Just In
- 2 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 2 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சென்னையில் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகிறது
அடுத்த வாரம் முதல் சென்னையில் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும்போது ஏற்படும் உயிரிழப்புகள் ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை பின்பற்றி தற்போது கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவதை சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் கட்டாயமாக்க முடிவு செய்துள்ளனர். அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் விபத்துக்களை கருதி இந்த சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க உள்ளனர்.
அபராதம்
முதல் முறை சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து சீட் பெல்ட் அணியாமல் வருபவருக்கு ஒவ்வொரு முறையும் ரூ.300 அபாராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரம்
சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவதன் அவசியம் குறித்து தற்போது போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அடுத்த வாரம் முதல் சீட் பெல்ட் அணிந்து கொண்டுதான் கார் ஓட்டி வர வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
பயன்
விபத்தின்போது சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே உயிர் காக்கும் காற்றுப் பைகள் மூலம் பாதுகாப்பு கிடைக்கும். இல்லையெனில், காற்றுப் பைகள் விரிந்து எஜமானரை காப்பாற்ற முயன்றாலும் பயனில்லை.
அபாயம்
அதிவேகத்தில் செல்லும்போது விபத்து நிகழ்ந்தால் காரிலிருந்து தூக்கி வீசப்படும் நிலை இருக்கிறது. இதனை சீட் பெல்ட் கண்டிப்பாக தவிர்க்கும். சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவதால் உயிரிழப்பு தவிர்க்கும் வாய்ப்பு இருப்பதோடு, பெரிய காயங்களிலிருந்தும் தவிர்க்க ஏதுவாகிறது. சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும் அதன் அவசியம் குறித்தும் ஏற்கனவே நாம் செய்திகளை வழங்கியிருக்கிறோம்.
அலட்சியம்
குறைந்த தூர பயணம் என்கிற நினைப்பிலும், அலட்சியத்தாலும் பலர் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுகின்றனர். விபத்து என்பது நாள், நேரம் பார்த்து நடப்பதில்லை. எனவே, காரில் ஏறி அமர்ந்தவுடன் உடனடியாக சீட் பெல்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.
இருந்தாலும் கட்டாயம்
விபத்து நிகழும்போது சில சமயங்களில் சீட் பெல்ட்டுகளால் தோலில் சிராய்ப்புகள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. ஆனால், உயிரைவிட இந்த காயங்கள் பெரியதாக கருத முடியாது. எனவே, சீட் பெல்ட் அணியாமல் ஹாயாக செல்வதாக நினைத்துக் கொண்டு உயிருக்கு உலை வைத்துக் கொள்ள வேண்டாம். ஓட்டுபவரை தவிர நம்பி வருபவர்களின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. நல்ல நேரம் பார்த்து விபத்துக்கள் நடப்பதில்லை. எனவே, சீட் பெல்ட் அணிந்து கொண்டு கார் ஓட்டுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...