Just In
- 17 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 1 hr ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ரோட்டில் அனாதையாக்கப்படும் சொகுசு கார்கள்
பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து போலி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்து திருட்டு கார்களை இறக்குமதி செய்து விற்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துத்துள்ளது. இந்த நூதன மோசடியில் மூளையாக செயல்பட்டு தலைமறைவான சுமித் வாலியா என்பவனை சமீபத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை(டி.பி.ஐ.)அதிகாரிகள் கைது செய்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த கார்களை வரி ஏய்ப்பு செய்வதற்கு இந்தியாவுக்கான வியட்நாம் மற்றும் வடகொரிய தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகளும், பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளான்.
பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக டி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், குறைந்த விலைக்கு ஆசைப்பட்டு சுமி்த் வாலியாவிடம் சொகுசு கார்களை வாங்கிய தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் தற்போது நடுக்கத்தில் உள்ளனர்.
சுமித் வாலியா எங்கே நமது பெயரையும் கூறியிருப்பானோ என்ற அச்சத்தில் உள்ள பிரபலங்கள் தற்போது தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகட்டும் என்று முடிவு செய்துள்ளனர். இதனால், உஷாரான சிலர் கோடிக்கணக்கான மதிப்புடைய கார்களை ரோட்டில் அனாதையாக நிறுத்திவிட்டு ஓடும் சம்பவங்கள் அரங்கேற துவங்கியுள்ளன.
டெல்லியில் உள்ள பரபரப்பு மிகுந்த சாலையின் ஓரத்தில் பல கோடி மதிப்புடைய அஸ்டன் மார்ட்டின் மற்றும் பென்ட்லீ கார்களை அதன் உரிமையாளர்கள் அனாதையாக நிறுத்திவிட்டு ஓடிவிட்டனர். இந்த கார்களை சமீபத்தில் டி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இந்த கார்கள் சுமித் வாலியாவிடமிருந்து வாங்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. டி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தீவிரமடைந்துள்ளதால், இறக்குமதி வரி கட்டாமல் சொகுசு கார்களை வாங்கிய பல கோடீஸ்வரர்கள் தங்களது கார்களை இதேபோன்று அனாதையாக நிறுத்திவிட்டு தப்பிஓடும் சம்பவங்கள் வரிசையாக அரங்கேறும் என கூறப்படுகிறது.