கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை அமையும் பகுதி இதுதான்..!!

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை அமையும் பகுதி இதுதான்..!!

By Azhagar

கடல் நீரால் முழுவதுமாக சூழ்ந்திருக்க, அங்கு ஒரு விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதி நம் நாட்டில் தான் இருக்கிறது என்றால் ஆச்சர்யமானது தான்.

ஆம், விமானம் ஓடுபாதையை அடைவதற்கு தரையிரங்கும் முன் விமானத்தில் இருந்து பார்த்தால், சுற்றிலும் கடல் தான் தெரியும்.

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை..!!

அகத்தி வானூர்தித் தளம், இந்திய எல்லையான லட்சத்தீவு ஒன்றிய பகுதியில் அமைந்துள்ளது. அங்கு தான் இப்படிப்பட்ட கடல்சூழ் விமானம் ஓடுபாதை கட்டமைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark
கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை..!!

உலகில் உள்ள அதிசிய விமான நிலையங்களில் ஒன்றாகவும் லட்சத்தீவு அகட்டி வானூர்தித் தளம் அடையாளப்படுத்தப்படுகிறது.

தற்போது இந்த விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்ய இந்திய விமான போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை..!!

அதன்படி, கடல் சூழ் விமான ஓடுபாதையை ஏ.ஆர்.டி ரக விமானங்கள் தரையிறங்க வசதியாக வலுவூட்டப்பட்ட சிமெண்டுகளை கொண்டு கடலுக்கு அடியில் இருந்து தூண்கள் கட்டமைக்கப்படவுள்ளன.

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை..!!

36 தீவுகளை கொண்ட பகுதியாக லட்சத்தீவு உள்ளது. அருகில் உள்ள இரண்டு தீவுகளை இணைப்பதற்காக முதலில் திட்டங்கள் தீட்டப்பட்டன.

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை..!!

தற்போது அதை கிடப்பில் போட்டு, அகட்டி விமான ஓடுபாதையை மேலும் விரிவுப்படுத்த இந்திய விமான போக்குவரத்து துறை மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை..!!

இதுப்பற்றி பேசிய இந்திய விமான துறையின் மூத்த அதிகாரி ஒருவர், சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடிய காரணத்தினால் இரு தீவுகளை இணைக்கும் பணி கைவிடப்பட்டது என்றார்.

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை..!!

மேலும் அவர், கடலில் ஆழம் நிறைந்த பகுதியில் வலுவான தூண்கள் அமைக்கப்பட்டு, வலுவூட்டப்பட்ட சிமெண்டுகளால் ஓடுபாதை கட்டமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்றார்.

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை..!!

அகட்டி விமான ஓடுபாதையின் விரிவாக்க பணிகளுக்காக ரூ. 1500 கோடியை செலவிட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மட்டும் நிறைவேறிவிட்டால் ஏ.ஆர்.டி -72 ரக விமானங்களை இந்த ஓடுபாதையில் இயக்க முடியும்.

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை..!!

அகட்டி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதால் இந்திய அரசிற்கு அதிக பலன்கள் உள்ளன. லட்சதீவு என்பது மத்திய அரசால் அங்கரீக்கப்பட்ட இந்தியாவின் முக்கிய சுற்றுலா தளம்.

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை..!!

அரேபியக் கடலோரட்தில் 36 தீவுகளுடன் அமைந்திருக்கும் இந்த பகுதியை காண ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்தியர்களை தவிர பல வெளிநாட்டினர் அதிக விரும்பும் சுற்றுலா தளமாகவும் லட்சத்தீவுகள் உள்ளன.

கடலுக்கு நடுவில் இந்தியாவின் முதல் விமான ஓடுபாதை..!!

இந்நிலையில் இதற்கான வருவாயை பெருக்கவே, தற்போது, மத்திய அரசு அகட்டி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்கிறது. இதனால் சுற்றுலாத்துறைக்கான வருவாய் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, January 5, 2018, 13:09 [IST]
English summary
Read in Tamil: India Will Soon Have Its First Runway On a Sea Bridge At Lakshadweep Agatti Airport. Click for Detail.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+