Just In
- 1 hr ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- 2 hrs ago சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- 2 hrs ago ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- 3 hrs ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டாடா - ஃபியட் இடையே சுமூக உறவு இல்லை - ரத்தன் டாடா
ஜேடி பவர் என்ற மார்க்கெட்டிங் ஆய்வு நிறுவனத்திற்கு டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
" இந்தியாவில் ஃபியட் நிறுவனம் தனித்து சந்தையில் கால் பதிக்க விரும்புவதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும், டாடா மோட்டார்ஸ் அதிகாரிகளுக்கும் இடையில் சுமூக உறவும், தொடர்பும் இல்லை.
ஃபியட் தலைமை செயல் அதிகாரியுடன் எனக்கு தனிப்பட்ட முறையில் சுமூக உறவு இருந்தாலும், வர்த்தக அளவில் அது திருப்தியாக இல்லை. டாடா - ஃபியட் உறவு குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, இந்த ஒப்பந்தம் நல்ல வர்த்தக கொள்கைகளை கொண்டது என்பதை மறுக்க முடியாது," என்றார்.
கடந்த 2007ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ்- ஃபியட் நிறுவனங்களிடையே கூட்டு குழும ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலேயே ஃபியட் கார்களை விற்பனை செய்யவும், டாடா தொழிற்சாலையில் ஃபியட் கார்களை தயாரிக்கவும் வழிவகுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஃபியட் நிறுவனத்தின் கார் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டாததால், தனி ஷோரூம்களை அமைத்து விற்பனையை அதிகரிக்க ஃபியட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக, டாடாவுடனான உறவை முறித்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.