Just In
- 1 hr ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- 3 hrs ago இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- 8 hrs ago இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
- 10 hrs ago ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
Don't Miss!
- News உத்தர பிரதேசத்தில் அமைச்சர் மீது ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்.. தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
- Sports சூப்பர்! சிஎஸ்கேவின் மாஸ் திட்டம்.. ரூ.14 கோடி வீரருக்கு புதிய பொறுப்பு.. இனி அதிரடி தான்
- Finance எலான் மஸ்க் 'எனக்கு வேற வழி தெரியல ஆத்தா'..!! சீனா-வை அடக்க டெஸ்லா எடுத்த கடைசி ஆயுதம்..!
- Movies இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டெல்லி ஆட்டோ ஷோவில் ஒரு கோடிக்கு போலி நுழைவு டிக்கெட் விற்பனை
டெல்லி ஆட்டோ கண்காட்சியில் ஒரு கோடிக்கு போலி நுழைவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, டெல்லி போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
பார்வையாளர் வருகை எண்ணிக்கை அடிப்படையில் உலகின் இரண்டாவது சர்வதேச ஆட்டோ கண்காட்சியாக டெல்லி ஆட்டோ கண்காட்சி கூறப்படுகிறது. கடந்த 5ந் தேதி துவங்கிய டெல்லி ஆட்டோ கண்காட்சி கடந்த 11ந் தேதி வரை நடந்தது.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பார்வையாளர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்திலிருந்து 30,000 ஆக ஏற்பாட்டாளர்கள் குறைத்தனர். இருப்பினும், வழக்கம்போல் கூட்ட நெரிசலால் பல இடையூறுகள் ஏற்பட்டதாக ஆட்டோ கண்காட்சியில் பங்கேற்ற நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், டெல்லி ஆட்டோ கண்காட்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு போலி நுழைவு டிக்கெட்டுகளில் ஏராளமானோர் உள்ளே வந்ததும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக, டெல்லி போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்," ஒரு கோடி மதிப்புக்கு போலி நுழைவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கருதுகிறோம்.
போலி நுழைவு டிக்கெட் விற்பனை செய்வது தெரிந்தவுடன் கண்காட்சியின் கடைசி நாளன்று சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க முயற்சி செய்தோம். ஆனால், யாரும் சி்க்கவில்லை. இதுதொடர்பாக, தீவிர விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்," என்று கூறினார்.