கொட்டும் மழையை உங்கள் காருக்கு நண்பனாக மாற்ற சில எளிய டிப்ஸ்... மழை நல்லது..!!
கொட்டும் மழையை உங்கள் காருக்கு நண்பனாக மாற்ற சில எளிய டிப்ஸ்... மழை நல்லது..!!
கார், பைக்குகளை வாங்கி குவிக்கும் பலருக்கு, அதை முறையாக பராமரிப்பதிலும், சுத்தம் செய்வதிலும் துளியும் ஆர்வமிருக்காது.

இதனால் வாகனங்களின் பொலிவு குறைந்து, பூச்சு வேலை எல்லாம் பெயர்ந்து கிட்டத்தட்ட சிதைந்த நிலையில் பல கார்கள், பைக்குகள் இருப்பதை பார்த்திருப்போம்.

வாகனம் வைத்திருப்பது இன்றைய சூழலுக்கு அத்தியாவசமான ஒன்று. அப்படி இருக்க, கார், பைக்குகளின் வெளிப்புறங்களை கழுவி சுத்தம் செய்வது, அவற்றின் ஆயுட்காலத்தை மேலும் அதிகரிக்கும்.

வாகனங்களை சுத்தம் செய்வது சுற்றுச்சூழலுக்கு உகந்தது கூட. தொடர்ந்து சுத்தம் செய்யப்படும் வாகனங்களின் ரீசேல் மதிப்பும் பொருளாதார ரீதியாக உயரும்.

நம்மிடம் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தாமல், வானிலிருந்து கொட்டும் மழையால் கார்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த முறையில் நாம் கார்களை சுத்தம் கூட செய்ய வேண்டும்.

மழை பெய்தால் கார் சுத்தமாகி விடுமா? என்று கேட்பவர்களுக்கு, ஆம், நிச்சயமாக என்பது தான் பதில். மழையில் கார் நனைந்தால் அதில் பல நேர்மறையான செயல்பாடுகளும் இருக்கின்றன.

சிறிய தூசி துகள்கள், இண்டு இடுக்கில் சிக்கியிருக்கும் தூசி, மங்கிய தோற்றம் போன்ற அழுக்கு எல்லாம் போய் புதிய பொலிவு பெரும். முக்கியமாக காருக்கான பூச்சு பிரகாசமாக தெரியும்.

இவை எல்லாவற்றையும் நீங்கள் பிழையின்றி பெறவேண்டும் என்றால், உங்கள் பகுதியில் சிறிய தூரல் விழும்போதே, காரை நிறுத்திவிட வேண்டும்.

மக்கும் தன்மை கொண்ட, பாஸ்பேட் அற்ற பொருட்களை காரின் மீது தோய்க்க வேண்டும். பிறகு இயற்கையாக தயாரிக்கப்பட்ட கார் வாஷ் பொருட்களையும் பயன்படுத்தவும்.

மழையில் நனைவது உங்களுக்கு சிரமம் என்றால், ரெயின் கோட் போன்ற உடைகளை அணிந்துக்கொண்டு, ஸ்பாஞ்ச் மற்றும் சோப்புகளுடன் காரின் எல்லா புறங்களிலும் அழுத்தம் கொடுத்து துடைக்கவும்.

பிறகு நீங்கள் விலகி வந்துவிட்டால், காரின் தோற்றத்திற்கான புதிய மேஜிக்கை மழை செய்துவிட்டு போகும்.
இயற்கையாக கிடைத்த இந்த பொலிவை சிறிது நாள் தக்கவைக்க, தினமும் ஸ்பாஞ்ச் கொண்டு காரை துடைத்தால் போதும்.

மழையில் காரை நிறுத்தி சுத்தம் செய்வதில் பல சாதகங்கள் இருப்பது போல பாதகங்களும் இருக்கின்றன. குறிப்பாக சென்னை போன்ற கடலோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கவனம் தேவை.

நீங்கள் வாழும் பகுதியில் அதிக காற்று மாசு மற்று பனி படர்வது ஏற்படுமானால், மழை நேரத்தில் கார் நனைவதை முடிந்தவரை தவிர்க்கவும்.

முக்கியமாக நமது நாட்டில் அமில மழை பெய்வதும் அவ்வப்போது நடக்கின்றன. மழையின் தாக்கத்தை உணர்ந்து வாகனங்களை பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

குறிப்பாக சென்னை போன்ற பகுதிகளில் கனமழை எதிரொலியாக பல காரின் உட்புறங்களில் வெள்ளம் மற்றும் மழைநீர் உள்ளே புக அதிக வாய்ப்புள்ளது.

அதனால் அதனை தடுக்க, சந்தையில் விற்கப்படும் உபகரணங்களை வாங்கி பயன்படுத்தவும். மேலும் பார்க்கிங் பகுதியில் கூரை இருந்தும் மழைநீர் தேங்க தொடங்கினால், அதை வெளியேற்ற சில ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

காற்று மாசு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில், காரை வெளியில் பார்க் செய்யும் வழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டாம். தட்பவெட்ப நிலை மாறி மழை பெய்தால், அது காரின் தோற்றத்திற்கும் வலிமைக்கும் பாதிப்பாக அமையும்.

அதிக காற்று மாசு குறைபாடு கொண்ட பகுதிகளில் நீங்கள் வசித்தால், காரை அடிக்கடி சுற்றுப்புறத்தை பாதிக்காமல் சுத்தம் செய்யும் மையங்களுக்கு எடுத்து செல்வது நலம்.

காரை சுத்தம் செய்வதை நீங்கள் வழக்கமாக்கிக்கொண்டால், தண்ணீரின் தேவை என்பது அளவாக அமையும்.
மேலும் வாகனங்களை சுத்தம் செய்வது அவற்றை பொலிவாக்குவதுடன், அதனுடைய ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








