ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் போன்ற வாகனம் தொடர்பான ஆவணங்களின் ஒரிஜினலை கேட்டு, வசூல் வேட்டையில் ஈடுபடும் போலீசாருக்கு ஆப்பு வைக்கும் வகையிலான உத்தரவை அரசு வெகு விரைவில் பிறப்பிக்கவுள்ளது.

By Arun

லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் போன்ற வாகனம் தொடர்பான ஆவணங்களின் ஒரிஜினலை கேட்டு, வசூல் வேட்டையில் ஈடுபடும் போலீசாருக்கு ஆப்பு வைக்கும் வகையிலான உத்தரவை அரசு வெகு விரைவில் பிறப்பிக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

வாகன தணிக்கையில் ஈடுபடும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் ஆகியோர் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ், வாகனத்தின் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் (ஆர்சி புத்தகம்), இன்சூரன்ஸ், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் ( PUC சர்டிபிகேட்) உள்ளிட்ட ஆவணங்களை சோதனையிடுவது வழக்கம்.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

ஆனால் இந்த ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை, அதிகாரிகளும், போலீசாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது. ஏனெனில் மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும் மிக மிக முக்கியமானவை.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

அந்த ஆவணங்களின் ஒரிஜினலை எந்நேரமும் வாகனங்களில் வைத்து கொண்டு பயணிக்க முடியாது. ஏனெனில் இந்த ஆவணங்கள் தொலைந்து விட்டால், அதனை மீண்டும் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நிலவி வருகின்றன.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

எந்த வகையான வாகனம் ஓட்டினாலும், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு அமல்படுத்தியது. இதை பயன்படுத்தி கொண்டு தமிழகம் முழுவதும் ஒரு சில போலீசார் வசூல் வேட்டையில் இறங்கினர்.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

எனவே ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உத்தரவிட வலியுறுத்தி, லாரி டிரைவர்கள் சம்மேளனத்தினர் உள்பட வாகன ஓட்டிகள் பலர் நீதிமன்ற படியேறிய விஷயம் அனைவரும் அறிந்ததே.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

போலீசாரின் வசூல் வேட்டை இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், ஒரிஜினல் ஆவணம் தொலைந்து விட்டால், அதை மீண்டும் பெறுவதில் உள்ள சிக்கல்கள்தான், வாகன ஓட்டிகளையும், சமூக ஆர்வலர்களையும் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு குரல் கொடுக்க தூண்டியது.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

எனவே லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை, வாகன தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளும், போலீசாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற குரல் வாகன ஓட்டிகள் மத்தியில் மிக நீண்ட நாட்களாகவே ஒலித்து கொண்டு வருகிறது.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கோஷம் நாடு முழுவதும் ஒலித்து கொண்டிருக்கும் வேளையில், வாகனம் தொடர்பான ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? என்றும் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

இதற்கு மத்திய அரசு தற்போது செவிமடுத்துள்ளது. வாகனம் தொடர்பான ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை, போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீசாரும் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதி மிக விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரு தினங்களில் வெளியாகலாம் என்ற தகவல்கள் வந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

இந்த விதி அமல்படுத்தப்பட்டு விட்டால், டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ், பியூசி சர்டிபிகேட் உள்பட வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை அதிகாரிகளும், போலீசாரும் கட்டாயமாக ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

எனவே முக்கியமான ஆவணங்களின் ஒரிஜினல்களை வீட்டிலேயே பத்திரமாக வைத்து கொள்ள முடியும். அதற்கு பதிலாக அந்த ஆவணங்களை போட்டோ அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட சாப்ட் காப்பி போன்ற டிஜிட்டல் வடிவில் செல்போனில் பதிவேற்றி வைத்து கொள்ளலாம்.

ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது

தேவைப்படும் நேரங்களில், அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் செல்போனில் உள்ள டிஜிட்டல் வெர்ஷனை மட்டும் காட்டினால் போதுமானது. ஒரிஜினல்தான் வேண்டும் என யாரும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. வசூல் வேட்டையிலும் இறங்க முடியாது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

More from DriveSpark

Article Published On: Tuesday, July 17, 2018, 13:33 [IST]
English summary
Digital Versions of Vehicle Documents on Mobile Phone. Read in tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+