Just In
- 22 min ago பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- 1 hr ago 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 2 hrs ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 3 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கார் மழையில் நனைந்தால் இவ்ளோ பிரச்சனைகள் வருமா? இது முன்னாடியே தெரியாம போச்சே!
கார் மழையில் நனைந்தால் கார் சுத்தமாகும் என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் இப்படிச் செய்தால் கார் உண்மையில் சுத்தமா? காருக்கு அது நல்லதா? இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்
நாம் கார்களை பயன்படுத்தும் அளவிற்கு அதைப் பராமரிக்கப் பெரிய அளவில் முயற்சி செய்ய மாட்டோம். அதில் முக்கியமாகக் காரை சுத்தம் செய்வது. சோம்பேறித்தனத்தின் காரணத்தினாலோ அல்லது வேறு வேலைகள் இருப்பதாலோ கார்களை சிலர் கழுவி சுத்தமாக வைத்திருக்காமல் இருக்கலாம். இப்படி சுத்தம் செய்யாமல் இருப்பவர்கள் மழை வந்தால் ஜாலி தான். காரை மழையில் நனைய வைத்து காரை சுத்தம் செய்யும் வேலையை மழை செய்துவிட்டது என நினைத்துக்கொள்வோம். ஆனால் அப்படிச் செய்வது சரியான செயலா? அப்படிச் செய்தால் கார் உண்மையிலேயே சுத்தமாகுமா? முழு விபரங்களைக் காணலாம்
சுற்றி வளைக்காமல் முதலிலேயே விஷயத்திற்கு வந்து விடுவோம் காரை மழையில் நனைய வைத்து சுத்தம் செய்வது என்பது முற்றிலும் தவறான செயல் இப்படியாகக் காரை சுத்தம் செய்தால் கார் சுத்தமாகாது மாறாக மேலும் மோசமாகச் சேதமாகும் என்பதே உண்மை. அது எப்படி மழையில் நனைத்தால் கார் அழுக்காகும்? என உங்களுக்குத் தோன்றலாம் கார் மழையில் நனையும் போது என்ன நடக்கிறது எனக் காணலாம் வாருங்கள்
மழையில் கார் நினைத்த பின்பு கார் வெளிப்புறத்தில் சுத்தமானது போல தான் தோற்றம் தரும். ஆனால் அது நன்றாக மழை பெய்தால் தான் லேசான தூரல் விழுந்தால் கார் மேலும் அழுக்காகும். மழை நீர் சுத்தமாக இருக்கும் என நாம் நம்புவோம். ஆனால் மழை நீர் காற்றில் உள்ள மாசுகளுடன் கலந்து விழுகிறது. இந்த காசுகள் எல்லாம் சேர்ந்து கெமிக்கல் ரியாக்ஷன் ஆகி இருக்கும். இந்த நீர் காரின் மீதே இருந்து அது காயும் போது காரின் பெயிண்ட்டை பதம் பார்க்கத் துவங்கும்
இதனால் காரின் பெயிண்டின் பொழிவு தன்மை குறையும் தொடர்ந்து கார் மழையில் நனைந்தால் காரில் உள்ள பெயிண்ட் தன் பொழிவை வேகமாக இழுக்க துவ்கும். மழை நீர் எப்பொழுதுமே சுத்தமாக நீராக இருக்காது என்பது காரை மழையில் நனைய வைக்க கூடாது. முடிந்தால் மழை நீரில் கார் நனையாத படியாக பார்க்கிங்கில் காரை நிறுத்த வேண்டும். அல்லது வெளியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் இருந்தால் காரை மழையில் நனையாதவாறு கவர் போட்டு மூடவேண்டும்.
கார் மழையில் நனைந்தால் அது தானாகவே காயும் வரை பலர் அதை விட்டுவிடுவார்கள். ஆனால் காரில் அதிக நேரம் ஈரம் இருந்தால் அது காரில் பல விதமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை உருவாக்கும். குறிப்பாக நோர்னோ வைரஸ், மற்றும் சால்மோனில்லா பாக்டீரியாக்கள் காரில் அதிக நேரம் ஈரம் இருந்தால் உருவாகும் அந்த பாக்டீரியா மற்றும் வைரல் ஈரம் காய்ந்த பின்பும் காரின் லேரியலேயே இருக்கும் பின்னர் நாம் அந்த இடத்தை தொடும் போது அது நம் கை வழியாக உடலுக்குள் ஏறி உடல் உபாதைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதில் தப்பித் தவறி காருக்குள் லேசாகத் தண்ணீர் இறங்கிவிட்டாலும் அது காருக்குள் பங்கஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை உருவாக்கத் துவங்கிவிடும். அதனால் கார் தப்பித் தவறி மழையை நனைந்தாலும் உடனடியாக காரை மழையில் நனையாதவாறு நிறுத்திவிட்டு உடனடியாக நனைந்த பகுதிகளில் உள்ள ஈரத்தை ஒரு துணியில் துடைத்துவிடுவது நல்லது.
சிலருக்கு காரில் பயணம் செய்யும் போது மழை வந்தால் என்ன செய்வது என்ற கேள்வி வரும் அப்பொழுதும் அந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதற்காகப் பயணத்தைப் பாதியில் நிறுத்த முடியாது. அதனால் பயணத்தின் போது மழை நின்றது ஒரு சில நிமிடங்கள் காரை ஒரு இடத்தில் பாதுகாப்பாக பார்க் செய்துவிட்டு காரை துடைத்துவிட்டு பின்னர் பயணித்தால் காரின் பொழிவு கெட்டுப் போகாமல் இருக்கும். அதே நேரத்தில் அதன் மூலம் கிருமிகள் பரவுவதையும் தடுக்கலாம்
அடுத்தாக முழுவதுமாக பூட்டப்பட்ட ஒரு காரை அதிக நேரம் நனைய வைத்தால் காருக்குள் இருக்கும் வெப்பம் மற்றும் வெளியில் இருக்கும் குளிர்ச்சி ஆகிய இரண்டும் சேர்ந்து காரின் சீட்களில் லேசான ஈரம் படியும். அந்த ஈரம் சுத்தம் செய்யப்படாவிட்டால் சீட்களில் பூசனம் பூத்தது போன்ற வெள்ளை வெள்ளையாக அடை அடையாக ஒரு விஷயம் வரும் அது மனிதர்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. அதை மனிதன் சுவாசித்தால் நுரையீரல் பிரச்சனை உட்படப் பல பிரச்சனைகள் ஏற்படும் மேலும் காரின் சீட் உள்ளிட்ட உட்புற கட்டமைப்பிற்கும் கெடுதலாகும். மேலும் இது காருக்குள் துர்நாற்றத்தையும் பரப்பிவிடும்.
கார் மழையில் நனையும் போது காரின் ஜன்னல்கள் அல்லது கதவு திறந்திருந்தால் காருக்குள் மழை நீர் செல்ல நேரிடும். அதனால் காருக்குள் இருக்கும் ஏதாவது உதிரிப் பாகங்கள் வழியாக மழை நீர் சென்றால் அது உள்ள உள்ள பாகங்களைச் சேதப்படுத்தும். அப்படி ஏதாவது நடந்துவிட்டால் உங்கள் கார் உங்களுக்குச் செலவு இழுத்துவிடும். அதனால் காரை மழையில் நனைய விடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இது போக எல்லா கார்களிலும் ஹெட்லைட்கள் தண்ணீர் உள்ளே புகுந்து விட முடியாத அளவிற்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் அதனால் கார் மழையில் நனையும் போது வெளியே உள்ள குளிர்ந்த தன்மை மற்றும் ஹெட்லைட் உள்ள இருக்கும் வெப்பம் காரணமாக காரின் ஹெட்லைட் உள்ளே துளி துளியாகத் தண்ணீர் உருவாகும். இந்த தண்ணீர் தானாகக் காய்ந்துவிடும் என்றாலும் இந்த தண்ணீர் காயும் போது சில மாசுகளை ஹெட்லைட் கண்ணாடியிலேயே விட்டு செல்லலும் இதனால் ஹெட்லைட் கண்ணாடி நாளடைவில் தனது வெளிச்சத்தை இழக்கும். உங்கள் ஹெட்லைட் சரியாக இருந்தாலும் இந்த கண்ணாடி வழியாக அந்த ஒளி வரும் போத மங்கிப்போக வாய்ப்புள்ளது.
இதே பாதிப்பு தான் காரின் முகப்பு கண்ணாடியிலும் ஏற்படும் காரின் முகப்பு கண்ணாடியிலும் மழையில் கார் நனையும் போத உட்புறமாகச் சிறிய நீர்த்துளிகள் வந்து காரின் கண்ணாடியில் படியும். அது காயும் போது கண்ணாடியை படிப்படியாக மங்கிப்போக வைக்கும். அதனால் காரை மழையில் நனைய வைக்க வேண்டாம். அப்படி நனைந்தால் கார் சுத்தமாவதை விட மோசமாகத் தான் மாறும். அதனால் நீங்கள் காரை மழையில் நனைய வைப்பதைத் தவிர்த்துவிடுங்கள்
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...