Just In
- 4 hrs ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 6 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 8 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 9 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கவலையை விடுங்க..ரேவா காரில் இனி குடும்பத்தோடு போகலாம்!

மஹிந்திரா கீழ் செயல்பட்டு வரும் ரேவா நிறுவனத்தின் ஒரே ஒரு பேட்டரி கார் மட்டுமே நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சுமாரான தோற்றம், அதிக விலை, வசதிகளில் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த கார் சந்தையில் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில், ரேவா பேட்டரி காரில் உள்ள குறைபாடுகளை களைந்து புதிய பேட்டரி காரை ரேவா நிறுவனம் தயாரித்துள்ளது. புதிய காருக்கு ரேவா என்எக்ஸ்ஆர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பழைய ரேவா பேட்டரி காரில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யலாம். ஆனால், புதிய காரில் 4 பேர் அமர்ந்து செல்லலாம். இந்த கார் இரண்டு கதவுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை பயணம் செய்யும் திறனும் கொண்ட பேட்டரியுடன் வருகிறது.
தவிர, இது மணிக்கு 104 கிமீ செல்லும் வகையிலான எஞ்சின் மற்றும் சிறந்த கட்டுமானத்துடன் வருகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த காரை பல்வேறு சாலை நிலைகளில் வைத்து ரேவா நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே, வரும் மார்ச் மாதத்திற்குள் இந்த காரை சந்தையில் அறிமுகப்படுத்த மஹிந்திரா ரேவா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதிக வசதிகள் கொண்ட இந்த பேட்டரி கார் சந்தையில் நிச்சயம் பெரிய வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.