Just In
- 37 min ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 1 hr ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 1 hr ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 2 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
Don't Miss!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் கார் பந்தயம் ஒத்திவைப்பு
பார்முலா ஒன் கார் பந்தயத்தை முதன்முறையாக இந்தியாவில் நடத்துவதற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு(எப்ஐஏ) அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து, இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக துவங்கின.
நொய்டாவில் கார் பந்தயத்திற்கான பிரம்மாண்ட ரேஸ் டிராக் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ரேஸ்களுக்கான டிக்கெட் விற்பனையும் கடந்த மாதம் துவங்கிவிட்டது. இந்தியாவில் முதன்முறையாக பார்முலா ஒன் கார் பந்தயம் நடப்பதால், ரேஸ் பிரியர்கள் ஆர்வமுடன் கார் பந்தயத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை ஒத்திவைப்பதாக எப்ஐஏ திடீரென அறிவித்துள்ளது. இந்தியாவில் துவங்க இருந்த அதே தேதியில் பஹரைனில் கார் பந்தயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் டிசம்பரில் இந்தியாவில் கார் பந்தயத்தை துவக்க எப்ஐஏ முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த மார்ச் மாதம் பஹரைனில் நடக்க இருந்த கார் பந்தயம், அரசுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் வன்முறை சம்பவங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் நடக்க இருந்த தேதியை பஹரைனுக்கு கொடுத்திருப்பதற்கு எப்ஐஏ முன்னாள் தலைவர் உள்பட பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.