Just In
- 35 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 46 min ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- 3 hrs ago துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Movies ஹீரோ மாதிரி இருக்கும் அப்பாஸ் மகன்.. களத்தில் இறங்கிடுவாரோ.. ட்ரெண்டாகும் புகைப்படம்
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
காஷ்மீரில் 11 கிமீ நீள குகை பாதையில் ரயில் சேவை துவங்கியது!
இந்தியாவின் மிக நீளமான குகை வழிப் பாதையில் நேற்று முதல் ரயில் சேவை துவங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன்சிங் இந்த ரயில் சேவையை துவங்கி வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்றார்.
ஆசியாவின் இரண்டாவது நீளமான குகை வழி ரயில் பாதையான இதனை புதிய தொழில்நுட்பம் மூலமும், பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பனிஹல்-காசிகுந்த் பகுதிகளை இந்த ரயில் பாதை இணைக்கிறது. இரு பகுதிகளுக்கும் தரை வழியாக 35 கிமீ தூரம் செல்ல வேண்டியிருந்த தூரம் தற்போது ரயில் பாதை மூலம் 18 கிமீ ஆக குறைந்துள்ளது.
திட்ட மதிப்பு
ரூ.1,691 கோடி மதிப்பீட்டில் இந்த ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குகை ரயில் பாதை
பீர் பஞ்சால் மலை தொடர்களில் இந்த குகை வழி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள்
பிரபல ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம் இந்த குகை வழிப் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தியது.
2005ல் துவக்கம்
மலையை குடைந்து ரயில் பாதை அமைக்கும் பணிகள் 2005ம் ஆண்டு துவங்கியது.
அயராத உழைப்பு
1,300 தொழிலாளர்கள், 150 பொறியாளர்களின் இரவு பகல் பாராத 7 ஆண்டு கால அயராத உழைப்பில் இந்த புதிய ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில்நுட்பம்
இந்தியாவில் முதன்முறையாக New Austrian Tunnelling Method (NATM) என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மலையை குடைந்துள்ளனர்.
கடும் சவால்கள்
மோசமான சீதோஷ்ண நிலையில் கூட இடைவிடாது நடந்த கட்டுமானப் பணிகளால் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் அருண் கரம்பெல்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஏனெனில், மலையை குடைவதில் பல்வேறு தொழில்நுட்ப சவால்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு வசதி
இந்த குகை பாதை முழுவதும் தண்ணீர் தடுப்பு மற்றும் தீ தடுப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
குகைக்கு கீழே குகை
இந்த குகை ரயில் பாதையின் 440 மீட்டர் தூரம் ஜவஹர் குகைப் பாதைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் முதல் ரயில்
காஷ்மீரில் முதன்முதலாக 2008ம் ஆண்டில்தான் முதல் ரயில் சேவை துவங்கப்பட்டது. இது அம்மாநில மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியது. அந்த ரயில் சேவையையும் பிரதமர் மன்மோகன்சிங்தான் துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் வரவேற்பு
காஷ்மீரில் இந்த புதிய ரயில் பாதையில் இன்றுமுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் சேவைக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!