மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் சரக்கு கப்பல் சீனாவில் அறிமுகம்..!!
மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் சரக்கு கப்பல் சீனாவில் அறிமுகம்..!!
மின்சாரத்தால் இயங்கும் உலகின் முதல் சரக்கு கப்பலை சீனாவை சேர்ந்த ஹங்சூ என்ற நிறுவனம் சமீபத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

மின்சார ஆற்றலை பேட்டரிகளில் சேமித்து இயங்கும் இந்த கப்பல், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 80 கி.மீ தூரம் வரை பயணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மணிக்கு 2400 கிலோ வால்ட் வரை மின்சாரம் உற்பத்தி செய்து, அதை சேமித்து வைக்கும் அளவிற்கான பேட்டரிகள் இந்த கப்பலில் உள்ளன.

தனித்தனியாக 1000 எண்ணிக்கையிலான பேட்டரிகளை ஒன்றிணைப்பதன் காரணமாக இந்த அளவு மின்சாரத்தை கப்பலுக்கு வேண்டி சேமித்து வைக்க முடியும்.

மின்சார ஆற்றலால் இயங்கும் இந்த சரக்கு கப்பல் 2,200 டன் சரக்குடன் சுமார் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்.
ஒருவேளை கூடுதல் சரக்கை கப்பலில் ஏற்றவேண்டும் என்றால், இன்னும் கொஞ்சம் அதிக பேட்டரிகளை சேர்த்தால் போதும்.
Recommended Video


ஆட்டோ துறையில் உலகையே ஆச்சர்யப்பட செய்துள்ள ஹங்சூ சரக்கு கப்பல், பல நிறுவனங்களையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது.

இதன்மூலம் பல கப்பல் தயாரிப்பு நிறுவனங்கள், மின்சார ஆற்றலை கொண்டு செயல்படும் கப்பல்களை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பல் போக்குவரத்து முழுக்க முழுக்க பேட்டரி ஆற்றலுக்கு மாறினால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மேலும் கடல் சார் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என ஹங்சூ நிறுவன தலைவர் ஹவாங் ஜியலின் கூறினார்.

உலகிலின் வாகன போக்குவரத்து தேவைகளில் டீசல் கப்பல்கள் வெளியிடும் புகையால் தான் அதிக காற்று மாசு குறைபாடு ஏற்படுகின்றன.

கப்பல் போக்குவரத்து டீசலில் இருந்து மின்சார ஆற்றலுக்கு மாறினால், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலில் பெரிய அளவு மாற்றம் ஏற்படும்.
குறிப்பாக டீசலை விட மின்சார கப்பல்கள் இயங்குவதற்கான செலவு என்பது மிக குறைவு. மேலும் இந்த தொழில்நுட்பம் எதிர்காலங்களில் கணிசமாக குறையும்.


Click it and Unblock the Notifications








