Just In
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 3 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தினால் கூடுதல் வரி!! இந்தியாவில் இல்லை... எந்த நாட்டில் தெரியுமா?
எரிபொருள் வாகனங்களில் இருந்து மெல்ல மெல்ல வாடிக்கையாளர்கள் பேட்டரி வாகனங்கள் எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.
இந்தியாவில் இந்த மாற்றம் மிகவும் குறைவான வேகத்தில் தான் நடைபெற்று வருகிறது என்றாலும், வெளிநாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது வேகமாக அதிகரித்து வருகிறது.
குறிப்பாக நமது அண்டை நாடான சீனா அடுத்த 10- 15 வருடங்களில் முழுக்க முழுக்க மின்சார போக்குவரத்தை கொண்ட நாடாக மாறவுள்ளது. நடைபெற்றுவரும் ஷாங்காய் மோட்டார் கண்காட்சி இதற்கு சான்றாகும்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் மின்சார வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில் எலக்ட்ரிக் வாகனங்களின் மீது கூடுதல் வரியை விதிக்க விக்டோரியா மாகாண அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இதன்படி எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தி வருவோர், காரின் பதிப்பை புதுப்பிக்கும் போது அந்த வாகனத்தில் பயணம் செய்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 2.5 செண்ட்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
2.5 செண்ட் என்பது இந்திய ரூபாயில் மதிப்பில் வெறும் 1.78 ரூபாய் தான் என்றாலும், மொத்தமாக கணக்கிடும்போது அதிகமாகவே இருக்கும். அதாவது ஒருவர் தனது எலக்ட்ரிக் காரில் 10,000 ஆயிரம் கிமீ பயணித்து இருந்தால் அவர் தனது காரின் புதுப்பித்தலின் போது 18 ஆயிரம் ரூபாய் வரையில் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆஸ்திரேலியாவில் சராசரியாக ஒவ்வொரு காரும் வருடத்திற்கு 13,000ல் இருந்து 14,000 கிமீ வரையில் இயக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. எலக்ட்ரிக் வாகனம் இயங்கியுள்ள தூரத்தை உரிமையாளர் தான் கவனமாக பராமரிக்க வேண்டுமாம்.
இல்லையென்றால் அதற்கும் சேர்த்து அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் விக்டோரியா மாகாண அரசு வழக்கமான எரிபொருள் வாகனங்களுக்கு இத்தகைய வரியை விதிக்க போவதில்லை. இதனால் அத்தகைய கார்களின் உரிமையாளர்கள் வாகன இயக்கத்தின் தூரத்தை கணக்கிட வேண்டிய கட்டாயம் ஏற்படாது.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறது. அத்தகைய சலுகைகள் எதுவும் விக்டோரியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதில்லை.
அவ்வாறு எதாவது சலுகைகள் வழங்கப்பட்டு வந்தாலாவது இந்த கூடுதல் வரியை சமநிலைப்படுத்தும், ஆனால் அவ்வாறு தான் எதுவும் இல்லையே. இந்த வரி திட்டத்தை ஹூண்டாய், ஃபோக்ஸ்வேகன் என விக்டோரியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துவரும் நிறுவனங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
மேலும், மெல்போர்னை சேர்ந்த செய்திதாள் ஒன்றில், ‘மோசமான மின்சார வாகன கொள்கை' என்ற தலைப்பில் விக்டோரியா அரசாங்கத்தின் இந்த கூடுதல் வரி திட்டத்தை பற்றி கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. இதனாலேயே இந்த விஷயம் மொத்த ஆஸ்திரேலியாவிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி