Just In
- 49 min ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 3 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Movies அச்சச்சோ.. ரசிகர் மரணம்.. ஓடிப்போய் குடும்பத்துக்கு ஆதரவு சொன்ன ஜெயம் ரவி
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
காஷ்மீர் டூ கன்னியாகுமரி... இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யங்கள்!
இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவின் தலைப்பகுதியாக வர்ணிக்கப்படும் காஷ்மீரில் இருந்து, வால் பகுதியாக வர்ணிக்கப்படும் தென்கோடி முனையில் உள்ள தமிழகத்திலுள்ள கன்னியாகுமரியையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மிக நீளமான நெடுஞ்சாலை
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 44தான் இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலையாக குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே இந்த நெடுஞ்சாலை 7 என்ற எண்ணில் குறிப்பிடப்பட்டு வந்தது. தற்போது மறுசீரமைப்பு முறையில் 44 என்ற எண்ணிற்கு மாற்றப்பட்டுள்ளது.
ரத்த நாளமாக மாறிய என்எச்-44
இந்திய தேசத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் மிக முக்கிய ரத்த நாளம் போன்று இந்த நெடுஞ்சாலை சாலைப் போக்குவரத்தில் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
மொத்த தூரம்
காஷ்மீர் இருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த நெடுஞ்சாலை 3,745 கிமீ தூரம் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே காஷ்மீரில் இருந்து பஞ்சாப் வரை இருந்த என்எச்-1, டெல்லியில் இருந்து ஆக்ரா வரை இருந்த என்எச்2, ஆக்ரா - மும்பை இடையிலான என்எச்-5, பினனர் அங்கிருந்து குவாலியர் வரையிலான என்எச்-3, அங்கிருந்து ஜான்சி வரையில் என்எச்-26 நெடுஞ்சாலையாக பயணிக்கிறது.
நாக்பூர் டு கன்னியாகுமரி
ஜான்சியிலிருந்து நாக்பூர், ஹைதராபாத், பெங்களூர், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரையில் என்எச்-7 என்று பல்வேறு எண்களில் இருந்த தேசிய நெடுஞ்சாலைகளை இணைத்து தேசிய நெடுஞ்சாலை 44 என்று பெயரிடப்பட்டது.
கூட்டு நெடுஞ்சாலை கட்டமைப்பு
இதுதவிர்த்து, குறைந்த தூரத்திற்கு பல நெடுஞ்சாலைகளும், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் துணைச் சாலைகள் இந்த வழித்தடத்தில் இடம்பெறுகிறது. எனவே, இது பல்வேறு நெடுஞ்சாலைகளின் தொகுப்பாகவே இதனை குறிப்பிடலாம்.
இணைக்கப்படும் மாநிலங்கள்
தேசிய நெடுஞ்சாலை 44 மூலமாக இந்தியாவின் 11 மாநிலங்கள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த நெடுஞ்சாலை செல்கிறது.
முக்கிய நகரங்கள்
தேசிய நெடுஞ்சாலை 44 மூலமாக ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், ஜலந்தர், லூதியானா, அம்பாலா, கர்னல், பானிபட், சோனிபட், டெல்லி, மதுரா, ஆக்ரா, குவாலியர், ஜான்சி, நர்சிங்க்பூர், நாக்பூர், அடிலாபாத், ஹைதராபாத், கர்னூல், அனந்த்பூர், பெங்களூர், தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
வர்த்தக முக்கியத்துவம்
காஷ்மீர் டூ கன்னியாகுமரி என்பது ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் தலைமுதல் கால் வரை சென்றடையும் வகையில் குறிப்பிடப்படுகிறது. அரசு திட்டமாக இருந்தாலும், அது தனிமனித சாதனைகளுக்கான திட்டமாக இருந்தாலும், காஷ்மீர் டு கன்னியாகுமரி என்ற வாசகம் இடம்பெறுவது வாடிக்கை. அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேசத்தின் தலைமுதல் கால் வரை இணைப்பதில் இந்த நெடுஞ்சாலை மிக முக்கியமானதாக உள்ளது. இந்தியாவின் அதிக வர்த்தகம் சார்ந்த போக்குவரத்தில் இந்த சாலை மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இந்தியாவின் முதுகெலும்பு சாலை
வர்த்தகத்திற்கும், சுற்றுலா மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்ட தூர சாதனைகளுக்கும் இந்த நெடுஞ்சாலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் பல்வேறு சிறந்த பொறியியல் கட்டமைப்புத் திறனை பரைசாற்றும் விஷயங்களும் உள்ளன. பல்வேறு தட்டவெப்பம், கலாச்சாரத்தை கடந்து இந்தியாவின் முதுகெலும்பாக இந்த சாலை இருந்து வருகிறது.
குறிப்பு: மாதிரி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.