Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 2 hrs ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கல்யாண மண்டபமாக மாறிய டெல்லி ஃபார்முலா- 1 கார் பந்தய களம்!
டெல்லி, அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் இப்போது கல்யாண சத்திரமாக மாறியிருக்கிறது. ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஃபார்முலா- 1 கார் பந்தய களமான இதில், தற்போது கல்யாண வைபவங்கள் நடத்தும் இடமாக மாறியிருக்கிறது.
ரேஸ் கார், பைக்குகளின் மிரட்டலான சப்தத்திற்கு பதிலாக இப்போது புத் சர்க்யூட்டில் டும்டும்டும் சப்தம் கேட்டும் இடமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஏமாற்றம்
அதிக அளவிலான வரிவிதிப்பு என்ற குற்றச்சாட்டை முன் வைத்து, கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் ஃபார்முலா- 1 கார் பந்தயங்களை சர்வதேச கார் பந்தய சம்மேளனம் விலக்கிக் கொண்டது. இதனால், 2,000 கோடியில் சர்வதேச தரத்தில் உருவான புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் வழக்கமான உற்சாகத்தை இழந்து தவிக்கிறது.
நிகழ்ச்சிகள்...
எதை நோக்கமாக கொண்டு அமைக்கப்பட்டதோடு, அதனை விடுத்து தற்போது இந்த புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் கார், பைக் அறிமுக நிகழ்ச்சிகளும், இரண்டாம் நிலை பந்தயங்களும் மட்டுமே நடத்தப்படுகின்றன. மேலும், கார், பைக் பந்தயங்களுக்கு பயிற்சி அமைப்புகளும் நடந்து வருகின்றன.
கல்யாண சத்திரம்
ஃபார்முலா- 1 கார் பந்தய போட்டிகள் நடக்காததால், பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அங்கு திருமணம் ஒன்றுக்கான அழைப்பிதழ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் மட்டும்...
கடந்த 24ந் தேதி அங்கு ஒரு திருமண வைபவம் நடப்பதற்கான அழைப்பிதழே அது. அதில், இது இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கிறது.
வருமானம்...
இதுபோன்று திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவதன் மூலமாக சற்று வருவாயை பெருக்கிக் கொள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டின் நிர்வாகம் முடிவு செய்திருப்பது தெளிவாகியுள்ளது.
ரசிகர்கள் அதிர்ச்சி...
திருமணத்திற்கு வாடகைக்கு விட்டதற்கு சமூக வலைதளங்களில் கார் பந்தய ரசிகர்கள் கண்டனத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்தனர்.
விளக்கம்...
இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் பதலளித்துள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் நிர்வாகம், ரேஸ் டிராக்கில் திருமணம் நடக்காது. திருமணம் உள்ளிட்ட அனைத்து விதமான நிகழ்ச்சிகளை நடத்தும் அளவுக்கு எங்களிடம் பெரிய இடவசதி உள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது. அந்த அழைப்பிதழில் குறிப்பிட்டது போன்று இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்!!
சரிதான்...
சரிதான்... அழைப்பிதழில் குறிப்பிட்டது போல இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்!!
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு