Just In
- 49 min ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 2 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 7 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 7 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Movies அச்சச்சோ முதலில் அஜித் இல்லை சூர்யாதான்ங்க.. ஜோதிகா சொன்ன பல வருட சீக்ரெட்
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஜப்பான் நிறுவனத்தின் புதிய பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனை... குறிப்பிடத்தக்க விஷயம் என்ன தெரியுமா?
ஜப்பான் நிறுவனத்தின் பறக்கும் கார் முதல்முறையாக பறக்கவிடப்பட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. உலக அளவில் ஏராளமான பறக்கும் கார் திட்டங்கள் நடந்து வந்தாலும், இந்த பறக்கும் கார் சோதனையில் குறிப்பிடத்தக்க சாதனையாக ஒன்று தெரிவிக்கப்படுகிறது. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.
நகர்ப்புறங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றுத் தீர்வாக பறக்கும் கார்கள் கருதப்படுகின்றன. தற்கால போக்குவரத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, பறக்கும் கார்களை உருவாக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
மேலை நாடுகளில் சில நிறுவனங்கள் பறக்கும் கார் திட்டத்தை இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், தற்போது ஜப்பான் நாட்டை சேர்ந்த ஸ்கைட்ரைவ் என்ற நிறுவனம் பறக்கும் கார் உருவாக்கத் திட்டத்தில் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.
ஸ்கைட்ரைவ் நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய பறக்கும் கார் முதல்முறையாக பறக்கவிடப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட சோதனை தளத்தில், ஸ்கைட்ரைவ் நிறுவனத்தின் பறக்கும் கார் தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை மேல் எழும்பி 4 நிமிடங்கள் வரை பறந்தது.
மேலும், பார்ப்பதற்கு சினிமாவில் வரும் வித்தியாசமான பைக் போன்று தோற்றமளிக்கும் இந்த பறக்கும் காரில் மனிதர் ஒருவர் அமர்ந்து பறந்ததும் குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.
வரும் 2023ம் ஆண்டு இந்த புதிய பறக்கும் கார் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில், பாதுகாப்பு விஷயங்கள் தொடர்ந்து சவாலாக இருப்பதாக ஸ்கைட்ரைவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்கைட்ரைவ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டோமோஹிரோ புகுஸவா கூறுகையில்," உலக அளவில் 100க்கும் மேற்பட்ட பறக்கும் கார் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், மனிதர் ஒருவர் அமர்ந்து பயணித்த ஒரே பறக்கும் கார் மாடலாக எங்களுடையதை கருதலாம்.
அதிகபட்சமாக 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே பறக்கும் திறனை கொண்டுள்ளது. ஆனால், இதனை 30 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டதாக விரைவில் மேம்படுத்தப்படும். பலர் இந்த பறக்கும் காரில் பறந்துவிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர். சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
இந்த பறக்கும் கார் இருந்த இடத்தில் இருந்தே அப்படியே மேல் எழும்புவதற்கும், அதேபோன்றே தரை இறங்குவதற்கான தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. ஓடுபாதை தேவையில்லை என்பது இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் பெரும் தொழிலதிபர்களுக்கு இது சிறந்ததாக அமையும்.