இரண்டாவது ஆலையை குஜராத்தில் திறக்க ஃபோர்டு முடிவு?

Ford Logo
சென்னை: சென்னையில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது. தனது இரண்டாவது தொழிற்சாலையை குஜராத்தில் அமைப்பது குறித்து அந்த நிறுவனம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

குஜராத்தில் ரூ.6,000 கோடி முதலீட்டில் மாருதி நிறுவனம் பிரம்மாண்ட கார் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், அங்கு ரூ.18,000 கோடி அளவுக்கு மொத்தமாக முதலீடு செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனமும் குஜராத்தில் கார் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், குஜாராத்துக்கு ரூ.5,000 கோடி முதலீடும், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் வகையில் இந்த புதிய தொழிற்சாலையை கட்டுவதற்கு ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாகவும், உள்நாட்டு தேவையை நிறைவு செய்வது மட்டுமின்றி, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலம், சனந்த் நகரிலுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை அருகிலேயே மாருதி நிறுவனமும் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய உள்ளது. இதேபோன்று, ஃபோர்டு நிறுவனமும் அந்த பகுதியில் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது.

Most Read Articles
English summary
Ford India is projecting to craft its second manufacturing unit in the country as part of its expansion plan and the place where the brand will make a halt is none other than the fastest growing auto hub state of Gujarat.
Story first published: Thursday, June 9, 2011, 11:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X