புதிய தொழிற்சங்கத்துக்கு மாருதி ஒப்புதல்: முடிவுக்கு வருகிறது வேலைநிறுத்தம்

மானேசர் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் புதிய தொழிற்சங்கம் அமைத்துக்கொள்வதற்கு அந்த நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதனால், கடந்த 12 வது நாட்களாக நீடிக்கும் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மாருதி மனிதவள மேம்பாட்டு பிரிவு தலைவர் சித்திக் கூறுகையில்," புதிய தொழிற்சங்கத்துக்கு அனுமதி தர நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த தகவலை தொழிலாளர் பிரதிநிதிகளுக்கு அனுப்பி உள்ளோம்.
மேலும், நீக்கப்பட்ட தொழிலாளர்கள் மீது கருணை அடிப்படையில் அவர்கள் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய தயாராக உள்ளோம். ஆனால், அதற்கு முன்னதாக தொழிற்சாலையில் பணிகள் இயல்பு நிலைக்கு வரவேண்டும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








