Just In
- 30 min ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 49 min ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 3 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- 3 hrs ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
Don't Miss!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Movies Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வல்லரசுகளின் வயிற்றிலேயே புளியை கரைக்கும் நவீன ஏவுகணையை வாங்கும் இந்தியா!
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளையே ஒரு கணம் திகைக்க செய்யும் வல்லமை பொருந்திய புதிய எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணையை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது இந்தியா. இதன்மூலமாக, சீனா, பாகிஸ்தான் போன்ற தொல்லை கொடுத்து வரும் அண்டை நாடுகளை அடக்கி வைக்க வழிபிறக்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எஸ்-400 ஏவுகணையுடன், அதனை செலுத்துவதற்கு தேவையான வாகனம், ஏவு கருவிகளும் அடங்கிய 5 தொகுப்புகளை இந்தியா வாங்குகிறது. அண்டை நாடுகளிடமிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எளிதாக கையாளும் திறன் கொண்ட இந்த அதிநவீன ஏவுகணை மற்றும் அதன் தொகுப்பு அமைப்பு குறித்த சிறப்புத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.
உலக அளவில் மிக மிக நவீன ரக ஏவுகணைதான் எஸ்-400 டிரையம்ப். தரையிலிருந்து வான் இலக்குகளை துல்லியமாக தகர்க்கும் திறன் கொண்டது. 2007ம் ஆண்டிலிருந்து ரஷ்ய ராணுவ பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தி வந்த எஸ்-300 ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட மாடல்தான் இந்தியா வாங்க இருக்கும் எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணை.
எஸ்-400 டிரையம்ப் ஏவுகணைகளுடன், அதற்கு தேவையான 5 ஏவு தள வாகனங்களையும், அதற்கான கருவிகளையும் இந்தியா வாங்குகிறது. இதில், மூன்று ஏவுதள வாகனங்களை பாகிஸ்தான் எல்லை நோக்கியும், இரண்டு ஏவுதள வாகனங்களை சீனா நோக்கியும் நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்திருக்கிறது.
இந்த ஏவுகணையானது, ஒரே நேரத்தில் நூறு இலக்குகளை கூட கண்காணித்து தாக்கும் வல்லமை கொண்டது. ஏவுகணை மட்டுமல்ல, இதற்கான தானியங்கி ஏவு தளமாக செயல்படும் வாகனத்தில் இருக்கும் நவீன ரேடார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
வான் வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயலும் அதிவேக ஏவுகணைகள் மற்றும் ஸ்டீல்த் ரகத்தை சேர்ந்த ரேடார் கண்களுக்கு புலப்படாத விசேஷ வடிவமைப்பு கொண்ட விமானங்களை கூட இந்த ரேடார்கள் கண்டறிந்து இடைமறித்து தாக்கும்.
அதாவது, 600 கிமீ சுற்றளவிலும், 100 கிமீ உயரத்தில் எந்த திசையிலிருந்தும் வரும் எதிரிகளின் ஏவுகணைகள், ஆள் இல்லா விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பொசுக்கித் தள்ளிவிடும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை 40 கிமீ, 120கிமீ, 250கிமீ மற்றும் 400 கிமீ பாய்ந்து செல்லும் திறன் கொண்ட மாடல்களில் தயாரிக்கப்படுகிறது.
அமெரிக்காவே அஞ்சும் ஏவுகணை என்று குறிப்பிடுவதற்கு காரணம். அந்நாட்டின் ஸ்டீல்த் ரக போர் விமானமான எஃப்-15 விமானத்தையே கூட இந்த ஏவுகணை கண்டறிந்து சுட்டுத் தள்ளும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா மொத்தம் 6,000 எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணைகளையும், அதற்கான 5 ஏவு வாகனங்களையும் வாங்க இருக்கிறது. ஒரு ஏவு வாகனத்தில் ஏவுகணையை செலுத்துவதற்கான 8 லாஞ்சர்கள், ஒரு நடமாடும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் 16 ஏவுகணைகளை பொருத்தி வைப்பதற்கான வசதியை கொண்டிருக்கும்.
600 கிமீ சுற்றளவுக்கான இலக்குகளை கண்காணிக்கும். குறைந்தது 2 கிமீ முதல் 400 கிமீ தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்குகளை கூட துல்லியமாக தாக்கி அழிக்கும். அதாவது, மணிக்கு 17,000 கிமீ வேகத்தில் பறக்கும் வல்லமை கொண்டது. லாஞ்சர் மூலமாக 30 மீட்டர் உயரத்திற்கு ஏவப்படும். பின்னர் ஏவுகணையில் இருக்கும் ராக்கெட் எஞ்சின் உயிர்பெற்று இலக்கை நோக்கி செல்லும்.
இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் மூலமாக இந்தியாவின் பாதுகாப்பு மிக முக்கிய கட்டத்தை அடையும்.
எஸ்-400 டிரையம்ஃப் ஏவுகணை மற்றும் அதற்கான உபகரணங்களை ரூ.40,000 கோடி செலவில் வாங்குகிறது இந்தியா. ஏற்கனவே, தைவான் நாட்டை மிரட்டுவதற்காக 6 எஸ்-400 ஏவுகணை மற்றும் அதற்கான உபகரணங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு சீனா ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- சத்தமில்லாமல் சர்ஜிக்கல் ஸ்டிரைக்... காரியத்தை கச்சிதமாக முடிக்க உதவிய துருவ்!
- இந்திய விமானப்படையில் சேர க்யூவில் காத்திருக்கும் சாப் கிரிபென் போர் விமானத்தின் சிறப்புகள்!
- பாலத்திற்கு அடியில் மிக் விமானத்தை செலுத்திய துணிச்சலான போர் விமானி!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!