Just In
- 9 min ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 1 hr ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 7 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 7 hrs ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஓம் டிஜிட்டல் இந்தியா நமஹ! லைசென்ஸ், ஆர்சி புக் கேட்டு இனி உங்களிடம் போலீஸ் வசூல் வேட்டையாட முடியாது
லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் போன்ற வாகனம் தொடர்பான ஆவணங்களின் ஒரிஜினலை கேட்டு, வசூல் வேட்டையில் ஈடுபடும் போலீசாருக்கு ஆப்பு வைக்கும் வகையிலான உத்தரவை அரசு வெகு விரைவில் பிறப்பிக்கவுள்ளது.
லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் போன்ற வாகனம் தொடர்பான ஆவணங்களின் ஒரிஜினலை கேட்டு, வசூல் வேட்டையில் ஈடுபடும் போலீசாருக்கு ஆப்பு வைக்கும் வகையிலான உத்தரவை அரசு வெகு விரைவில் பிறப்பிக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாகன தணிக்கையில் ஈடுபடும் ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள், போக்குவரத்து போலீசார் ஆகியோர் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ், வாகனத்தின் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் (ஆர்சி புத்தகம்), இன்சூரன்ஸ், மாசு கட்டுப்பாடு சான்றிதழ் ( PUC சர்டிபிகேட்) உள்ளிட்ட ஆவணங்களை சோதனையிடுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை, அதிகாரிகளும், போலீசாரும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுத்து வருகிறது. ஏனெனில் மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும் மிக மிக முக்கியமானவை.
அந்த ஆவணங்களின் ஒரிஜினலை எந்நேரமும் வாகனங்களில் வைத்து கொண்டு பயணிக்க முடியாது. ஏனெனில் இந்த ஆவணங்கள் தொலைந்து விட்டால், அதனை மீண்டும் பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நிலவி வருகின்றன.
எந்த வகையான வாகனம் ஓட்டினாலும், ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு அமல்படுத்தியது. இதை பயன்படுத்தி கொண்டு தமிழகம் முழுவதும் ஒரு சில போலீசார் வசூல் வேட்டையில் இறங்கினர்.
எனவே ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உத்தரவிட வலியுறுத்தி, லாரி டிரைவர்கள் சம்மேளனத்தினர் உள்பட வாகன ஓட்டிகள் பலர் நீதிமன்ற படியேறிய விஷயம் அனைவரும் அறிந்ததே.
போலீசாரின் வசூல் வேட்டை இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், ஒரிஜினல் ஆவணம் தொலைந்து விட்டால், அதை மீண்டும் பெறுவதில் உள்ள சிக்கல்கள்தான், வாகன ஓட்டிகளையும், சமூக ஆர்வலர்களையும் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு குரல் கொடுக்க தூண்டியது.
எனவே லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை, வாகன தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகளும், போலீசாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற குரல் வாகன ஓட்டிகள் மத்தியில் மிக நீண்ட நாட்களாகவே ஒலித்து கொண்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கோஷம் நாடு முழுவதும் ஒலித்து கொண்டிருக்கும் வேளையில், வாகனம் தொடர்பான ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்? என்றும் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு மத்திய அரசு தற்போது செவிமடுத்துள்ளது. வாகனம் தொடர்பான ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை, போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீசாரும் கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதி மிக விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இரு தினங்களில் வெளியாகலாம் என்ற தகவல்கள் வந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த விதி அமல்படுத்தப்பட்டு விட்டால், டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புத்தகம், இன்சூரன்ஸ், பியூசி சர்டிபிகேட் உள்பட வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களின் டிஜிட்டல் வெர்ஷனை அதிகாரிகளும், போலீசாரும் கட்டாயமாக ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
எனவே முக்கியமான ஆவணங்களின் ஒரிஜினல்களை வீட்டிலேயே பத்திரமாக வைத்து கொள்ள முடியும். அதற்கு பதிலாக அந்த ஆவணங்களை போட்டோ அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட சாப்ட் காப்பி போன்ற டிஜிட்டல் வடிவில் செல்போனில் பதிவேற்றி வைத்து கொள்ளலாம்.
தேவைப்படும் நேரங்களில், அதிகாரிகளிடமும், போலீசாரிடமும் செல்போனில் உள்ள டிஜிட்டல் வெர்ஷனை மட்டும் காட்டினால் போதுமானது. ஒரிஜினல்தான் வேண்டும் என யாரும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. வசூல் வேட்டையிலும் இறங்க முடியாது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!