Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி
- Movies அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பி.எஸ்.3 எஞ்சினுக்கு அனுமதி வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பி.எஸ். 3 எஞ்சின் கொண்ட வாகனங்களை விற்காமல் வைத்திருக்கும் டீலர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. அதுகுறித்த தகவல்கள் இனி...
பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட இரு சக்கர வாகனங்களை டெல்லி நகரத்தின் வட்டார போக்குவரத்து அலுவகங்களில் பதிவு செய்ய டெல்லி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
சுற்றுப்புறச் சூழலை பாதிப்படைய செய்யும் பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்கள் எதுவும் இந்தியாவில் பதிவு செய்யப்படமாட்டாது எனக்கூறி உச்சைநீதிமன்றம் தடை பிறப்பித்து உத்தரவு வழங்கியது.
இந்த உத்தரவால் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதிலும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவகங்களிலும் பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்களை பதிவு செய்யும் பணி நிறுத்தப்பட்டது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த உத்தரவால் பல வாகன டீலர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிப்பு அடைந்ததாக பல செய்திகள் வந்த வண்ணமிருந்தன.
மேலும் சில தகவல்கள் ஷோரூம் மற்றும் டீலர்களிடம் இருந்த பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட வாகனங்கள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தன.
இந்த சூழ்நிலையில் டெல்லி அரசு, மார்ச் 31ம் தேதி வரை வாங்கப்பட்ட பி.எஸ்.3 எஞ்சின் கொண்ட இரு சக்கர வாகனங்களை அந்நகரத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளது.
இதை டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
பி.எஸ்.3 எஞ்சினுக்கான தடை உத்தரவால் பெரும் பாதிப்பை சந்தித்த டெல்லி வாகன டீலர்கள், தற்போது டெல்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
கடந்த மார்ச மாத இறுதியில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் பி.எஸ்.3 எஞ்சினுக்கான தடை ஆணையை உறுதி செய்ததால்,
இதுவரை தலைநகர டெல்லியில் மார்ச் மாதம் 31ம் தேதி வரை வாங்கப்பட்ட ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன.
மார்ச் 31ம் தேதி வரை வாங்கப்பட்ட வாகனங்களுக்கான ஆவணங்களை ஆராய்ந்த பிறகே, டெல்லி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருசக்கர வாகனங்களை பதிவு செய்யப்படவேண்டும் என்று அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பதிவு செய்யப்படவுள்ள வாகனங்களுக்கு ஆன்லைன் கட்டணங்கள், காப்பீட்டு கொள்கைகள் போன்றவற்றில் நிலுவை இருந்தால், அதற்கு உரிமம் வழங்கும் அலுவலகங்கள் தான் பொறுப்பு எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
உரிமம் பெறுவதற்காக காலக்கெடுவை மே 15ம் தேதி வரை உயர் நீதிமன்றம் நீட்டியுள்ளது.
டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு சேவை வரிக்காக ஆன்லைனில் விண்ணபிக்க தவறிய சுய பதிவு அல்லாத வாகன டீலர்களுக்கு பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு டெல்லி மாநிலத்தில் உள்ள பெரும்பாலான வாகன டீலர்கள் தொடர்ந்து டெல்லி உயர்நீதி மன்றத்தை அனுகத்தொடங்கினர்.
அவர்களது முயற்சியின் காரணமாக மார்ச் 31ம் தேதி வரை விற்கப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கான உத்தரவை டெல்லி உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?