Just In
- 36 min ago சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- 1 hr ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 1 hr ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 3 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
காற்று மாசுபாட்டை குறைக்க மற்றுமொரு அதிரடி... மீண்டும் பெட்ரோல் விஷயத்தில் நடைபெற இருக்கும் அதிரடி மாற்றம்...
மத்திய அரசு பெட்ரோலில் மீண்டும் கை வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவலை இப்பதிவில் காணலாம்.
காற்று மாசுபாட்டைக் குறைக்க நமது இந்திய அரசு எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக, பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை முழுமையாக ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த வாகனங்களுக்கு பதிலாக மின் வாகன பயன்பாட்டைக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் வகையில், புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர்க்கு மானியம், வரி குறைப்பு, சிறப்பு தள்ளுபடி என எக்கசக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்ட பழைய (20 ஆண்டுகள் பழைய தனியார் மற்றும் 15 ஆண்டுகள் பழைய வர்த்தக) வாகனங்களை அடியோடு பயன்பாட்டில் இருந்து நீக்கும் முயற்சியிலும் எடுக்கப்பட்டு வருகின்றது.
இதுபோன்ற எக்கசக்க நடவடிக்கைகள் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மத்திய அரசு நாட்டில் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக மற்றுமொரு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி விட்டதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக இம்முறை பெட்ரோலில் கை வைத்திருக்கின்றது அரசு. தற்போது கலக்கப்படும் எத்தனாலின் அளவை மீண்டும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, தற்போது, 90 சதவீதம் பெட்ரோல், 10 சதவீதம் எத்தனால் என்ற வீதத்தில் கலக்கப்பட்டு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதிலேயே மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
அதாவது, 20 சதவீதம் எதனாலை (E20) 80 சதவீத பெட்ரோலுடன் கலந்து விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது. 2020ம் ஆண்டு இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கின்றது.
10 சதவீத எத்தனால் கலக்க அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் பற்றாக்குறை காரணமாக 6 சதவீதம் வரை மட்டுமே பெட்ரோலில் எத்தனால் கலக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியாண்டு 2018ல் இது 4.22 சதவீதமாக மட்டுமே இருந்தது.
இந்த நிலையிலேயே காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு 20 சதவீத எத்தனால் கலப்படத்திற்கு மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. 20 சதவீத எத்தனால் கலப்பின் வாயிலாக சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரையில் சேமிக்க முடியும் என மத்திய பெட்ரோலியத்துறையின் செயலாளர் தருண் கபூர் தகவல் தெரிவித்திருக்கின்றார்.
அதாவது, பெட்ரோலியம் கொள்முதலுக்காக இந்தியா அரசு மேற்கொள்ளும் அந்நிய செலாவணியில் கணிசமான பாரத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என கூறப்படுகின்றது. இந்தியா 85 சதவீத எரிபொருள் தேவையை வெளிநாடுகளில் இருந்தே பூர்த்திச் செய்துகொள்கின்றது. இதற்காக பெரும் அளவிலான தொகையை அது செலவிடுவது குறிப்பிடத்தகுந்தது.
தூய்மை பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் (இ20) கலப்பதன் மூலம் அதிகளவில் வெளியாகும் கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோகார்பன் உமிழ்வைக் கணிசமாக குறைக்க முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவேதான் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தைக் கையிலெடுத்திருப்பதாகக் கூறி 20 சதவீத எத்தனால் கலப்பிற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கின்றது.
-
எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
-
உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!