Just In
- 1 hr ago ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- 1 hr ago டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- 1 hr ago இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- 2 hrs ago ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
Don't Miss!
- News உங்கள் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால் என்ன செய்வது? உங்களால் வாக்களிக்க முடியுமா! எளிய விளக்கம்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Movies சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
10 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை பிஎம்டபிள்யூ கார் தொழிற்சாலை!
சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை உற்பத்தியில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அது குறித்த தகவல்களை காணலாம்.
ஜெர்மன் கார் தயாரிப்பாளரும் உலகின் முன்னோடி சொகுசு கார் உற்பத்தியாளருமான 'பிஎம்டபிள்யூ' நிறுவனத்திற்கு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் கார் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. தற்போது இந்த தொழிற்சாலை, கார் உற்பத்தியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் தனது கார் தொழிற்சாலையை நிறுவ 2005ஆம் ஆண்டு தீர்மானித்தபோது மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்கள் இதற்காக கடுமையாக போட்டியிட்டன. எனினும் தனது தொழிற்சாலையை அமைக்க ஏற்ற இடமாக தமிழ்நாட்டையே அந்நிறுவனம் தேர்ந்தெடுத்தது.
பல்வேறு மாநிலங்களும் பல்வேறு சலுகைகளை அளிக்க முன்வந்த நிலையிலும் தொழில்துறைக்கு தமிழகத்தில் நிலவும் ஆதரவான சூழல், அடிப்படை கட்டமைப்பு, ஏற்றுமதி - இறக்குமதி வசதி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ‘தெற்காசியாவின் டெட்ராய்ட்' என செல்லமாக அழைக்கப்படும் சென்னையில் இந்தத் தொழிற்சாலையை அமைக்க பிஎம்டபிள்யூ முடிவு செய்தது.
இதற்கான ஒப்பந்தம் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா முன்னிலையில் டிசம்பர் 8, 2005ஆம் ஆண்டு போடப்பட்டது. இதில் பிஎம்டபிள்யூ பொது மேலாளர்களான ரொனால்ட் ஜென்ட்ஸ், பீட்டர் ரோண்ட்னாபில் ஆகியோரும் தமிழக தொழில்துறைச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோரும் கையெழுத்திட்டனர்.
ரூ.180 கோடியில் சென்னையை அடுத்துள்ள மறைமலை நகரில் உள்ள ‘மகிந்திரா வோர்ல்டு சிட்டி' என்றழைக்கப்படும் உலகத்தரமான தொழிற்சாலை வளாகத்தில் பிஎம்டபிள்யூ தனது தொழிற்சாலையை அமைத்தது. இதுவே இந்தியாவில் உள்ள ஒரே பிஎம்டபிள்யூ தொழிற்சாலை ஆகும்.
மார்ச் 29, 2007 ஆம் ஆண்டு இங்கு கார் உற்பத்தியை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலை இதுவரையில் 57,000 கார்களை உற்பத்தி செய்துள்ளது.
பிஎம்டபிள்யூ 1 சீரீஸ், 3 சீரீஸ், க்ரேன் டூரிஸ்மோ, 5 சீரீஸ், 7 சீரீஸ், எக்ஸ்1, எக்ஸ்3, எக்ஸ்5 மற்றும் எக்ஸ்6 மாடல் கார்கள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. 2016ஆம் ஆண்டு வரை மினி கண்ட்ரிமேன் கார்களும் இங்குதான் தயாரிக்கப்பட்டு வந்தன.
இரண்டு அசெம்பிளி லேன்களை கொண்ட இந்த தொழிற்சாலையின் ஒரு ஆண்டு உற்பத்தி திறன் (இரண்டு ஷிப்ஃட்களில்) 11,000 கார்கள் ஆகும்.
10 ஆண்டுகள் நிறைவு விழாவில் இது தொடர்பாக பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா கூறுகையில், "சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலை 10ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது பெருமையளிக்கிறது, இந்திய சொகுசு கார் தேவையை சென்னை தொழிற்சாலை வருங்காலங்களில் பெரிய அளவில் பூர்த்தி செய்யப்போகிறது" என்றார்.
சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் கார் அசெம்பிளிக்காக பயன்படுத்தப்படும் பாகங்களில் "மேக் இன் இந்தியா" கொள்கையின்படி உள்நாட்டு பாகங்களின் அளவு, 2015ஆம் ஆண்டில் 50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தருணத்தை கொண்டாடுவதற்காக அப்போது இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்து 5 சீரீஸ் மாடலில் ஒன்றான 530டி கார் ஒன்றை தன் கையால் அசெம்பிள் செய்ய வைத்து பிஎம்டபிள்யூ நிறுவனம் சிறப்பித்திருந்தது நினைவுகூறத்தக்கதாகும்.
சென்னையிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இத்தொழிற்சாலையில் சுமார் 500 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் இத்தொழிற்சாலை முன்னோடியான தொழில்நுட்பங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.