Just In
- 1 hr ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 1 hr ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 2 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 3 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
குஜராத்தில் புதிய ஆலைக்கு ரூ.18,000 கோடி முதலீடு:மாருதி
குஜராத் மாநிலம், சனந்த் நகரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே மாருதியின் புதிய தொழிற்சாலை அமைய உள்ளது.
500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய தொழிற்சாலைக்கு அருகிலேயே உதிரிபாக தொழிற்சாலைகளும் இருக்குமாறு கட்டுமான பணிகளை துவங்க மாருதி திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து மாருதி நிறுவனத்தின் தலைவர் பர்கவா மற்றும் மேலாண் இயக்குனர் சின்சோ நகனிஷி ஆகியோர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சமீபத்தில் நேரில் சந்தித்து பேசினர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பர்கவா கூறியதாவது:
"சனந்த் நகரில் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து முதல்வர் மோடியுடன் பேச்சு நடத்தினோம். அரசு சார்பில் அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவதாக அவர் தெரிவித்தார்.
ஆண்டுக்கு 20 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட வகையில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் முதல்கட்டமாக ரூ.6,000 கோடி முதலீட்டில் 10 லட்சம் கார்கள் உற்பத்தி திறன் கொண்ட தொழிற்சாலை அமைக்கப்படும்.
பின்னர் இரண்டாம் கட்டமாக ஆண்டுக்கு கூடுதலாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் வகையில் இந்த தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படும். உதிரிபாக தொழிற்சாலைகளும் இந்த தொழிற்சாலைக்கு அருகில் வர இருப்பதால் மொத்தமாக ரூ.18,000 கோடி வரை முதலீடு இருக்கும் என மதிப்பிட்டுள்ளோம்," என்றார்.