Just In
- 30 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 36 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மின் தட்டுப்பாட்டால் இந்தியாவில் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தவில்லை- ஜிஎம்
சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைக்க எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துவதற்கு பல முன்னணி கார் நிறுவனங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுற்றுச்சூழலுக்கு துளியும் மாசு ஏற்படுத்தாத வகையிலான ஏராளமான எலக்ட்ரிக் கார்கள் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதற்கான தகுந்த கட்டமைப்பு வசதிகள் இல்லை என ஜெனரல் மோட்டார்ஸ் குறைகூறியுள்ளது.
கோயம்புத்தூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜெனரல் மோட்டார்ஸ் துணைத்தலைவர் பாலேந்திரன் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
" எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. சமீபத்தில் டெல்லியில் நாங்கள் அறிமுகம் செய்த பீட் எலக்ட்ரிக் கார் மூலம் இதை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள்.
இருந்தாலும், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான தக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கு மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. சாதாரணமாக வீட்டு உபயோகத்திற்கே மின்சாரம் இல்லாதபோது, எலக்ட்ரிக் கார்களுக்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரம் எங்கிருந்து கிடைக்கும். எனவே, தற்போது எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் எடுபடாது.
எங்களிடம் எலக்ட்ரிக் கார்களுக்கான தொழில்நுட்ப வசதி இருந்தபோதிலும், இந்தியாவில் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் உடனடியாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை. கட்டமைப்பு மற்றும் மின்சாரம் தாராளமாக கிடைத்தால் மட்டுமே எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வது சாத்தியமாகும்," என்றார்.