ஸ்விப்ட் டீசல் எஞ்சினுக்காக ரூ.2000 கோடி மாருதி முதலீடு

ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக, டீசல் மாடல்களுக்கு தேவை கணிசமாக உள்ளது. ஆனால், தேவை இருக்கும் அளவுக்கு தற்போது மாருதியிடம் டீசல் எஞ்சின் உற்பத்தி இல்லை.
இதனால், ஸ்விப்ட், டிசையர் கார்களின் டீசல் மாடல்களுக்கு 6 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் நீள்கிறது. இந்த நிலையில், வெயிட்டிங் பீரியடை குறைக்கும் விதமாக ஃபியட்டிடமிருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் எஞ்சின்களை பெறுவதற்கு மாருதி ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதிய டீசல் எஞ்சின் ஆலையை குர்கானில் மாருதி அமைக்க உள்ளது. ரூ.2000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட இருக்கும் இந்த ஆலையில் ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களுக்கான டீசல் எஞ்சின் தயாரிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஆலையில் எஞ்சின் உற்பத்தி துவங்கப்பட்டவுடன் ஸ்விப்ட், டிசையர் கார்களின் வெயிட்டிங் பீரியட் கணிசமாக குறையும். மாருதி போன்றே கார்களுக்கான டீசல் எஞ்சின் உற்பத்தி ஆலையை கட்டுவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








