புதிதாக ரூ.300 கோடியை முதலீடு செய்யும் ஸ்கோடா

செக் குடியரசை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகனின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் வோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா ஆட்டோ நிறுவனங்கள் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அடுத்த கட்ட விரிவாக்கப் பணிகளை ஸ்கோடா ஆட்டோ மேற்கொள்ள உள்ளது. இந்தியாவில் தனது மாடல்கள் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளது.
இதற்காக, அவுரங்காபாத்தில் உள்ள ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிப்பது மற்றும் புதிய மாடல்களை பிரபலப்படுத்துவது உள்ளிட்டவைகளுக்காக புதிதாக ரூ.300 கோடியை அந்த நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது.
மேலும், கார்களுக்கு இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களின் அளவை குறைத்து உள்நாட்டிலேயே பெறவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், கார்களுக்கான உற்பத்தி செலவை வெகுவாக குறைக்க முடியும் என்பதால், போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் விலையில் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








