Just In
- 23 min ago வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- 3 hrs ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 4 hrs ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 5 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Movies 'ஆவேசம்' திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஆவேசம் அடைந்த பொதுமக்கள்.. அப்படி என்ன ஆச்சு?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கார்களில் பொருத்தப்படும் புல் பார்களுக்கு பின்னால் மறைந்துள்ள ஆபத்துக்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே...
புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக தமிழக அதிகாரிகள் தற்போது கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் வாகனங்களில் புல் பார்களை பயன்படுத்துவதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர், புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களின் காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கினர்.
ஆனால் இந்தியாவில் இன்னமும் ஏராளமான வாகனங்கள் புல் பார்களுடன் இயங்கி கொண்டுள்ளன. எனவே தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் தற்போது புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக மீண்டும் கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். நிகழ்விடத்திலேயே வாகனங்களில் இருந்து புல் பார்களை அகற்றுவதுடன், வாகன உரிமையாளர்களுக்கு அவர்கள் அபராதமும் விதிக்கின்றனர்.
முன் பகுதியில் பெரிய புல் பார் உடன் வந்த டொயோட்டா இன்னோவா கார் ஒன்றை நிறுத்தி, தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. நிகழ்விடத்திலேயே அந்த காரில் இருந்து புல் பார் அகற்றப்பட்டு விட்டது. அத்துடன் சட்டத்திற்கு புறம்பான ஆக்ஸஸெரியை பயன்படுத்திய காரணத்தால், அந்த காரின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆனால் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது? என்ற சரியான தகவல் கிடைக்கவில்லை. அதேபோல் காரில் இருந்து அகற்றப்பட்ட புல் பார் மீண்டும் காரின் உரிமையாளரிடமே கொடுக்கப்பட்டு விட்டதா? அல்லது அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விட்டனரா? என்பதும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் இப்படிப்பட்ட ஆக்ஸஸெரீஸ்களை பொதுவாக அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவார்கள்.
திரும்ப ஒப்படைத்தால், வாகன உரிமையாளர்கள் அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே சட்டத்திற்கு புறம்பான ஆக்ஸஸெரீஸ்களை பறிமுதல் செய்வதைதான் அரசு அதிகாரிகள் வழக்கமாக வைத்துள்ளனர். புல் பார்களை பொருத்துவதால் ஏர்பேக் சரியான நேரத்தில் விரிவடைந்து, உயிர்களை காப்பாற்றும் என சிலர் நினைத்து கொண்டுள்ளனர். இது முற்றிலும் தவறான தகவல்.
உண்மையில் காரின் முன் பகுதியில் நீங்கள் புல் பார்களை பொருத்துவதால், ஏர் பேக்குகள் விரிவடையாமல் போவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. விபத்தின் தாக்கத்தை உணர்ந்து ஏர் பேக்குகளை விரிவடைய செய்யும் சென்சார்கள், காரின் முன் பகுதியில்தான் வழங்கப்பட்டிருக்கும். அங்கு புல் பார்கள் இருந்தால், விபத்தின் தாக்கத்தை சென்சார்கள் கண்டறியாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
அதாவது சென்சார்களின் செயல்பாட்டில் புல் பார்கள் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இதனால் ஏர் பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடையாமல் போகலாம். இதன் விளைவாக விபத்து நேரும் சமயங்களில், காரின் உள்ளே இருப்பவர்கள் படுகாயம் அடைவதற்கோ அல்லது உயிரிழப்பதற்கோ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் புல் பார்களால் பாதசாரிகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
புல் பார்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மோதினால், பாதசாரிகள் படுகாயம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற காரணங்களால்தான் புல் பார்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் காரில் புல் பார் பொருத்தப்பட்டிருந்தால் இன்றே அதனை கழற்றி விடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் பிரச்னைகளை எதிர் கொள்ள நேரிடலாம்.
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா