டொயோட்டோவுக்கு ரூ.9 கோடி வரிச்சலுகை: கர்நாடக அரசு அறிவிப்பு

Toyota Logo
பெங்களூர்: பெங்களூரில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது கார் தொழிற்சாலைக்கான பாகங்களை இறக்குமதி செய்வதற்காக டொயோட்டோவுக்கு கூடுதலாக ரூ.9 கோடி வரிச்சலுக்கையை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூர் அருகே பிடதியில் டொயோட்டோ நிறுவனத்தின் பிரம்மாண்ட கார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில், கரொல்லா அல்டிஸ், இன்னோவா மற்றும் பார்ச்சூனர் ஆகிய கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேலும் ஒரு புதிய தொழிற்சாலையை அந்த நிறுவனம் கட்டி வருகிறது. இதில், எட்டியோஸ் மற்றும் லிவா கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாவது தொழிற்சாலைக்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி மதிப்புடைய கார் தயாரிப்புக்கான கனரக இயந்திரங்களை பல கட்டங்களாக இறக்குமதி செய்து வருகிறது.

இதற்காக, கர்நாடக அரசு ஏற்கனவே ரூ.80 கோடி வரை இறக்குமதி வரியில் சலுகை அளித்துள்ளது.

இந்த நிலையில், கனரக இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்காக டொயோட்டோவுக்கு மேலும் ரூ.9 கோடி வரிச்சலுகை அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனை, அம்மாநில உயர்கல்விதுறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, டொயோட்டோவுக்கு கர்நாடக அரசு அளித்துள்ள வரிச்சலுகை ரூ.89 கோடியாக உயர்ந்துள்ளது.

Most Read Articles
English summary
Toyota gets Rs.9 crore tax concession on the import of tools and machinery worth Rs 450 crore for its second car plant, the concessions extended to the company totals Rs 89 crore. The state government had offered a tax concession of Rs 80 crore when Toyota started construction of their second plant in 2009. Today, the cabinet decided to offer another Rs 9 crore on import of certain machinery for their second car plant,”according to the reports.
Story first published: Monday, June 27, 2011, 13:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X