ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் இந்திய மகாராஜாக்களும்

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் அறிமுகமான போது அது அரசர்களுக்கான காராக வலம் வந்தது. இது ஒருபுறமிருந்தாலும், ஒருசில மகாராஜாக்கள் ரோல்ஸ் ராயஸ் நிறுவனத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டினர்.

By Staff

இங்கிலாந்தில் 1905ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், ஒரு பந்தயத்தில் கலந்துகொண்டதன் மூலம் உலகளவில் பிரபலமானது. பிரிட்டன் காலனி ஆதிக்கம் இந்தியாவில் இருந்ததால், 1908ம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவில் அறிமுகமாயின.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

மும்பையில் நடைபெற்ற ஒரு கார் பந்தய போட்டியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் சுலபமாக ஜெய்ததது. 'பியர்ல் ஆஃப் இந்தியா' என்று பெயரிடப்பட்ட அந்த காரின் திறனை பார்த்த குவாலியர் மகாராஜா 2ம் மாதவ்ராவ் சிந்தியா உடனே சொந்தமாக்கிக்கொண்டார்.

இதன்மூலம், இந்தியாவில் முதன்முறையாக ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய பெருமை அவரையே சாரும். அவருக்கு பிறகு பல ராஜாக்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கத்தொடங்கினர்.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

அழகும், கம்பீரமும், வேகமும் நிறைந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர இந்தியாவில் அப்போது இருந்த பணக்கரார்களும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.

 இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இதனால் அரசர்களுடன் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை சொந்தமாக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை, இந்தியாவில் அதிகரிக்க தொடங்கின. இதுக்குறித்து தீவிரமாக யோசித்த மகாராஜாக்கள், கார்களை தங்கள் விருப்பப்படி வடிவமைக்கச் சொல்லி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு ஆடர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

மகாராஜாக்களின் இந்த நடவடிக்கைக்கு பிறகு தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவிற்கும் பிரிக்க முடியாத பந்தம் ஏற்பட்டது. ஒரு சில ராஜாக்களின் ஆர்டர்களை ஏற்றுக்கொண்டு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதே வேளையில், ஒரு சில அரசர்களின் விண்ணப்பங்களை நிராகரித்தன.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இந்த வரிசையில், தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அறிந்த ஜாம் நகர் சமஸ்தானத்தின் மகாராஜா, இந்தியப் பிரிவு ரோல்ஸ் ராய்ஸ் அலுவலகத்திற்கு ஒரு பார்சல் அனுப்பினார். பார்சலை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், பார்சலில் பெண்கள் அணியும் இளச்சிவப்பு நிற செருப்பு இருந்தது, அதனுடன் ஒரு கடிதமும் இணைக்கப்பட்டு இருந்தது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

ஜாம் நகர் சமஸ்தான மகாராஜா கடிதத்தில் அதே செருப்பின் நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும், அதை மகாராணிக்கு பரிசளிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

ஜாம் நகர் சமஸ்தான் மகாராஜாவிற்கு பிறகு ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனத்தின் மீது தனது கோபத்தை வேறு விதமாக காட்டினார் பரோடா சமஸ்தானத்தின் மகாராணி சிம்னா பாய்.

சிம்னா பாய் தனக்கான ரோல்ஸ் ராய்ஸ் காரில் கேபின்கள், குஷன் கொண்ட அரியணை வடிவிலான இருக்கைகள், டிரைவர் இருக்கைக்கும், தன் இருக்கைக்கும் தடுப்பு என ஒரு பெரிய பட்டியலை தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தார். இது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திற்கு பெரிய இடைஞ்சலாக இருந்தது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இந்த சம்பவங்களை எல்லாம் விட உலகளவில் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான புகழை மங்கசெய்த பெருமை ராஜஸ்தானின் ஆல்வார் சமஸ்தானத்தின் மகாராஜா ஜெய்சிங்கையே சாரும். இவரது நடவடிக்கையால் ரோல்ஸ் ராய்ஸ் வியாபாரம் ஒருமுறை படுத்தே விட்டது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

ஒருமுறை மகாராஜா ஜெய்சிங் லண்டனில் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்கு சென்றிருந்தார். அவரை பார்த்த ஷோரூம் ஊழியர் ஒருவர் யாரோ ஏழை என்று நினைத்து வெளியே போக சொல்லிவிட்டார்.

கடும்கோபக்காரரான ஜெய்சிங் அடுத்தமுறை தனது அலங்கார பரிவாரங்களுடன் செல்ல ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

அதையெல்லாம் ஏற்காமல். ஷோரூமில் இருந்த மொத்த 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் வாங்கி, அங்குயிருந்த ஊழியர்கள் அனைவரும் மதிக்கும் படி நடந்தார். இருந்தாலும் மகாராஜா ஜெய்சிங்கின் மனது பொறுக்கவில்லை.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

லண்டனில் வாங்கிய ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் கப்பலில் இந்தியாவிற்கு அனுப்பினார். இந்தியா வந்து இறங்கிய கார்கள், ஆல்வார் நகர அழுக்குகளை அல்ல குப்பை வண்டியாக பயன்படுத்த மகாராஜ ஜெய்சிங் உத்தரவிட்டார். இதை அறிந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் குப்பை அள்ள பயன்படுகிறது என்ற தகவல் உலகம் முழுக்க பரவியது. இதனால் யாராவது ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியிருப்பதாக சொன்னால் மற்றவர்கள் சிரித்தார்கள்.

ரோல்ஸ் ராய்ஸ் தயாரிப்புகளுக்கு மதிப்பு குறைந்து வருவதை அறிந்த நிறுவனம், மகாராஜா ஜெய்சிங்கை சந்தித்து, நடந்த தவறுக்காக மன்னிப்பு கோரியது.

மேலும் ஆறு புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இலவசமாக தருவதாக தெரிவித்தது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

நந்தகான் சமஸ்தானத்தின் மகாராஜா சர்வேஸ்வர தாஸ், தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை வேட்டைக்காக பயன்படுத்தினார். பதுங்கி நிற்கும் விலங்குகளை தேடுவதற்காக அவர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் காரில் சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுயிருந்தன.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

காரின் வெளியே பாதுகாவலர்கள் ஏறிக்கொண்டே வருவதற்கு ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல் அந்த மகாராஜா பயன்படுத்திய மற்றொரு ரோல்ஸ் ராய்ஸ் காரின் கூரையில் வைக்கோலான கூரை வேயப்பட்டு இருக்கும்.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இந்தியாவில் ராஜாக்கள் பயன்படுத்திய கார்களிலேயே அதிக விலையுயர்ந்தது பாட்டியாலா மாகாராஜா பூபிந்தர் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் கார் தான். ராஜா பூபேந்தரின் கார், தங்கம், வெள்ளியால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டவை.

சர்வீஸிற்கு அக்கார் சென்றால் அதை சுற்றி ஆயூதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருப்பார்கள். பாட்டியாலா மகாராஜா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் காரின் எண் பூஜ்யம் (0) என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

மைசூரை ஆண்ட மகாராஜாக்கள் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் எண்ணிக்கை மொத்தம் 35. பாட்டியாலா மகாராஜாவிடம் இருந்த கார்கள் 38. ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருந்த இந்திய ராஜாக்களிலேயே முதலிடம் வகிப்பது ஹைதராபாத் நிஜாம் ஓஸ்மான் அலிகான் . அவரிடம் மொத்தம் 50ற்கும் மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருந்தன.

இந்தியாவில் குப்பை அள்ளிய ரோல்ஸ் ராய்ஸ்!

இவ்வாறு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் கௌரவத்தின் சின்னமாக இந்தியாவில் வலம் வந்தாலும், அதனை வைத்துக் கொண்டு நமது நாட்டு மகாராஜாக்கள் செய்த காரியங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை.

1907 ஆம் ஆண்டிலிருந்து 1947 ஆம் ஆண்டுவரையில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை சுமார் 40,000. அதில் இந்தியாவில் விற்கப்பட்டவை சுமார் 1,000 கார்கள்.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

மாப்பிள்ளை பார்ப்பது போன்று ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தேர்வு செய்வது உங்களுக்கு தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

ஒரு கார் வாங்க வேண்டும் என்று விரும்புகிறோம். விரும்பும் காரை தேர்வு செய்து வைத்துக் கொண்டு, ஷோரூமில் சென்று முன்பதிவு செய்து விடுகிறோம். கார் மாடலை பொறுத்து, சில நாட்களிலோ அல்லது சில வாரங்களில் கையில் டெலிவிரி பெற்று விடுகிறோம்.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் அப்படி இல்லை. ஏனெனில், ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கும், எண்ண ஓட்டத்திற்கும் தக்கவாறு ஒவ்வொரு காரையும் ரோல்ஸ்ராய்ஸ் தயாரித்து கொடுக்கிறது. எனவேதான், ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் பிற கார்களிடத்தில் இருந்து அதிகம் வேறுபடுகிறது. இதனை ஆங்கிலத்தில் 'Bespoke' கார் மாடல்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

பொதுவாக, முன்பதிவு செய்ததிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை டெலிவிரி பெறுவதற்கு குறைந்தது 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை பிடிக்கும். வாடிக்கையாளர் கொடுக்கும் கஸ்டமைஸ் தேர்வுகளை பொறுத்து இந்த காத்திருப்பு காலம் வேறுபடுகிறது.

உதாரணத்திற்கு, ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை இந்தியாவில் டெலிவிரி பெறுவதற்கு 8 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை காத்திருப்பு காலம் தேவைப்படும்.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்குவோருக்கு வண்ணத்தை தேர்வு செய்வதற்கே சில தினங்கள் மண்டை காயும். ஆம். 44,000 வண்ண தேர்வுகளில் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் கிடைக்கின்றன. நீங்கள் மனதில் நினைக்கும் வண்ணத்தை தேர்வு செய்து உங்கள் காரை டெலிவிரி பெற முடியும்.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

காரின் வண்ணம் மட்டுமல்ல, காரின் உட்புறத்தில் அலங்கார வேலைப்பாடுகள், இருக்கைகள், மர வேலைப்பாடுகள், ஆக்சஸெரீகள் என அனைத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரிலேயே செய்து கொடுக்கப்படுகின்றன.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

சில பெரும் பணக்காரர்கள், தங்கம், வைரம், வைடூரியம் போன்ற உயர்வகை ஆபரண பொருட்களை பதித்தும் கார்களை ஆர்டர் செய்கின்றனர். இந்த கார்களை டெலிவிரி கொடுப்பதற்கு கூடுதலாக சில மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் அனைத்துமே மனித ஆற்றலின் மூலமாக உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாகமும் பணியாளர்கள் மூலமாகவே பார்த்து பார்த்து செதுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன. தயாரிப்பில் எந்திரங்களின் பயன்பாடு மிக குறைவு. இங்கிலாந்தில் உள்ள குட்வுட் என்ற இடத்தில்தான் இந்த கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

மேலும், ரோல்ஸ்ராய்ஸ் கார்களுக்கான ஆக்சஸெரீகளும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் சேர்க்கப்படுகின்றன. வாடிக்கையாளர் பெயர் பொறிக்கப்பட்ட இருக்கைகள், இன்டீரியர், திருமண வைபவங்களில் பரிசு கொடுக்கப்படும் கார்களில் மணமக்களின் பெயர்கள் பொறித்து தருவது என உலகின் மிகவும் தனித்துவமான காரை பெறுவதற்கான வாய்ப்பை ரோல்ஸ்ராய்ஸ் வழங்குகிறது.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

இவ்வளவு சிரத்தை எடுத்து காரை தயாரிப்பதற்கு முன்னர் வாடிக்கையாளர்களின் பின்புலத்தையும் ஆராய ரோல்ஸ்ராய்ஸ் தவறுவதில்லை.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாங்குவோர் அதனை வாங்குவதற்கும், பராமரிப்பதற்குமான பண பலம் இருப்பதை முதலில் பார்ப்பது இயல்புதான்.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

இது கார்களை வாங்கும் எல்லா வாடிக்கையாளர்களுக்குமான விஷயம்தான். அதைத்தாண்டி, ஒரு விஷயத்தை ரோல்ஸ்ராய்ஸ் கடைபிடிக்கிறது. எப்படி, தனது மகள் நல்ல இடத்தில் வாழ வேண்டும் என்று பெண்ணை பெற்றோர் விரும்புவதுடன், மாப்பிள்ளை பற்றி தீர விசாரித்து முடிவு எடுக்கிறார்களோ? அது போன்ற ஒரு விஷயத்தை கடைபிடிக்கிறது.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

ஆம். ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்குவதற்கு பணம் இருந்தால் போதும் என்பது ஒரு புறம் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு குற்றப் பின்னணி இருக்கிறதா என்பதை ஆராய்ந்த பிறகே ரோல்ஸ்ராய்ஸ் முடிவு செய்கிறது.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

சில வாடிக்கையாளர்களின் முந்தைய இரண்டு தலைமுறைகள் வரை குற்றப் பின்னணி இருக்கிறதா என்பதை ஆராயவும் அந்த நிறுவனம் தயங்குவதில்லை. தனது பிராண்டு மதிப்பை பாதுகாப்பதற்கான முயற்சியாக இதனை ரோல்ஸ்ராய்ஸ் கடைபிடிக்கிறது.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

குற்றப் பின்னணி உள்ள சிலரும் ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில், சந்தேகம் எழுந்தால் மட்டுமே இந்த நடைமுறை சற்று ஆழமாக பின்பற்றப்படும்.

மாப்பிள்ளை பார்ப்பதுபோன்று வாடிக்கையாளரை தேர்வு செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!

மற்றபடி, பணமிருந்தால் ரோல்ஸ்ராய்ஸ் வாங்க முடியும் என்பதில் எந்த இடைஞ்சலும் இல்லை என்பதை கூறிக் கொண்டு, மற்றொரு சிறப்பு செய்தியில் சந்திப்போம்.

Most Read Articles
English summary
The world's most famous car brand Rolls-Royce is also has a close assoication with ancient indian rulers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X