தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தான் பள்ளியின் அறிவியல் கண்காட்சியில் தண்ணீரில் ஓடும் பைக் இன்ஜின் குறித்த தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளத

By Balasubramanian

திருப்பூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தான் பள்ளியின் அறிவியல் கண்காட்சியில் தண்ணீரில் ஓடும் பைக் இன்ஜின் குறித்த தொழிற்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இது நடைமுறைக்கு சாத்தியமா? இதை பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன நம்மைகள் மற்றும் பலன்கள் கிடைக்கும்? என்னென்ன தீமைகள் மற்றும் ஆபத்துக்கள் இருக்கிறது என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

திருப்பூரை சேர்ந்த 10ம் வகுப்பு பள்ளி மாணவி யோகிதா அவரது குடும்பம் ஏழ்மையாக நிலையில் இருந்து வருகிறது. ஆனாலும் இவர் தொடர்ந்து தனது படிப்பை தொடர்ந்து வருகிறார். இவருக்கு அறிவியல் பாடம் என்றால் மிகவும் விருப்பம் அதை விரும்பி படித்து வருகிறார்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

அப்பொழுது அவரது பள்ளியில் அறிவியல் கண்காட்சிக்கான அறிவிப்பு வந்துள்ளது. அதில் எதையாவது புதிதாக செய்யவேண்டும் என தன் மனதில் வைத்திருக்கிறார் யோகிதா. இதற்கிடையில் அவரது வீட்டில் மாத கணக்கு குறித்த பேச்சு எழுந்த போது அவரது அப்பாவின் பைக்கிற்கு பெட்ரோல் போட வழக்கத்தை விட செலவு அதிகமாகிருந்தது.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

இதை நினைத்து யோகிதாவின் அம்மா புலம்பி கொண்டே இருந்தார். அப்பொழுது அவர் பைக் தண்ணீரில் ஓடினால் நன்றாக இருக்கும் ஆனால் அதற்கு தான் வாய்ப்பில்லையே என சலித்து கொண்டார். இதை கேட்டு கொண்டிருந்த யோகிதாவிற்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

தண்ணீர் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஜின் ஆகிய மூலக்கூறுகளால் இணைந்தது தான்.ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்பதை படித்திருக்கிறோம். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை மட்டும் பிரித்து எடுத்தால் போதுமே அதை வைத்து வாகனத்தை இயக்க வைக்கலாம் என யோசித்தார்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

தனது யோசனையை தனது பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் தெரிவித்த யோகிதா அவர்களின் உதவியு

டன் தனது ஆராய்ச்சி மேற்கொள்ள ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றார். அவர் வெற்றிகரமாக தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுத்து அதை வைத்து பைக்கையும் இயக்கி காட்டினார்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

இவர் தனது தந்தையின் பைக்கிலேயே ஹைட்ரஜனை செலுத்தி பைக்கை ஸ்டார்ட் செய்தார். அது எப்பொழுதும் போல எந்த வித பிரச்னையும் இல்லாமல் இயங்கியது. இதையே அறிவியல் கண்காட்சியில் காட்சிபடுத்தி பரிசும் பெற்றார்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

இதையடுத்து அவரது கண்டுபிடிப்பு வெளியுலகிற்கு வந்தது. இதுகுறித்து அவர் இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிகள் செய்ய வேண்டும் எனவும் பேட்டியளித்தார்.

யோகிதாவின் இந்த கண்டுபிடிப்பு நிச்சயம் பாராட்டிற்கு உரியதே. ஒரு கண்டுபிடிப்பு என்பது நமக்கான தேவையில் இருந்து தான் துவங்கும். அப்படியாக தற்போது உள்ள பெட்ரோல் விலையால் கஷ்டப்படும் குடும்பத்திற்கு பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தக்கூடிய தேவைதான் இந்த கண்டுபிடிப்பை தூண்டியது.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

ஆனால் இது போன்று ஹைட்ரஜனை வைத்து வாகனத்தை இயங்குவதை பலர் ஆராய்ந்து வருகின்றனர். இங்கே உள்ள சாதகங்களையும் பாதகங்களையும் கீழே பார்க்கலாம்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

சாதகங்கள்

தீராத சக்தி

ஹைட்ரஜன் என்பது நம் சுவாசிக்கும் காற்று, தண்ணீர் என எல்லாவற்றிலும் இருக்கிறது. பூமியில் மனிதன் பயன்படுத்தும் இடத்தை விட மிக அதிகமான இடம்தண்ணீரால் தான் நிரம்பியுள்ளது. இதனால் இது சாத்தியமானால் இந்த ஹைட்ரஜிற்கு பற்றாகுறையே ஏற்பாடது. பெட்ரோல், நிலக்கரி ஆகியன என்று தீரும் என்றே நமக்கு தெரியாது என்பது இங்கு குறிப்பிட வேண்டியது.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

சுத்தமான எரிபொருள்

ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்பாட்டால் அதனால் சுற்றுபுறத்திற்கு எந்த வித மாசும் ஏற்படாது. மேலும் விமானங்களில், விண்வெளிகளில் தண்ணீர் தேவைக்காக இந்த ஹைட்ரஜனை தான் பயன்படுத்துகின்றனர்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

டாக்ஸிக் இல்லாதது

இந்த ஹைட்ரஜன் என்பது மனிதர்களின் உடல் நலத்திற்கு எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காதது. இதனால் சாதாரண மனிதர்கள்கூட இதை எளிமையாக கையாளலாம். அதில் எதேனும் தவறுகள் நடந்தால் கூட ஒரு பெரிய அளவிலான விபத்துக்கள் எதுவும் நடந்து விடாது. இதை தைரியமான யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

அதிக திறன் வாய்ந்தது.

மற்ற எரிபொருட்களை விட ஹைட்ரஜன் அதிக திறன் வாய்ந்தது. மற்ற எரிபொருட்கள் எவ்வளவு சக்தியை வெளிப்படுத்துமோ அதை விட அதிக சக்தியை ஹைட்ரஜன் வெளிப்படுத்தும்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

பாதகம்

ஹைட்ரஜனை பயன்படுத்துவது மேலே சொன்னதை பார்த்தால் மிக நல்ல எரிபொருள் போல தெரியும் ஆனால் அதில் பல பாதகமான விஷயங்களும் இருக்கிறது அதை கீழே காணலாம்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

விலை அதிகம்

எலெக்ட்ரோலிசிஸ் மற்றுமு் ஸ்டீம் ரிபார்ம்மெஷன் ஆகிய முறைதான் ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் முக்கிய முறைகள் இதை பயன்படுத்தி ஹைட்ரஜனை பிரித்தெடுக்க அதிகம் செலவாகும். அந்த செலவை கணக்கிடும் போது நீங்கள் பெட்ரோலை போட்டு விடலாம்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

சேமித்து வைப்பதில் சிரமம்

ஹைட்ரஜன் என்பது எடை குறைந்த வாயு, இதை சேமித்து வைக்க வேண்டும் என்றால் இதை நீர் வடிவமாக மாற்றி இதை குறிப்பிட்ட ஒரு டெம்பரேச்சரில் வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அதன் சக்தி குறையாமல் இருக்கும், இல்லாவிட்டால் நமக்கு தேவையான சக்தி அதில் இருந்து வெளிப்படாது.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

எளிதில் தீப்பற்றக்கூடியது.

ஹைட்ரஜன் மற்ற எரிபொருளை காட்டிலும் எளிதில் தீற்றக்கூடியது. மேலும் இது வாசம் இல்லாதது. இதனால் இந்த ஹைட்ரஜனில் லீக் ஏற்பட்டாலும் எளிதாக தெரியாது. இதனால் இதை பயன்படுத்துவதில் பெரும் ஆபத்தும் இருக்கிறது. லீக்களை கண்டுபிடிக்க தற்போது சென்சார்கள் வந்துவிட்டது.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

கடத்துவதில் சிரமம்.

மற்ற எரிபொருளை போல ஹைட்ரஜனை மொத்தமாக கொண்டு செல்ல முடியாது. சிறியது சிறியதாக தான் எடுத்து செல்ல முடியும். அது மிகப்பெரிய குறைபாடு வாகனத்தை ஹைட்ரஜனை எடுத்து சென்றாலும் போதுமான அளவிற்கு எடுத்து செல்ல முடியாது. அவ்வப்போது ஹைட்ரஜன் நிரப்ப வேண்டிய சூழ்நிலை வரும்.

தண்ணீரில் ஓடும் பைக்; திருப்பூர் மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு; எப்பொழுது நடைமுறைக்கு வரும்?

இவ்வாறு சில சிறப்பு அம்சங்கள் இந்த ஹைட்ரஜனிற்கு இருந்தாலும் அதில் உள்ள ஆபத்துக்களும், நடைமுறைபடுத்துவதில் உள்ள சிக்கல்களும் அதிகம் உள்ளன. வரும் காலத்தில் கண்டுபிடிக்கப்படும் தொழிற்நுட்பம் இந்த ஆபத்துக்களை தவிர்க்குமாயின் ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது சாத்தியம் தான்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டசெய்திகள்

  1. புதிய ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி இந்திய வருகை விபரம்!!
  2. இனி லைசன்ஸ்டாம்; H தான் போடனும்; இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது
  3. பல்சர் சிட்டிக்கு போகலாம் வாங்க! 1 கோடி பல்சர் பைக்குகள் விற்பனையானதை வித்தியாசமாக கொண்டாடும் பஜாஜ்!
  4. கார் விற்பனை அபார வளர்ச்சி; முதல் காலாண்டு மற்றும் ஜூன் மாத ரிப்போர்ட்
  5. குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்
Source: Pudhiya Thalamurai
    Article Published On: Monday, July 2, 2018, 17:43 [IST]
    English summary
    TN student extract fuel form water for automobiles. Read in tamil
    மேலும்... #ஆஃப் பீட் #offbeat
     
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+