Just In
- 22 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 44 min ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 2 hrs ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- 5 hrs ago இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
Don't Miss!
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Movies தனுஷ் - ஐஸ்வர்யா டைவர்ஸ் விஷயம்.. சிம்புவ ஏன் இதுல இழுக்குறீங்க.. போட்டுத்தாக்கிய பிரபலம்
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டீசல் எஞ்சின் ரயிலை மின்சார ஆற்றலுக்கு மாற்றி உலகளவில் சாதனை படைத்த இந்திய ரயில்வே..!!
டீசல் எஞ்சின் ரயிலை மின்சார ஆற்றலுக்கு மாற்றி உலகளவில் சாதனை படைத்த இந்திய ரயில்வே..!!
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் டீசல் எஞ்சின் ரயிலை, மின்சார ஆற்றலில் இயங்கும் ரயிலாக உருமாற்றி உலக சாதனை படைத்துள்ளது இந்திய ரயில்வே துறை.
இந்திய அரசின் ரயில் தயாரிப்பு நிறுவனம் (DLW) , உத்தரப்பிரேதச மாநிலம் வாரனாசியில் இயங்கி வருகிறது. இங்கு தான் உலகிலேயே முதன்முறையாக டீசல் எஞ்சின் பெற்ற ரயிலை மின்சார ஆற்றலுக்கு மாற்றிய சாதனை நடந்தேறியுள்ளது.
டிஎல்டபுள்யூ நிறுவனத்தின் இந்த சாதனையை தலைமையேற்று நடத்தியவர் ராஷ்மி கோயல் என்ற பெண். இவர்தான் உத்தரப்பிரேதச ரயில் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் பெண் மேலாளரும் ஆவார்.
டீசலில் இயங்கும் எஞ்சினை மின்சார ஆற்றலுக்கு மாற்றப்பட்ட திட்டம் உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தான் வெற்றியடைந்துள்ளது என்றார் ராஷ்மி கோயல்.
BHEL, CLW, RDSO போன்ற நிறுவனங்களின் மூத்த பொறியாளர்களை வைத்து, திட்டமிடலில் தொடங்கி செயல்வடிவத்துக்கு கொண்டு வந்தது என வெறும் 69 நாட்களில் இந்த சாதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனையை பற்றி பேசிய டிஎல்டபுள்யூ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் நிதின் மெஹ்ரோத்தா, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த புதிய மின்சார ஆற்றல் பெற்ற ரயில் எஞ்சின் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் அவர், முந்தைய டீசல் எஞ்சினைக்காட்டிலும் இது மின்சார ஆற்றலுக்கு மாற்றப்பட்ட பின்னர் 92 சதவீதம் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.
மின்சார ஆற்றலுக்கு மாற்றப்பட்டுள்ள இந்த டீசல் எஞ்சின் முன்னதாக 2600 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வல்லமை பெற்றதாக இருந்தது.
தற்போது இது மின்சார ஆற்றலில் உருமாற்றப்பட்ட பிறகு இது அதிகப்பட்சமாக 5000 பிஎச்பி பவரை வழங்கும் வல்லமையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசல் எஞ்சின் மின்சார ஆற்றலுக்கு உருமாற்றப்பட்ட இந்த சாதனை உலகளவில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த சாதனையை செய்த
பொறியாளர்களுக்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தின் படி உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ’மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாக டிஎல்டபுள்யூ நிறுவன செய்தி தொடர்பாளர் நிதின் மெஹ்ரோத்தா புகழாராம் சூட்டியுள்ளார்.
-
10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
-
பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
-
இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!