Just In
- 25 min ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 1 hr ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 1 hr ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 2 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- News ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தென்னிந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலகின் பிதாமகன் கரிவர்தன் - சிறப்பு பகிர்வு!
மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் இந்தியாவின் தலைமகனாக போற்றப்படும் கோவைக்கு பெருமை தேடித் தந்த கரிவர்தனின் பிறந்தநாள் இன்று. அவரது சாதனைகளை போற்றும் விதமாக இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.
இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலகின் முன்னோடிகளில் ஒருவர் கோவையை சேர்ந்த கரிவர்தன். கார் பந்தய வீரர், பந்தய கார் வடிவமைப்பு நிபுணர், தொழிலதிபர் என பன்முக திறமை கொண்ட கோவை கரிவர்தன் இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர்.
அவரது சாதனைகளை போற்றும் விதத்தில், சிறப்பு பகிர்வாக இந்த செய்தியை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பெருமையுடன் வழங்குகிறது.
கோவை கரிவர்தன் குறித்து ஏற்கனவே நாம் சிறப்பு செய்தித் தொகுப்பை வழங்கி இருக்கிறோம். எனவே, அவரது சாதனைகள் பற்றி ஏற்கனவே முழுமையாக வழங்கி இருக்கிறோம். அதேநேரத்தில், இந்திய அளவில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் தமிழகத்திற்கு முக்கிய இடத்தை ஏற்படுத்தி தந்தவர் கரிவர்தன்.
கடந்த 1995ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் மரணமடைந்துவிட்டார். இருப்பினும், இன்றளவும் மோட்டார்ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் மற்றும் பந்தய வீரர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து இருக்கிறார்.
அதனை பரைசாற்றும் விதமாக, இன்று அவரது பிறந்தநாளையொட்டி, அவர் வரைந்த கார் ஓவியங்களை பெங்களூரை சேர்ந்த பிரபல கார் வடிவமைப்பு நிபுணர் பிரதாப் ஜெயராம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து நினைவு கூர்ந்துள்ளார். கரிவர்தனும், பிரதாப் ஜெயராமனும் மிக நெருங்கிய நண்பர்கள். சிறு வயதில் இருந்தே ஒன்றாக நட்புடன் பழகியவர்கள்.
இதன்மூலமாக, கரிவர்தன் மீது அவரது நண்பர்களுக்கும், மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையினருக்கும் இருக்கும் ஆர்வத்தை தெரிந்துகொள்ள முடியும். இந்த படத்தில் மிக நுட்பமான முறையில் கரிவர்தன் வரைந்திருக்கும் ஓவியங்கள் மூலம், அவருக்கு இருந்த ஈடுபாடும், ஆர்வமும் தெரிந்து கொள்ள முடிகிறது.
மேலும், பிரதாப் ஜெயராம் ட்யூனிங் செய்த அல்லது உருவாக்கிய கார்களையே கரிவர்தன் வரைந்து கொடுத்தார் என்பது கூடுதல் விசேஷ தகவல். பச்சை வண்ண கார் ஸ்டான்டர்டு சூப்பர் 10 என்ற பெயரில் ஏடி. ஜெயராம் உருவாக்கி உள்ளார். நீல வண்ண கார் ஹெரால்டு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மாடல். இதனை பிரதாப் ஜெயராம் உருவாக்கி உள்ளார்.
ஜெயராம் ஜிடி என்ற மாடல்தான் இளஞ்சிவப்பு வண்ணத்தில் பார்க்கிறீர்கள். ஜெயராம் ஸ்பெஷல் அடர் பச்சை வண்ணத்தில் இருக்கிறது. இந்த கார்களை 1979 மற்றும் 1983 காலக்கட்டங்களில் வடிவமைக்கப்பட்டதாகவும் பிரதாப் ஜெயராமன் நினைவுகூர்ந்துள்ளார்.
கரிவர்தன் மீது இந்தளவு மதிப்பு வைத்து நினைவுகூர்ந்துள்ள பிரதாப் ஜெயராம் ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். ரேவா எலக்ட்ரிக் கார் உருவாக்கத்தில் முக்கியமானவர்களில் ஒருவர். தற்போது மந்த்ரா ரேஸிங் என்ற பந்தய கார் வடிவமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வருகிறார். பிரதாப் ஜெயராம் தந்தை ஏ.டி.ஜெயராமும் கார் ட்யூனிங் செய்வதில் பெயர் பெற்றவர்.
டிராக் ரேஸில் பிரதாப் ஜெயராம் நிறுவனம் உருவாக்கிய ரேவாபூசா என்ற மாறுதல் செய்யப்பட்ட கார் பலரையும் வியக்க வைத்தது. அதாவது, ரேவா எலக்ட்ரிக் காரில் சுஸுகி சூப்பர் பைக்கின் 1,000சிசி எஞ்சினை பொருத்தி டிராக் ரேஸில் விட்டனர். 0 -100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 5 வினாடிகளில் எட்டி அசர அடித்தது. பாபி என்று செல்லமாக அழைக்கப்படும் பிரதாப் ஜெயராம் மகன் சரண் ஜெயராம்தான் இந்த காரை உருவாக்கியதில் முக்கிய பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அதாவது, மூன்றாவது தலைமுறையாக மோட்டார்ஸ்போர்ட்ஸ் உலகில் ஜெயராம் குடும்பத்தின் பங்களிப்பு தொடர்கிறது.
இவர் போன்று மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் தீவிர ஈடுபாடுடைய பலரும் கரிவர்தன் மீது அளப்பரிய மதிப்பை வைத்துள்ளனர். இவர் மட்டுமல்ல, இன்றைக்கு உலக அளவில் இந்திய மோட்டார் பந்தய துறைக்கு தூதுவர்களாக விளங்குபவர்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தவர் கரிவர்தன்.
ஆம், இந்தியாவின் முன்னணி கார் பந்தய வீரர்களான நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் மற்றும் அர்மான் இப்ராஹீம் போன்ற இன்றைய தலைமுறை கார் பந்தய வீரர்களுக்கு மிக குறைவான விலையில் ரேஸ் கார்களை வடிவமைத்து கொடுத்து அவர்களுக்கு ரேஸ் உலகில் முக்கிய இடத்தை பிடிக்க உதவியவர்.
கரி என்று செல்லமாக அழைக்கப்படும் கரிவர்தன் கோவை லெட்சுமி மில்ஸ் அதிபரின் புதல்வர். 1954ம் ஆண்டு கோவையில் பிறந்த கரிவர்தன் பள்ளிப்படிப்பையும், தொழில்நுட்பக் கல்வியையும் பிஎஸ்ஜி கல்லூரியில் முடித்தார். அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் படித்தார்.
கரிவர்தனின் அளப்பரிய பணிகளை உலகுக்கு பரைசாற்றும் விதத்திலேயே, கோவை ரேஸ் டிராக்கிற்கு அவரது பெயரே சூட்டி பெருமைப்படுத்தி உள்ளனர். இந்திய ரேஸ் வரலாற்றில் தவிர்க்க முடியாதவர் கரிவர்தன் என்றால் மிகையில்லை.