Just In
- 13 min ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 47 min ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 1 hr ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 1 hr ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
Don't Miss!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Movies இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப்பான் அரசு ஒப்புதல்
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு நடத்துவதற்கு ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், இந்த திட்டத்துக்கு பெரும் முதலீடு செய்யவும் அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த திட்டத்துக்கு பெரும்பான்மையான முதலீட்டை செய்ய தயாராக இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
மும்பை-அகமதாபாத் இடையே முதல் புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ஏற்கனவே பிரான்ஸ் அரசும் ஒப்புதல் தெரிவித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
500 கிமீ தூரத்துக்கு அமைக்கப்படும் இந்த பாதைக்கு ஒரு டிரில்லியன் யென் செலவாகும் என முதற்கட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தில் முதலீடு செய்ய ஜப்பானுக்கும், பிரான்ஸுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், மன்மோகன்சிங் சுற்றுப்பயணத்தின்போது, புல்லட் தொழில்நுட்பத்தை வழங்குவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
ரயில் பாதை அமைத்தல், ரயில் பெட்டிகள், தொழில்நுட்பம், முதலீடு ஆகியவற்றை ஜப்பான் அரசு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முதல் ரயில் பாதையாக அமையும் இந்த வழித்தடத்தில் 300 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகளை இணைந்து மேற்கொள்ள ஜப்பானும், இந்தியாவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ஆய்வுப் பணிகளை நிறைவு செய்து இறுதி திட்ட அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
மும்பை-அகமதாபாத் இடையில் புல்லட் ரயில் சேவை துவங்கப்பட்டால், இருநகரங்களுக்கு இடையிலான பயண நேரம் தற்போது இருக்கும் 8 மணி நேரத்தில் இருந்து இரண்டு மணிநேரமாக குறையும்.
இதுதவிர, டெல்லி-மும்பை, பெங்களூர்-சென்னை-திருவனந்தபுரம் உள்ளிட்ட 7 வழித்தடங்களில் புல்லட் ரயில் விடுவதற்காக ரயில்வே துறை பட்டியலிட்டுள்ளது. இதில், சில வழித்தடங்களில் முதற்கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன. மும்பை-அகமதாபாத் திட்டத்தில் ஒரு திடமான முடிவு எடுக்கப்பட்டவுடன், இந்த திட்டங்களை ரயில்வே துறை தீவிரமாக கையிலெடுக்கப்படும் என தெரிகிறது.
புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த முதல் படம்.
புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த படம் 2.
புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த படம் 3.
புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த படம் 4.
புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த படம் 5.
புல்லட் ரயிலில் இருக்கை அமைப்புகள் குறித்த படம் 6.