக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம், பைக்கில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணியவேண்டும் என கோர்ட் உத்தரவு என ஹெல்மெட் விழிப்புணர்வு தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் பைக்கில் சென்றபோது அமைச்சர் உட்பட அவருடன் சென்ற யாரும் ஹெல்மெட் அணியவில்லை. அவர் பைக்கில் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் இருதினங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
அமைச்சரின் இந்த எளியமையை சிலர் பாராட்டினலும் பலர் அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி கொண்டே வருகின்றனர். பலர் இந்த போட்டோவை பகிர்ந்து கிண்டல் செய்தும் வருகின்றனர்.
பைக்கில் பயணிப்பது என்பது வெளிட்ட வெளி பயணம். பயணத்தின் போது பெரியவாகனங்கள் மட்டும் அல்ல சிறிய கற்கள் கூட உங்கள் பைக்கை நிலை குலைய வைத்து விடும். சிறிய கல் தடுக்கி பைக்கில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு பலியானவர்கள் கூட இருக்கிறார்கள்.
இந்தியாவில் நடக்கும் வாகன விபத்துக்களில் ஏற்படும் மரணங்களில் 75-88 சதவீதமா மரணங்கள் தலையில் அடிபட்டு தான் நிகழ்ந்திருக்கிறது. இதை குறைக்க வேண்டும் என்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் விபத்துக்களில் உங்கள தலையில் காயம் ஏற்படுத்துவதை 90 சதவீதம் தடுக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் விபத்துக்களில் ஆயிரக்கணக்கானோர் ஹெல்மெட் அணிந்த ஒரே காரணத்திற்காக விபத்தில் இருந்து அவர்களது உயிரை காப்பாற்றியுள்ளன. அதே நேரத்தில் பலர் ஹெல்மெட் அணியாத காணத்திற்காக விபத்தில் பலியாகியுள்ளனர்.
இது தவிர தலையில் அடிபட்டு காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களும் இருக்கிறார்கள். தலையில் அடிபட்டால் அதற்கான மருத்துவத்திற்கு அதிகம் செலவாகும். மேலும் தலையில் அடிப்பட்டால் நீண்ட கால ஊனம் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் அரசு ஹெல்மெட் அணிய அறிவுறுத்தி வருகிறுது.
அந்த அரசாங்கத்தின் ஒரு பிரதிநிதியாகவே முக்கியமாக ஒரு அமைச்சராகவே இருந்து கொண்டு இப்படி ஹெல்மெட் போடாமல் பயணிப்பது இது பொதுமக்களுக்கு ஒரு தவறான முன் உதாரணமாக போய்விடும் என்பதை மறந்து அமைச்சர் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்
- ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை முன்பதிவு துவங்குகிறது!
- விபத்தில் சிக்கிய நடிகையிடம் மோசமாக நடந்து கொண்ட பிஎம்டபிள்யூ டீலர்.. சமூக வலை தளங்களில் குமுறல்..
- 2018 ஹோண்டா ஆக்டிவா ஐ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்!
- ராயல் என்ஃபீல்டு பெகாசஸ் எடிசனுக்கு நாளை முன்பதிவு துவங்குகிறது!
- காலா வில்லன், மோகன்லால் மட்டுமல்ல.. வெளிநாட்டு பிரபலங்களையும் மயக்கும் இந்தியாவின் ராயல் என்பீல்டு
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!