Just In
- 4 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 4 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 7 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 7 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
8 புதிய பைலட் பயிற்சி மையங்களை அமைக்க அனுமதி... மத்திய அரசின் அதிரடி திட்டம்
வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறுவதை தவிர்க்கும் வகையில், 8 புதிய பைலட் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் அதிக விமானிகளை உருவாக்கும் முயற்சியாகவும் இந்த திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
இந்தியாவில் விமானப் போக்குவரத்து துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதே அளவுக்கு விமானிகள், விமான ஊழியர்களுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ஆனால், குறைந்த எண்ணிக்கையிலேயே விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி மையங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.
இதனால், விமானி பயிற்சி பெறுவதற்கு பலரும் அயல்நாடு செல்லும் சூழல் இருக்கிறது. இதனை தவிர்க்கும் வகையில், இந்தியாவிலேயே அதிக விமானிகளை உருவாக்கும் வகையில், 8 புதிய பயிற்சி மையங்களை அமைக்கப்பட உள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த 8 புதிய பைலட் பயிற்சி மையங்களும் 5 விமான நிலையங்களில் அமைக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி, கலபுர்கி, மஹாராஷ்டிர மாநிலம் ஜல்கான், மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் கஜுராஹோ, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள லிலாபரி ஆகிய விமான நிலையங்களில் இந்த புதிய பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையங்களானது சீதோஷ்ண நிலை மற்றும் ராணும் மற்றும் பொது விமானப் போக்குவரத்து குறைவாக இருப்பதால், பைலட் பயிற்சிக்கு சாதகமான சூழல் இருப்பதால் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 8 புதிய விமான பயிற்சி மையங்கள் மூலமாக உலக அளவில் விமானிகளுக்கான பயிற்சி கேந்திரமாக இந்தியா மாறுவதற்கான சூழல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பைலட் பயிற்சி பெறுவதற்கான அவசியத்தை தவிர்க்க உதவுவதுடன், அண்டை நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதனால், உலக அளவில் விமானி பயிற்சி துறையில் இந்தியா முக்கிய இடத்தை பெறும்.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விமான நிலை ஆணையம், கடந்த ஆண்டு இந்த புதிய பயிற்சி மையங்களை அமைப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது.
இதன்படி, பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தன. இதில், ஏசியா- பசிஃபிக், ஜெட்செர்வ், ரெட்பேர்டு, சம்வர்தனே மற்றும் ஸ்கைநெக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு புதிய பயிற்சி மையங்களை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. இந்த துறையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுபவம், கட்டமைப்பு உள்ளிட்டவற்றின அடிப்படையில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
விமானி பயிற்சி மையங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு ஆண்டு வாடகை கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டதுடன், விமான நிலைய உரிமத் தொகையும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?