Just In
- 1 hr ago சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- 6 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 6 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 7 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பறக்கும் டாக்சியை களமிறக்கும் ஹூண்டாய்... இது வந்தா ஆபிஸ் ஈஸியா போகலாம்!
நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற பறக்கும் டாக்சியை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த 5 சீட்டர் பறக்கும் டாக்சி குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்சி மாடலை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்க உள்ளது. இந்த புதிய பறக்கும் டாக்சி வாகனத்தை உருவாக்குவதற்காக சூப்பர்நல் (Supernal) என்ற பெயரில் புதிய நிறுவனத்தையைும் கடந்த ஆண்டு ஸ்தாபனம் செய்தது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு சூப்பர்நல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சூப்பர்நல் நிறுவனம் உருவாக்கும் புதிய பறக்கும் டாக்சி சுற்றச்சூழலுக்கு உகந்ததாக பேட்டரியில் இயங்குவதுடன் முழுவதும் தானியங்கி கட்டுப்பாட்டு முறையில் செல்லும். அதாவது, நகர்ப்புறத்தில் டாக்சியாக பயன்படுத்தும் வகையில் இந்த புதிய பறக்கும் வாகனம் உருவாக்கப்பட உள்ளது.
இந்த பறக்கும் டாக்சி வாகனத்தில் 5 பேர் பயணிக்கலாம். கடந்த ஆண்டு லாஸ் வேகாஸில் நடந்த சிஇஎஸ் கண்காட்சியில் இந்த பறக்கும் வாகனத்தின் கான்செப்ட் மாடலானது எஸ்ஏ-1 என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இது தரையிலிருந்து செங்குத்தாக மேலே எழும்பி பறக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.
இதனால், நகர்ப்புற போக்குவரத்தில் மிக முக்கிய பங்காற்றும் திறன் வாய்ந்ததாக இருக்கும். இந்த பறக்கும் டாக்சி வாகனத்திற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக இதர தனியார் மற்றும் அரசு பங்குதாரர்களுடன் முயற்சிகளை சூப்பர்நல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
பஸ் நிலையம், டாக்சி ஸ்டான்டு இருப்பது போன்று குறிப்பிட்ட இடங்களில் இருந்து இந்த பறக்கும் டாக்சி வாகனங்களை இயக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், நகரின் முக்கிய நகரங்களை மிக எளிதாக சென்றடையும் வாய்ப்பை பெற முடியும்.
வரும் 2028ம் ஆண்டு பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் நிறுவனத்தின் பறக்கும் டாக்சி தயாரிப்பு பிரிவான சூப்பர்நல் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக நகர்ப்புறத்தில் பறக்கும் டாக்சி சேவையை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, வரும் 2030ம் ஆண்டு நகரங்களுக்கு இடையே பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளதாக சூப்பர்நல் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, அடுத்த சில ஆண்டுகளில் பறக்கும் டாக்சி வாகன பயன்பாடு கனவு மெய்ப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?