Just In
- 18 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 40 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 1 hr ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 5 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
Don't Miss!
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- News முஸ்லீம்களுக்கு சொத்து..மோடியின் நச்சுக் கருத்து..! தேர்தல் ஆணையத்துக்கு பறந்த புகார்..திருமா சுளீர்
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சி.எஸ்.சந்தோஷுக்கு ரியாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை... பூரண நலம்பெற ரசிகர்கள் பிரார்த்தனை!
டக்கார் ராலியில் நேற்று நடந்த விபத்தில் காயமடைந்த இந்திய வீரர் சி.எஸ்.சந்தோஷுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் விபத்தில் சிக்கியதை முதலில் பார்த்த ஹஸ்க்வர்னா அணி வீரர் அவருக்கு முதலுதவி கொடுத்தது தெரிய வந்துள்ளது.
2021ம் ஆண்டுக்கான டக்கார் ராலி போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு போட்டியில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்து வந்தனர்.
இந்த நிலையில், நான்காவது நாளான நேற்று ஸ்டேஜ்-4 போட்டி நடந்தது. இதில், எதிர்பாராத விதமாக ஹீரோ மோட்டார்ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கு கொண்டு வரும் சி.எஸ்.சந்தோஷ் விபத்தில் சிக்கி தலையில் காயமடைந்தார்.
அவர் மீட்கப்பட்டு ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனிடையே, சந்தோஷ் விபத்தில் சிக்கியதை முதலில் பார்த்து உதவி செய்த ஹஸ்க்வர்னா அணி வீரர் பால் ஸ்பைரிங்ஸ் முக்கியத் தகவல்களை ராலிமானியாக்ஸ் தளத்திடம் தெரிவித்துள்ளார்.
அதில், போட்டி துவங்கிய இடத்தில் இருந்து 135 கிமீ தொலைவில் உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு சந்தோஷ் மற்றும் ஹஸ்க்வரனா அணியின் மற்றொரு வீரர் மருஷியோ கெரினி ஆகியோர் விபத்தில் சிக்கி அந்த வழியில் இருபுறமும் கீழே விழுந்து கிடந்தனர்.
அப்போது, மருஷியோ கெரினி உடனடியாக எழுந்துவிட்டார். ஆனால், சந்தோஷ் எழுந்திருக்கவில்லை. உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர், சந்தோஷுக்கு இதயத் துடிப்பை மீட்பதற்கான முதலுதவி அளித்தோம். அடுத்த 15 நிமிடங்களில் மீட்புப் படையினர் 3 ஹெலிகாப்டர்களில் அங்கு வந்துவிட்டனர். அவர்களிடம் சந்தோஷை ஒப்படைத்தபோது, அவருக்கு இதயத் துடிப்பு இருந்ததால் நிம்மதி அடைந்தேன்.," என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலமாக அல் துவதிமியில் உள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார். தலையில் காயம் இருந்தது கண்டறியப்பட்டதால், அங்கிருந்து ரியாத்தில் உள்ள சவூதி ஜெர்மன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தலையில் அசைவு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு, அவருக்கு மயக்க மருந்து கொடுத்து செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. அதன்பிறகு காயத்தின் தன்மை அறிந்த பிறகு மேல் சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று மோட்டார் பந்தய ரசிகர்கள் மற்றும் வீரர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
-
இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!