Just In
- 1 hr ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 1 hr ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 2 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 3 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உலகின் மிக அதிக விலையுடைய போர் விமானம்: அமெரிக்கா களமிறக்குகிறது!
உலகின் மிக அதிக விலை மதிப்புடைய போர் விமானத்தை அமெரிக்கா விரைவில் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. பரவலாக நான்காம் தலைமுறை விமானங்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், ஐந்தாம் தலைமுறை அம்சங்களை கொண்ட அதிநவீன போர் விமானங்களை அமெரிக்கா ஏற்கனவே பயன்பாட்டில் வைத்திருக்கிறது.
இந்த நிலையில், ஐந்தாம் தலைமுறை விமானத்திலேயே மிக நவீனமான புதிய எஃப்-35 போர் விமானத்தை விரைவில் விமானப்படையில் சேர்க்க இருக்கிறது அமெரிக்கா. குப்பையான திட்டம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த விமானம் ஒருவழியாக அமெரிக்க விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது.
பன்முக பயன்பாடு
தரை மற்றும் வான் இலக்குகள் மீது தாக்குதல், எதிரி விமானங்களை வழிமறித்தல், வான் எல்லையை கண்காணிப்பது என பல்வேறு விதங்களிலும் செயலாற்றக்கூடியதுதான் இந்த எஃப்-35 போர் விமானம். அமெரிக்காவின் புகழ்பெற்ற லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தயாரிப்பு இது.
அதிக விலை
அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் செலவிட்டதில் அதிக விலை மதிப்புடைய ஆயுதமாக இது பார்க்கப்படுகிறது. இந்த புதிய விமானம் அமெரிக்க வான் படையின் பலத்தை புதிய கோணத்தில் எடுத்துச் செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பு
இந்த விமானத்தை 400 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் தயாரித்துள்ளனர். இது உலக வரலாற்றிலேயே மிக அதிக தொகையில் தயாரிக்கப்பட்ட போர் ஆயுதமாக கூறப்படுகிறது. பல்வேறு நிதி சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்னைகளை கடந்து இந்த விமானம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
அம்சங்கள்
ஒற்றை எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானத்தை ஒரு பைலட் இயக்க முடியும். அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் இயக்குவதற்கான சிறப்பம்ங்களை கொண்டிருக்கிறது. எதிரிகளின் ரேடார்களின் சிக்காது வடிவமைப்பையும், தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கிறது.
சிறப்பம்சங்கள்
இதன் ஹெல்மெட்டில் இருக்கும் கேமரா மூலமாக, அனைத்து கோணங்களிலும் வெளிப்புறத்தை கண்காணித்து ஓட்ட முடியும். தரை மற்றும் வான் இலக்குகளை துல்லியமாக அடிப்பதிலும் சிறப்பாக இருக்கிறதாம். எதிரிகளின் ரேடார்களில் எளிதாக தப்பிக்க முடியும் என்றும் ஒருபுறம் இதன் சிறப்பம்சங்களை அடுக்குகின்றனர்.
தாமதம்
நிதி சிக்கல் மட்டுமில்லாமல், 20414ம் ஆண்டில் பறப்பதற்கு தயார் நிலையில் இருந்த எஃப்-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அனைத்து எஃப்-35 போர் விமானங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது.
குப்பை திட்டமா?
இதுகுறித்து ஆய்வு நடத்திய பென்டகன் அதிகாரிகள், இந்த விமானத்தின் எரிபொருள் டேங்க்கிலிருந்து தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதாக அறிக்கை அளித்தனர். மேலும், இதன் வளைந்து நெளிந்து தப்பிக்கும் திறனும் குறைவாக இருப்பதாகவும், சென்சார்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த விமானத்திற்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.
மாற்றங்கள்
பென்டகன் கொடுத்த யோசனைப்படி, எரிபொருள் டேங்கில் தீப்பிடிக்காதவாறு மாற்றங்களை செய்து தற்போது மேம்படுத்தியிருக்கின்றனர். இதுதவிர, பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டன. தற்போது இந்த விமானத்தின் குறைகள் சரிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், திடீர் டிவிஸ்ட்டாக, இந்த விமானத்தை போரில் ஈடுபடுத்துவதற்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
காத்திருங்கள்...
இதுஒருபுறம் இருக்க ரஷ்யாவுடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை விமானத்தை இந்தியா தயாரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த விமானம் தயாராகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் பயன்பாட்டிற்கு வந்தால், இந்திய விமானப்படையின் பலம் உலக அளவில் பேசப்படும் விஷயமாக மாறும்.
உலகின் டாப்-10 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்!
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!