விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களையும், அதன் தொழில்நுட்ப சவால்களையும் இந்த செய்தியில் காணலாம்.
செயற்கை தீவு போன்ற மிக பிரம்மாண்டமான வடிவத்தில் இருக்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வைத்திருக்கும் நாடுகள் ராணுவ பலத்தில் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளாக கருதப்படுகின்றன.
தரைப்படை, விமானப்படையை விட ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்பிற்கும் இப்போது விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வைத்திருக்கும் நாடுகள் உலகின் எந்த மூலையையும் மிக அருகாமையில் சென்று தாக்கும் வல்லமையை பெற்றிருப்பதே இதற்கு காரணம்.

கனவிலும் நினைத்து பார்க்க முடியாத பல தொழில்நுட்ப சவால்களையும், அதிக அபாயங்களையும் கொண்டவை விமானம் தாங்கி போர்க்கப்பல்கள். மிதக்கும் ராணுவ தளமாக பயன்படுத்தக்கூடிய விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பற்றிய சுவாரஸ்யங்கள், அதில் இருக்கும் பல சவால்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் வடிவத்தில் மிகவும் பிரம்மாண்டமானவை என்பது தெரிந்ததே. பல அடுக்குமாடி குடியிருப்புகளை ஒன்று சேர்த்தது போன்ற உருவத்துடன் வலம் வரும் இந்த கப்பல்களை இயக்குவதும், பாதுகாப்பதும் மிகப்பெரிய காரியம்.

தரை இலக்கு, வான் இலக்கு, கடல் இலக்கு என மூன்றையும் தாக்கும் வல்லமை பொருந்தியது விமானம் தாங்கி போர்க்கப்பல்கள். மேலும், எதிரி நாடுகளுக்கு அருகாமையில் கொண்டு சென்று தாக்குதல் நடத்த முடியும்.

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலை இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் தயாரித்தது. ஆனால், அது முதல் பயணத்திலேயே கடலில் மூழ்கியது. உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் யுஎஸ்எஸ் தியோடோர் ரூஸ்வெல்ட். இந்த கப்பல் 1,04,600 டன் எடை கொண்டது.

மேலும், அமெரிக்காவின் நிமிட்ஸ் கிளாஸ் கப்பல் 1,092 அடி நீளம் கொண்டது. இந்த போர்க்கப்பலில் 90 நிலையான இறக்கை அமைப்பை கொண்ட போர் விமானங்களை நிறுத்த முடியும். உலகின் 70 சதவீத நாடுகளின் விமானப்படையின் பலத்தை ஒப்பிடும்போது, இந்த ஒரு கப்பலில் இருக்கும் விமானப் படையின் பலம் மிக அதிகமாம்.

மிதக்கும் ராணுவ தளமாக செயல்படும் விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்குவதற்கான எரிபொருள் செலவீனம் மிக அதிகம். இதனால், அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த கப்பல்களுக்கு 20 ஆண்டுகள் வரை எரிபொருள் நிரப்ப தேவையில்லை.

அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்குவதற்கு நாள் ஒன்றுக்கு 7 மில்லியன் டாலர்கள் செலவு பிடிக்கிறது. விமானம் தாங்கி போர்க்கப்பல்களை வாங்குவதற்கான செலவைவிட அதனை பராமரிப்பதற்கும், இயக்குவதற்கான செலவு மிக அதிகம். எனவேதான் உலகின் சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளிடம் கூட அதிக விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் இல்லை.

விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயிற்சிக்காகவும், போர் சமயங்களிலும் விமானங்கள் செலுத்தப்படுவதும், தரை இறக்குவதுமாக மிகவும் பரபரப்பாக இருக்கும். விமானங்களால் மட்டுமின்றி, அதிக எரிபொருள், தீப்பற்றும் வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதியாகவும் இருக்கிறது. எனவே, மிகவும் அபாயகரமான பணிபுரியும் பகுதிகளில் ஒன்றாகவே இது கருதப்படுகிறது.

விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் அதிகபட்சமாக 500 மீட்டர் அளவுக்குத்தான் ஓடுபாதை இருக்கும். எனவே, விமானங்கள் கிளம்புவதும், தரை இறக்குவதும் மிகவும் சவால் நிறைந்த ஒன்று. விமானங்கள் மேலே எழும்புவதற்கு தேவையான வேகத்தை எட்டுவதற்காகவே, விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் கேட்டபுல்ட் என்ற இழுவை அமைப்பு இருக்கிறது.

விமானத்தின் எஞ்சின் சக்தியும், இந்த கேட்டபுலட் அமைப்பின் இழுவை வேகம் காரணமாக, போர் விமானம் வெறும் 2 வினாடிகளில் 0- 300 கிமீ வேகத்தை போர் விமானங்கள் எட்டிவிடும். அப்போது, முகத்தில் ஓங்கி குத்துவிடுவது போன்ற உணர்வு ஏற்படும் என பைலட்டுகள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று, தரை இறக்குவதும் மிகவும் கடினம். மோசமான சீதோஷ்ண நிலைகளின்போது, நில அதிர்வு இருப்பது போன்று கப்பலின் ஓடுபாதையில் அதிக அதிர்வுகளும், அசைவுகளும் இருக்கும். அதனை துல்லியமாக கணித்து தரை இறக்க வேண்டும்.

விமானம் தரை இறங்கும்போது கப்பலின் மேல் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும் 4 தடுப்பு கம்பி வடங்களில் ஒன்றில், விமானத்தின் பின்புறம் இருக்கும் கொக்கியை மாட்டிவிட வேண்டும் பொறுப்பு பைலட்டுக்கு உள்ளது. இந்த கொக்கியில் மாட்டும்போது மணிக்கு 250 கிமீ வேகத்தில் தரை இறங்கும் விமானம் வெறும் 2 நொடிகளில் நின்றுவிடும். அதுவும் 315 அடி தூரத்திற்குள் நின்றுவிடும்.

குறிப்பாக, இரவு நேரங்களில் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் போர் விமானங்களை தரை இறக்குவது மிகவும் சவாலான பணி என பைலட்டுகள் தெரிவிக்கின்றனர். பல அனுபவம் வாய்ந்த பைலட்டுகள் கூட இது திகிலானதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளிலிருந்து விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் தற்காத்து கொள்ளும் அமைப்பு விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் உண்டு. அதேபோன்று, விமானம் மட்டுமின்றி, ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்துவதற்கான வசதிகளும் உண்டு.

பல சவால்கள் இருந்தாலும், விமானம் தாங்கி போர்க்கப்பல் என்பது நாட்டின் பாதுகாப்பை பரைசாற்றும் விஷயமாக இருப்பதால், தற்போது சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த போர்க்கப்பல்களை கட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்தியாவும் மிக நீண்ட காலமாக விமானம் தாங்கி போர்க்கப்பல்களை இயக்கி வருகிறது. 1961ம் ஆண்டு ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலையும், 1987ல் ஐஎன்எஸ் விராத் ஆகிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தியது. தற்போது இரண்டு கப்பல்களும் சேவையிலிருந்து விலக்கப்பட்டுவிட்டன.

தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பல் சேவையில் உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற புதிய விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதுதவிர்த்து, ஐஎன்எஸ் விஷால் என்ற மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலையும் 2025ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்தியா திட்டமிட்டுள்ளது.
வடகொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அமெரிக்க அதிபர் தப்புவதற்கான ரகசிய விமானம் இதுதான்!!

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், போர் தொடுக்கும் வாய்ப்புகள் குறித்தும் பரிசீலித்து வருகிறது. ஆனால், உலகிலேயே மிக அபாயகரமான நாடாக பார்க்கப்படும் வடகொரியா மீது கை வைக்க அமெரிக்கா யோசித்து வருவதும் உண்மையே.

தனது நாட்டாமை குணத்தை நிலைநாட்ட போர் தொடுக்க வேண்டிய நிலைக்கும் அமெரிக்கா தள்ளப்படலாம். இந்த சூழலில் அமெரிக்காவில் அணு ஆயுத தாக்குதல் என்ற வழியை வடகொரியா கையில் எடுக்கும் அபாயம் இருக்கிறது. அவ்வாறு, அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில், அமெரிக்க அதிபரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறது.
Picture credit: ABPIC/ @Kevin colbran

அவ்வாறான சூழலில் அமெரிக்க அதிபரை மிக பத்திரமாக அழைத்துச் செல்வதற்கு வழக்கமான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை அமெரிக்க விமானப்படை பயன்படுத்தாது. ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு பதிலாக, அதிபரை அழைத்துச் செல்ல சிறிய ரக ரகசிய விமானங்களை அமெரிக்க புலனாய்வுத் துறை தயார் நிலையில் வைத்திருக்கிறது.
Picture credit: ABPIC/ @Russ Smith

அணு ஆயுத தாக்குதலின்போது அமெரிக்க அதிபரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு மூன்று கல்ஃப்ஸ்ட்ரீம் சி20சி விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.
Picture credit: ABPIC/ @Erik Frikke

வழக்கமாக அமெரிக்க அதிபர் வெளிநாடு அல்லது வெளியிடங்களுக்கு ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செல்லும்போது, இந்த விமானங்கள் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு முன்னதாக செல்லும். ஆனால், அவசர சமயங்களில் இந்த விமானங்களே அமெரிக்க அதிபரை காப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தப்படும்.
Picture credit: ABPIC/ @Erik Frikke

இந்த விமானங்களில் 12 முதல் 16 பேர் வரை பயணிக்க முடியும். அமெரிக்க அதிபர் மற்றும் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் இந்த விமானத்தில் செல்ல முடியும்.
Picture credit: ABPIC/ @Erik Frikke

கடந்த 1985ம் ஆண்டு இந்த விமானங்கள் வாங்கப்பட்டன. வாங்கப்பட்ட பல தசாப்தங்களை கடந்துவிட்டாலும், இந்த விமானங்களை அமெரிக்க வான்படை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பல முக்கிய காரணங்கள் உண்டு.
Picture credit: ABPIC/ @charlie Stewart

இந்த விமானத்தில் மிகவும் விசேஷ தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த விமானங்களின் தகவல் தொடர்பு வசதியை இடைமறித்து கேட்க முடியாத அளவுக்கு மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்தவை.

இந்த விமானங்களில் பெரிய அளவிலான பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்படவில்லை. அதேநேரத்தில், சுட்டு வீழ்த்த முடியாத அளவுக்கு விசேஷ பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

பழைய டெக்னாலஜியில் இயங்கும் இந்த விமானங்களை அமெரிக்க விமானப்படை பயன்படுத்துவதில் மற்றொரு ரகசியமும் இருக்கிறது. இந்த விமானத்தில் பழைய தொழில்நுட்ப முறையிலான கட்டுப்பாட்டு சாதனங்கள் உள்ளன.
Picture credit: Flickr/ Fasil Avgeek

இதனால், இந்த விமானத்தை குறித்து வைத்து அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்டாலும் கூட, அந்த ஏவுகணை இந்த விமானத்தின் சாதனங்களின் மின்காந்த அலைகளை கண்டறிந்து தாக்குதல் நடத்த முடியாதாம்.
Picture credit: Flickr/ TCav

பழைய விமானங்களாக இருந்தாலும், இந்த விமானங்கள் மிகச் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இவை தொடர்ந்து சிறப்பான முறையில் இயங்குகின்றன. இந்த விமானங்களில் ரோல்ஸ்ராய்ஸ் டே டர்போஃபேன் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
Picture credit: Flickr/ Fasil Avgeek

கல்ஃப்ஸ்ட்ரீம் சி20சிஎஸ் விமானங்கள் சராசரியாக மணிக்கு 818 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது. ஒருமுறை முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 6,760 கிமீ தூரம் வரை பறந்து செல்லும். இந்த விமான மாடல்கள் 1979 முதல் 1986 வரை உற்பத்தியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








