Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 3 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உச்ச நீதிமன்ற உத்தரவு... இ-ரிக்ஷா பதிவை நிறுத்தியது டெல்லி... என்ன காரணம் தெரியுமா?
உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக மின்சார ஆட்டோ ரிக்ஷா பதிவை டெல்லி அரசு நிறுத்தியுள்ளது. இதற்கான முழு காரணத்தையும் இப்பதிவில் காணலாம்.
உலகம் முழுவதும் மின் வாகன ஊக்குவிப்பு மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியாவிலும் இந்த நிலை சற்று தீவிரமெடுத்தே காணப்படுகின்றது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் மின் வாகனங்களை பதிவு செய்வதற்கு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை கார் அண்ட் பைக் தளம் வெளியிட்டிருக்கின்றது.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் கனிஷ்க் சின்ஹா. இவர் ஓர் வழக்குரைஞர் ஆவார். மின் வாகனங்களைப் பதிவு செய்வதற்கான உரிமத்தை இவர் பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. 20 வருடங்களுக்கான உரிமத்தை இவர் பெற்றிருக்கின்றார்.
ஆகையால், எந்தவொரு நிறுவனமோ அல்லது மாநிலமோ அல்லது யூனியன் பிரதேசமோ எதுவாக இருந்தாலும் இவரின் ஒப்புதலைப் பெறுவது அவசியம். இதையே தற்போது உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கும் உத்தரவிலும் கூறப்பட்டுள்ளது. கனிஷ்க் சின்ஹா தற்போது தனது உரிமத்தை அமித் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு குத்தைக்குக் கொடத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, எந்தவொரு மின் வாகன வாடிக்கையாளரும் தங்களது வாகனத்தை பதிவு செய்ய அமித் இன்ஜினியரிங் நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. ஆனால், இதனை ஒரு சில மாநில அரசுகள் பின்பற்றவில்லை என தெரிகின்றது.
இதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே தற்காலிமாக மின் வாகனங்களின் பதிவிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவைத் தொடர்ந்து டெல்லி அரசாங்கம் தனது புதிய மின் வாகன பதிவை நிறுத்தியுள்ளது. குறிப்பாக, இ ரிக்ஷாக்களின் பதிவு முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திலும் இதே தடை உத்தரவு தற்போது செயல்பாட்டில் இருக்கின்றது. விரைவில் பிற மாநிலங்களிலும் இந்த நிலை தென்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில மாநில அரசுகள் மின்சார வாகனத்தைப் பயன்பாட்டில் கொண்டு வருவதில் அதி தீவிரம் காண்பித்து வருகின்றது.
அந்தவகையில், டெல்லி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை மிக அதி தீவிரமானதாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, அது அண்மையில் தொடங்கி வைத்த ஸ்விட்ச் டெல்லி திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக பல்வேறு சிறப்பு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது.
வரி சலுகை, விலை தள்ளுபடி, பதிவு கட்டணம் ரத்து மற்றும் மானியம் போன்ற பல்வேறு சலுகைகளை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு செய்து வருகின்றது. இவரின் இந்த செயலைக் கண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கமல் ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்தையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!