Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இவ்ளோ நாளா தெரியாம போச்சே! ரயிலில் இப்படிஒரு வசதி இருப்பது பலருக்கு தெரியாது,என்னனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க
ரயிலில் நீங்கள் பயணிக்கும் போது உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க ரயில்வே நிர்வாகம் ஒரு புகார் ஆஃப்பை உருவாக்கியுள்ளது. இந்த சிஸ்டம் எப்படி செயல்படுகிறது. எந்தெந்த பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு கிடைக்கும் உள்ளிட்ட தகவல்களை கீழே காணலாம் வாருங்கள்.
இந்திய மக்களுக்கு ரயில் பயணம் என்பது இன்றியமையாதது. ஒரு நாளுக்கு ரயில்களில் முன்பதிவு செய்து மட்டுமே லட்சகணக்கான இந்திய மக்கள் பயணிக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஊழியர்களை கொண்ட நிறுவம் என்றால் அது ரயில்வே மட்டும் தான். தினமும் ஆயிரக்கணக்கில் ரயில்கள் இயங்குவதற்கு இங்கு ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கிறது. அதை எல்லாம் களைந்து தொழிற்நுட்ப பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு இந்திய ரயில்வே மற்றவர்கள் பிரம்மிக்கும் வகையில் இயங்கி வருகிறது.
என்னதான் ரயில்வே குறித்து நாம் பெருமையாக பேசினாலும் சில நேரங்களில் ரயில் பயணங்கள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்தவிடுவதில்லை குறிப்பாக நீண்ட தூர ரயில் பயணங்களில் பயணிகள் பல்வேறு விதமான பிரச்சனை சந்திக்கிறார்கள். திருட்டு, கடத்தல் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட குற்ற சம்பவங்களும், கோச்களில் தண்ணீர் இல்லாமல் போவது, டாய்லெட் சுத்தமாக இல்லாமல் இருப்பது என பல பிரச்சனைகளை பயணிகள் அன்றாடம் சந்தித்து வருகிறார்.
ரயில் பயணிகள் பலருக்கு இந்த பிரச்சனைகளை யாரிடம் சொல்லி புகார் அளிக்க வேண்டும் இதற்கு எப்படி தீர்வு காண வேண்டும். ஓடும் ரயிலில் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு எப்படி உடனடியாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் பலருக்கு தெரியவில்லை.
ஆனால் ரயில்வே நிர்வாகம் இதற்காக என்ற பிரத்தியேகமாக ஒரு தளத்தை உருவாக்கி வைத்துள்ளது. Rail MADAD (Mobile Application for Desired Assistance During travel) என்ற பெயர் கொண்ட இந்த ஆப் மூலம் ரயில் பயணத்தின் போது நமக்கு தேவைப்படும் உதவிகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
உதாரணமாக ரயில் பயணித்தின் போது நோயாளிகள் யாருக்காவது அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டால் இந்த ஆப் மூலம் மருத்துவ உதவிகளை முடிந்தால் நேரடியாகவோ அல்லது போன் மூலமோ வீடியோ கால் மூலமோ பெற முடியும். இது மட்டுமல்ல திருட்டு, கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தாலும் இந்த ஆப் மூலம் போலீசாரின் உதவியை நாட முடியும். ரயில் பெட்டியில் பயணிக்கு சக பயணி தொந்தரவு கொடுத்தால் பெண்களுக்கு பயணத்தின் போது பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவானால் மக்கள் நேரடியாக இந்த ஆப் மூலம் புகார் அளித்து போலீசாரின் உதவியை நாட முடியும்.
இது போக ரயிலில் தொலைந்து போன பொருட்கள் குறித்தோ, ரயிலில் கழிப்பறை சுத்தமாக இல்லை, தண்ணீர் வரவில்லை போன்ற புகார்களையும் இந்த ஆப்பில் செய்ய முடியும். புகார் பதிவானவுடன் புகாரின் தன்மையை அறிந்து அந்த புகாரை பெறும் அதிகாரி அதற்கு உரிய ரயில்வே அதிகாரிகளையோ அல்லது ரயில்வே போலீசாரையோ தொடர்பு கொண்டு புகார் குறித்து விளக்கமளித்து அதற்கு தீர்வு காண சொல்லுவார்கள். இந்த புகார்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தீர்வு காண வேண்டும் என்ற உத்தரவும் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக ஒவ்வொரு கோட்டத்திற்கு இந்த தளத்தில் வரும் புகார்களுக்கு தீர்வு காண்பதற்காக பிரத்தியேகமாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு புகார் பதிவாகிவிட்டால் அந்த புகார் குறித்த தீர்வு கிடைக்கும் வரை அந்த புகாரின் ஸ்டேட்டஸை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். பயணிகள் புகார் அளித்தவுடன் அந்த புகாருக்கான எண் ஒதுக்கப்படும் அந்த புகாரின் நிலை குறித்து அந்த எண்ணை பயன்படுத்தி ஆன்லைன் மூலமே தெரிந்து கொள்ள முடியும்.
தற்போது மக்கள் மத்தியில் வட இந்திய ரயில் பயணம் குறித்த பேச்சு ஒன்று இருக்கிறது. தமிழகத்தை தாண்டிவிட்டால் ரயில்களில் குறிப்பாக வட இந்தியாவில் ரயில்களில் முன்பதிவு செய்து பயணித்தாலும் முன்பதிவில்லாத பெட்டிக்கு டிக்கெட் எடுத்தவர்கள் முன்பதிவுள்ள பெட்டியில் முன்பதிவு செய்து பயணிக்கும் நபர்களுக்கு தொந்தரவு செய்வார்கள் என பலர் புகார் அளித்திருப்பார்கள் இப்படியாக இனி நீங்கள் வட இந்தியாவில் ரயில் பயணத்தை மேற்கொண்டாலும் இந்த ஆப்பை பயன்படுத்தி புகார் அளிக்கலாம்.
இப்படியாக வேறு நபர்கள் உங்கள் சீட்டை ஆக்கிரமித்து வைத்திருந்தால் நீங்கள் இந்த ஆப்பில் புகார் செய்தவுடன் இது நேரடியாக புகார் அதிகாரிக்கு செல்லும் அவர் நீங்கள பயணிக்கும் ரயிலில் உள்ள டிக்கெட் பரிசோதகர் மற்றும் அந்த ரயிலில் உள்ள போலீசாருக்கு இந்த புகார் அளித்த விபரங்களை அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்.
அதை பெற்றவுடன் அதிகாரிகள் அந்த புகாரை சென்று பார்த்து அதை உடனடியாக சரி செய்து தரவேண்டியது அவர்கள் கடமை. குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்த புகார்கள் சரி செய்யப்பட்டதா அல்லது அதன் நிலை என்ன? என்பது குறித்து புகார் மைய அதிகாரிக்கு அப்டேட் செய்ய வேண்டும்.
இது அதற்கு மட்டுமல்ல ஒருவேளை ரயிலில் பயணிக்கும் பயணிக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ திடீரென அவரது உடல்நிலை யாரும் எதிர்பாராத வகையில் சிரியஸ் ஆகிவிட்டாலோ உடனடியாக இதில் புகார் அளிக்கப்படும் பட்சத்தில் அடுத்த ரயில்நிலையத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி,ஆம்புலன்ஸ் உதவி உள்ளிட்டவைற்றையும் பெற்றுக்கொள்ள முடியும். இன்று இந்த ஆப் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக தான் இருக்கிறது. மக்கள் பலர் இந்த ஆப்பை முறையாக பயன்படுத்துவதில்லை.
பெரும்பாலும் ஏசி வகுப்பில் பயணிப்பவர்கள் தங்களுக்கு போர்வை வரவில்லை. தலையனை வரவில்லை, தனக்கு வழங்கப்பட்ட போர்வை தலையனையை மாற்றி தரவேண்டும் என புகார் அளிக்கின்றனர். சிலர் ரயில் பெட்டிகளில் தண்ணீர் இல்லை என புகார் அளித்துள்ளனர்.
இப்படியாக ரயில் பெட்டிகளில் தண்ணீர் இல்லை என்ற புகார் வந்தால் அடுத்த தண்ணீர் வசதி கொண்ட ரயில் நிலையத்திற்கு ரயில்கள் சென்றதும் அங்கு தண்ணீர் நிரப்பபடும். இந்த புகார் அளிக்கும் வசதி செல்போன் ஆப், ஆன்லைன் வெப்சைட்களில் மட்டுமல்ல சாதாரண செல்போன் வைத்திருப்பவர்களிடமும் இருக்கிறது.
ஆன்லைன் ஆப் அல்லது வெப்சைட் பயன்படுத்த முடியாதவர்கள் அல்லது தெரியாதவர்கள் தங்கள் செல்போனில் 139 என்ற ரயில்வே . உதவி எண்ணிற்கு போன் செய்தும் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இதற்கு ஸ்மார்ட் போன்கள் தான் இருக்க வேண்டும் என்று இல்லை எந்த செல்போனிலிருந்து வேண்டுமானாலும் புகாரளிக்கலாம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 12 மொழிகளில் இந்த சேவை வழங்கப்படுகிறது. இது நேரடியாக ஐவிஆர்எஸ்க்கு கனெக்ட் ஆகும். இந்த ஆப் மத்திய அரசின் உமாங்க் அப் உடனும் இணைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகவும் பயன்படுத்தலாம்
அதிலிருந்து நீங்கள் தேர்வை செய்யும் மொழியை பொருத்து அந்த மொழி தெரிந்த ஒரு அதிகாரிக்கு கனெக்ட் ஆகும். அவரிடம் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம். பலருக்கு இந்த ஆப் குறித்தோ அல்லது இந்த சேவை குறித்தோ விழிப்புணர்வு இல்லை. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவு