Just In
- 1 hr ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 6 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 6 hrs ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 7 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்னங்க சார் உங்க சட்டம்.. லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதரை தண்டித்த போலீஸ்காரர் தூக்கியடிப்பு!
மும்பையில் அவசரத்தில் தவித்து கொண்டிருந்தவர்களுக்கு லிப்ட் கொடுத்து உதவிய நபர் மீது நடவடிக்கை எடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
மும்பையில் அவசரத்தில் தவித்து கொண்டிருந்தவர்களுக்கு லிப்ட் கொடுத்து உதவிய நல்ல மனிதர் மீது நடவடிக்கை எடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தி காரணமாக, உயரதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
மும்பை ஏர்ரோலி சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் நிதின் நாயர். கடந்த 18ம் தேதியன்று, காரில் அலுவலகம் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. பஸ்கள் அனைத்தும் கூட்ட நெரிசலில் நிரம்பி வழிந்தன.
இதனால் ஒரு முதியவர் உள்பட மூன்று பேர், அவசரமாக அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காக சாலையோரத்தில் நின்று லிப்ட் கேட்டு கொண்டிருந்தனர். அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்ட நிதின் நாயர் மூவரையும் தனது காரில் ஏற்றிக்கொண்டார்.
ஆனால் செல்லும் வழியில், போலீஸ் கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் என்பவர் காரை நிறுத்தி விசாரணை நடத்தினார். தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுப்பது சட்ட விரோதம் எனக்கூறி, நிதின் நாயரின் லைசென்ஸை, கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் பறிமுதல் செய்து விட்டார்.
இதனால் நிதின் நாயர் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார். எனினும் வேறு வழி இல்லாமல், கோர்ட்டிற்கு சென்று 1,500 ரூபாய் அபராதம் செலுத்திய பின்புதான், நிதின் நாயர் தனது லைசென்ஸை மீண்டும் பெற்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 66ன் படி, எந்த ஒரு நபரும் தனியார் வாகனத்தை, பயணிகள் வாகனமாகவோ அல்லது சரக்கு வாகனமாகவோ பயன்படுத்த கூடாது. இந்த சட்டத்தின்படிதான் நிதின் நாயர், கோர்ட்டிற்கு இழுக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
வரி கட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, சிலர் T-பெர்மிட் பெறாத தங்கள் சொந்த வாகனங்களை டாக்ஸியாக பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் சட்ட விரோதமாக அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர். இதை தவிர்ப்பதற்காகதான் இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால் லிப்ட் கேட்ட மூவரிடமும் நிதின் நாயர் பணம் வாங்கவில்லை. அவர்கள் அவசரத்தில் தவித்து கொண்டிருந்ததால், உதவ வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நிதின் நாயர் லிப்ட் கொடுத்தார். எனினும் கெடுபிடியாக அவரை தண்டித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
நடந்த சம்பவங்களை எல்லாம் நிதின் நாயர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அந்த போஸ்ட்டில், ''நமது சக மக்களுக்கு நாம் உதவி செய்வதை, நம் நாடு விரும்புவது இல்லை'' என அவர் கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். இந்த போஸ்ட் பேஸ்புக்கில் வைரலாக பரவியது.
நிதின் நாயர் மீது நடவடிக்கை எடுத்த கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல், வாசி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருகிறார். அவரின் இத்தகைய நடவடிக்கையால், சாலையில் இனி யாராவது உயிருக்கு போராடினால் கூட யாரும் உதவ முன்வர மாட்டார்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்தது.
ஒரு நல்ல மனிதர் மீது நடவடிக்கை எடுத்ததால், கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் மீது போலீஸ் உயரதிகாரிகள் கூட அதிருப்தி அடைந்தனர். இதன் காரணமாக கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் தற்போது அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சாதாரண நிர்வாக பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டு விட்டார்.
அதுமட்டுமல்லாமல் நிதின் நாயர் மீது கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் நடவடிக்கை எடுத்ததற்கு வேறு ஏதேனும் மறைமுக காரணங்கள் உள்ளதா? என்பது குறித்த விரிவான விசாரணையை உடனடியாக தொடங்கும்படி, வாசி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
எனினும் வெறுமனே பணியிட மாற்றத்துடன் நிறுத்தி கொள்ளாமல், கான்ஸ்டபிள் அஜீத் பாட்டீல் மீது இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
புதுசா வாங்கி காசை வேஸ்ட் பண்ணாதீங்க! பைக் ஓட்டி படிக்க செகன்ட் ஹேண்டில் வாங்க பெஸ்ட் பைக்குகள் இது தான்!
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!