Just In
- 2 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 2 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 3 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 4 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- Movies ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சீனாவிற்கு 'செக்' வைக்க அசாமில் கட்டப்படும் இந்தியாவின் மிக நீளமான பாலம்!
அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் விதத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் மிக பிரம்மாண்ட பாலம் அமைக்கப்படுகிறது. ரயில் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக இரண்டடுக்கு பாலமாக இது அமைக்கப்படுகிறது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, எல்லையோர பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த பிரம்மாண்டமான பாலத்தை பற்றிய விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.
இந்த பாலம் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 9.15 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. ஆற்றில் குறுக்கில் மட்டும் 4.94 கிமீ நீளத்துக்கு பாலம் அமைக்கப்படுகிறது. ஆனால், சாலையை இணைக்கும் பாலம் 9.15 கிமீ தூரத்துக்கு நீள்கிறது.
இதுவரையில் இந்தியாவின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை தன் வசம் வைத்திருக்கும் மும்பையில் உள்ள பந்த்ரா வோர்லி கடல் பாலம் 3.55 கிமீ நீளம் உடையது. ஆனால், அதைவிட இரு மடங்குக்கும் அதிகமான நீளத்துடன் இந்த புதிய பாலம் அமைக்கப்படுகிறது.
போகிபில் பெயரில் அழைக்கப்படும் இந்த பாலம் ரூ.938 கோடி செலவீனத்தில் கட்டப்பட்டு வருகிறது. 2002ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன.
இந்த பாலத்தின் மிக முக்கிய சிறப்பு, இது இரண்டடுக்கு பாலமாக அமைக்கப்படுகிறது. கீழே ரயில் பாதையும், மேலே வாகனங்கள் செல்வதற்கான பாலமாகவும் அமைக்கப்படுகிறது. இதன்மூலமாக, சுமார் 5 மில்லியன் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு பயன்படும்.
இந்த புதிய பாலத்தின் மூலமாக இரு மாநிலங்களுக்கு இடையிலான பயண நேரம் 4 மணிநேரம் வரை குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது தேஸ்பூர் பாலம்தான் இரு மாநிலங்களை இணைக்கம் பாலமாக இருக்கிறது.
இனி சுற்றிக் கொண்டு வருவது இந்த புதிய பாலத்தின் மூலமாக தவிர்க்கப்படும். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல், எல்லையோர பாதுகாப்பிலும் இந்த புதிய பாலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்த பாலம் அமைப்பதன் மற்றொரு முக்கிய நோக்கம், அருணாச்சலப் பிரதேச எல்லைகளில் சீன ராணுவத்தின் அத்துமீறல்களை முடிவு கட்டவும் பயன்படும். அதாவது, இப்போது அருணாச்சலப் பிரதேசத்தில் முறையான சாலை போக்குவரத்தும், விமான தளமும் இல்லாத நிலை இருக்கிறது.
ஆனால், இந்த புதிய பாலத்திலிருந்து வெறும் 20 கீமீ தொலைவில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைகளுக்கு ராணுவ துருப்புகளையும், தளவாடங்களையும் எளிதாகவும், விரைவாகவும் அனுப்ப முடியும். அசாம் மாநிலம், திப்ரூகர் நகரிலிருந்து 17 கிமீ தொலைவில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.
இந்த பாலத்தில் பீரங்கி உள்ளிட்ட கனரக ராணுவ வாகனங்கள் செல்வதற்கு ஏதுவான கட்டமைப்புடன் நவீன தொழில்நுட்ப முறையில் கட்டப்பட்டு வருகிறது. இதனால், மிக வலுவான பாலமாகவும் இது குறிப்பிடப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்த புதிய பாலம் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
உலகின் மிகவும் அபாயகரமான ரயில் வழித்தடங்கள்!
இந்திய சாலைகள் மற்றும் பாலங்கள் பற்றிய சுவாரஸ்யங்கள்!
பண்டிகைகளை அதன் ரசத்துடன் கொண்டாட புறப்படும் டிரைவ்ஸ்பார்க் டீம்!
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!