Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்திய ராணுவ வீரரின் சாதனையை அசால்டாக முறியடித்த 17 வயது சிறுவன்... ப்பா! இந்த வயசுல இவ்ளோ திறமையா?
18 வயதைக்கூட தொடாத ஓர் சிறுவன் ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்கின்ற வகையிலான ஓர் சம்பவத்தைச் செய்துள்ளார். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேர்ந்தவர் ஓம் மஹாஜன். அடுத்த மாதம் தனது 18ம் வயதில் இவர் அடியெடுத்த வைக்க இருக்கின்றார். இந்த நிலையில், மிதிவண்டியின் மூலம் கின்னஸ் சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார். இவர், சுமார் 3,600 கிமீ தூரத்திலான இடைவெளியை வெறும் 8 நாட்களில் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

அதாவது, காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடங்கி நாட்டின் கடைக்கோடியான கன்னியாகுமரியை வெறும் எட்டு நாட்கள், 38 நிமிடங்களில் கடந்து சாதனைப் படைத்திருக்கின்றார். சனிக்கிழமை அன்றே மஹாஜனின் இந்த சாதனைப் பயணம் முடிவடைந்திருக்கின்றது.

கடந்த வாரம் ஸ்ரீநகரின் குளிர்ச்சியான காலநிலையில் தொடங்கிய மஹாஜனின் இந்த சாதனைப் பயணம், மத்திய பிரதேசத்தின் கடுமையான மழை, தென்னகத்தின் அதிக வெப்பம் என அனைத்து பருவ நிலைகளையும் கடந்து தற்போது நிறைவைச் சந்தித்துள்ளது.

முன்னதாக சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு ஸ்ரீநகர்-கன்னியாகுமரி சாதனையை மஹாஜனின் மாமா மகேந்திரா மாஜனே மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது இவரின் சாதனையையே ஓம் மஹாஜன் முறியடித்திருக்கின்றார். அதேசமயம், ஓம் மஹாஜனுக்கு முன்னதாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன் கேணல் பாரத் பன்னு எட்டு நாட்கள் மற்றும் ஒன்பது மணி நேரங்களில் இந்த சாதனையை மிறியடித்திருந்தார்.

இவர்களைக் காட்டிலும் அதிக வேகத்தில் சைக்கிளை இயக்கி மிகக் குறைந்த நேரங்களில் ஓம் மஹாஜன் புதிய சாதனையை மேற்கொண்டிருக்கின்றார். இதற்காக, ஓய்வு-தூக்கம் போன்றவற்றை அவர் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 17 வயது சிறுவனின் இந்த சாதனைக்கு கேணல் பன்னு உட்பட உலக சாதனையாளர்கள் பலர் பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், ஓம் மஹாஜன் அமெரிக்கா கனவு தள்ளிபோயிருக்கின்றது. இவர், கன்சாஸ் பகுதியில் உள்ள ஓர் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சிக்கான பட்டபடிப்பை மேற்கொள்ள இருந்தது. ஆனால், இதற்கு கொரோனா வைரஸ் தடையை ஏற்படுத்தி வருகின்றது. இந்த இடைவெளியில் பயிற்சி மேற்கொள்ளும் விதமாகவே இந்த சாதனையை அவர் படைத்திருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தொடர்ந்து அவர் கூறியதாவது, "நான் வெறும் இடைவெளியை மட்டும்தான் கடந்துள்ளேன். ஆகையால், என்னுடைய வெற்றி என்னுடைய குழுவிற்கே சேரும்" என்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து விரைவில் சவாலாலன 4,800 கிமீ சாலையை 12 நாட்களில் கடப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள இருப்பதாக ஓம் மஹாஜன் கூறியுள்ளார்.