Just In
- 14 min ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 33 min ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- 1 hr ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 4 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
Don't Miss!
- News ரிமோட்டை எறிஞ்சு டிவியை உடைச்சு..சில்லறைய சிதற விட்டேனே! இப்போ..மநீமவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி
- Movies நல்ல படங்களை கொல்றாரு.. ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க.. ப்ளூ சட்டை மாறனை விளாசிய விஜய் ஆண்டனி!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட ஆம்புலன்ஸ்... காவலர்கள் செய்த காரியத்திற்கு குவியும் பாராட்டு...
ஆம்புலன்ஸ் ஒன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்ட நிலையில், காவலர்கள் துரிதமாக செயல்பட்டு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகிலேயே அதிக வாகனங்கள் இயங்கி கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் காரணமாக இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருவதற்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் சாலைகள் விரிவுபடுத்தப்படுவதில்லை.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதும்தான் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு முக்கியமான காரணமாக உள்ளது. அவசரமாக அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடியவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
இதுதவிர அவசரமாக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ்களும் சில சமயங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளும் அவல நிலை காணப்படுகிறது. இந்த வகையில் டிஎன்டி (DND - Delhi Noida Direct flyway) சாலையில் உள்ள சுங்க சாவடிக்கு அருகே ஆம்புலன்ஸ் ஒன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது.
ராயல் என்பீல்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா புதிய மீட்டியோர் 350? வீடியோ!
தலைநகர் டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக டெல்லி எல்லைகளில் கடந்த ஒரு சில நாட்களாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் இன்று காலை (டிசம்பர் 7) ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் இந்த ஆம்புலன்ஸ் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆம்புலன்ஸ் சிக்கியிருப்பதை கண்டதும் காவலர் ஒருவர் உடனடியாக களத்தில் இறங்கினார். அவர் ஆம்புலன்ஸ் விரைவாக செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார். அத்துடன் மற்றொரு காவலரும் இந்த பணிகளில் உதவி செய்தார். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து ஆம்புலன்ஸ் சென்றது.
அந்த காணொளி தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் ஆம்புலன்ஸ் வேகமாக செல்ல உதவிய காவலர்களுக்கு சமூக வலை தளங்களில் பாராட்டும் குவிந்து வருகிறது. ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி இந்தியாவில் ஆம்புலன்ஸ்கள் இப்படி போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்வது இது முதல் முறை கிடையாது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட ஐதராபாத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்துவதற்காக சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓடினார். அவர் முன்னால் ஓடி மற்ற வாகனங்களை ஒதுக்கி விட்டு வழி ஏற்படுத்த, அவரை பின் தொடர்ந்து ஆம்புலன்ஸ் சென்றது.
கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் நடந்த அந்த சம்பவத்தின் காணொளியும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி, சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி ஒரு சில வாகன ஓட்டிகளும் பிரச்னையாக உள்ளனர்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் சைரன் ஒலியுடன் அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அதற்கு வழி விட ஒரு சில வாகன ஓட்டிகள் மறுக்கின்றனர். இதன் காரணமாக ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளுக்கு சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு, உள்ளே இருக்கும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
ஆம்புலன்ஸ்களை பொறுத்தவரை ஒரு சில வினாடிகள் தாமதம் ஆனால் கூட ஆபத்து என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால் அத்தகைய வாகன ஓட்டிகளை கடுமையாக தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. இதன்படி ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட மறுக்கும் வாகன ஓட்டிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஆம்புலன்ஸ்கள் மட்டுமல்லாது தீயணைப்பு வாகனம் போன்ற அவசர கால வாகனங்களுக்கு வழி விடாதவர்களுக்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும். அத்துடன் சிறை தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, ஆம்புலன்ஸ்களுக்கு முறையாக வழி விடுவது அவசியம்.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...